Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, June 18, 2025

மன்னவரே 38


 

             அத்தியாயம் 38


  மருத்துவமனை வளாகத்தில் ஐசியூவின் முன்பு, வேந்தன் மற்றும் மதுவின் மொத்த குடும்பமும், லட்சுமியம்மா கண் முழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.


    அவர்களுக்கு சற்று தள்ளி, கண்களில் கண்ணீர் பெருக, ஐ சி யூ வின் கதவுகளை வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தால் மது. அவளின் இந்த நிலையை பார்த்து, மனம் நொந்தவாரே வாசல் பக்கம் ஒரு பார்வையும் இவளின் மீது ஒரு பார்வையுமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் வேந்தன்.


  இவளை இந்நிலையில் காணப் பொறுக்காமல், மதுவின் தோழியான வினுவிற்கு தொலைபேசியில் அழைத்து, இந்த ஹாஸ்பிடலில் முகவரியைச் சொல்லி, உடனே வந்து பார்க்குமாறு கூறியிருந்தான். அவளுக்காக தான் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 


    இப்போதைய சூழ்நிலையில் தன்னைவிட, அவளது தோழியின் துணையே அவளுக்கு பக்கபலமாக இருக்கும் என்று உணர்ந்து, வினுவை அழைத்திருந்தான்.


      லட்சுமி அம்மாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்து அனைவரையும் சத்தம் போட தொடங்கினார்.


  "நான் தான் உங்ககிட்ட சொல்லி இருந்தேனே, அவங்களுக்கு மேல மேல பிரஷரை ஏத்தக்கூடாதுன்னு, திரும்பவும் ஏன் இப்படி பேசி பேசி அவங்க உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்துறீங்க. இப்ப அவங்களை ஐ சி யு குள்ள கண்டிப்பா அட்மிட் பண்ணியே ஆகணும்."


  லட்சுமி அம்மா ஐ சி யு வில் அட்மிட் செய்யப்பட்டார் பல உபகரணங்களின் உதவியால் சீராக மூச்சு விட ஆரம்பித்தார்.


    நடந்ததை நினைத்துப் பார்த்த மதுவிற்கு தன்நிலையை எண்ணி, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.


    பிறருக்கு நன்மை செய்ய வேண்டி ஒரு பொய்யை சொல்ல போக, அது தனக்கே இப்படி வினையாக முடியும் என்று, அவள் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.


  அதைவிட தனது குடும்பம், தன் மீது வைத்த நம்பிக்கை இவ்வளவுதானா என்று என்னும்போது, அவளுக்கு மனம் கனத்துப் போனது.


  தனது வாய்மொழியாகவே கேட்டாலுமே, இவர்கள் தங்கள் வீட்டுப் பெண் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள்  என்று கூற வேண்டாமா? இது தான் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையா? என்று அவள் மனது அவளிடமே கேள்வி கேட்டது.


    அது மட்டுமா தன் உடன் பிறந்தோனும் தன்னை பெற்றெடுத்தவருமான தந்தையுமே, தன்னிடம் இன்னும் இது பற்றி, ஒரு வார்த்தை கேட்கவில்லையே, அவர்களும் என்னை நம்பவில்லையோ? என்று மனம் வெதும்பினால்.


    அமுதனால் இன்னும் நம்ப முடியவில்லை கோயிலில் பேசியது தனது தங்கைதானா என்று. அதுவும் தங்களுக்கு தெரியாமல் அவள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் என்று அவனால் நம்பவே முடியவில்லை.


  பூவுப்பாட்டிக்கு வடிவுப்பாட்டி ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, தளர்ந்து போய் அமர்ந்திருந்த, தனது தந்தையை ஆறுதல் படுத்த அவரோடு அமர்ந்திருந்தான் அமுதன். இதனால் தன் தங்கையிடம் சென்று பேச அவனால் முடியவில்லை.


  ஒருவேளை தனது தங்கைக்கும் வேந்தனுக்கும் முன்பே அறிமுகம் இருக்குமோ, என்ற சந்தேகமும் அவனுக்கு தோன்றாமல் இல்லை.


    அவசரமாக மருத்துவமனை வளாகத்தில் நுழைந்த வினு, நேராக மதுவிடம் சென்று அமர்ந்தாள்.


    "என்னாச்சு மது?"


    "யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். அது தெரிஞ்சதால அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு."


  "கண்டிப்பா இருக்காது, எங்களுக்கு தெரியாம இதை நீ செஞ்சிருக்கவே மாட்டே, ஏதாவது ஒரு சிச்சுவேஷனா இருந்திருக்கலாம். அதனால நீ பொய் சொல்லி இருக்கலாம், அது தெரியாம அம்மா இதை உண்மைனு நினைச்சுட்டாங்களா? சரி விடு அம்மா திரும்ப வந்ததும் நம்ம சொல்லி புரிய வச்சுக்கலாம்."


  ஐ சி யூ வின் கதவுகளை வெறித்துக் கொண்டிருந்த மதுவின் பார்வை, வினுவிடம் திரும்பியது. அவளை கட்டிக்கொண்டு கதறி அழ  தொடங்கினாள்.


  வினு பேசியதை கேட்ட கனியமுதனுக்கு, தான் ஏன் அவ்வாறு நினைக்கவில்லை என்று, மனது உறுத்தியது.


    "அடடா மது குட்டி, எதுக்காக இப்போ டேமை இப்படி ஓபன் பண்ணிட்டு இருக்க, லட்சும்மா ரொம்ப தான் உன்னை திட்டிட்டாங்களோ, விடு அவங்க வந்ததும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து, அவங்களை ஒரு கை பார்த்துக்கலாம் சரியா அழக்கூடாது."


  தோழியை தனது சேய்யாக்கி தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் வினு. அவள் மன பாரம் போக்க, வேறு கதைகளை பேசி அவளை திசைதிருப்பத் தொடங்கினாள்.


வினுவின் வரவால் தனது மனதை நிலைப்படுத்திக் கொண்ட மதுவிற்கு, அப்போதுதான் நினைவு வந்தது.


  "ஆமா வினு நான் உனக்கு கால் பண்ணவே இல்லையே? உனக்கு எப்படி தெரியும், நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்னு? அண்ணா கூப்பிட்டு இருந்தானா?"


    தன் அண்ணன் தனக்காக வினுவை வரவழைத்து இருப்பானோ என்று ஆர்வத்தோடு மது கேட்க,


"இல்ல மது, வேந்தன் சார் தான் எனக்கு கூப்பிட்டு இருந்தாரு. உடனே இங்க என்னை வர சொன்னாரு."


  அப்போதுதான் மதுவிற்கு வேந்தனின் குடும்பமும் இங்கே இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே திரும்பி வேந்தனை தேடியவள், தனக்கு சற்று தள்ளி நண்பர்கள் புடை சூழ நின்று கொண்டு, தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் வேந்தனை கண்டால்.


    அவனைக் கண்டவுடன் மறுபடியும் நடந்தது அனைத்தும் நினைவிற்கு வர, கண்களில் மீண்டும் கண்ணீர் சூழ்ந்தது. தனது உதட்டை கடித்த அழுகையை அடக்கி கொண்டவளை வேந்தன், சூழ்நிலை அறிந்து கண்களாலே அவளுக்கு ஆறுதல் கூற தொடங்கினான்.


    வேந்தன் அவனது வலது கையை நெஞ்சில் வைத்து, கண்களை மூடி திறந்து அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக விழி வழியே அவளுக்கு செய்தி அனுப்ப, புரிந்து கொண்டு சரியென்று அவளும் தலையை அசைத்தால்.


  இடது கையால் இதழ்களுக்கு நேராய் வைத்து ஸ்மைலி என்று சைகை அனுப்ப, அவளும் மென்னகை புரிந்தால்.


  இவர்களின் விழி மொழியினை அங்குள்ளவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர், ஆனால் அனைவரின் மனதிலும் தோன்றியது ஒன்றுதான், ஒருவேளை லட்சுமி அம்மா கூறியது உண்மை தானோ என்று.


    இவ்வளவு நேரமும் ஒருவேளை லட்சுமி அம்மா தவறாக புரிந்து கொண்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே தெரிந்தது, இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல்.


  அப்போதே சுந்தரமூர்த்தி ஐயா ஒரு முடிவு எடுத்துவிட்டார். அதை பற்றி மதுவின் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள, அவரை நோக்கி சென்றார்.


  வினு உள்ளே நுழையும் போதுதான் வேந்தனின் நண்பர்களும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.


    விஷயம் அறிந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேந்தனை முறைத்துக் கொண்டே அவனை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.


    ஆனால் வேந்தன் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. அவனது பார்வை மொத்தமும் மதுவின் மீது மட்டுமே இருந்தது.

Tuesday, June 17, 2025

மன்னவரே 37


 

             அத்தியாயம் 37


    குருஜியின் ஆசிரமத்தில் விஜயன், தன்னைச் சுற்றி, தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த, குருஜியின் சீடர்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.


    "இப்படி மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படி அந்த பொண்ணை தொலைச்சிட்டு வந்து நிக்கிறீங்களே, இதுதான் நீங்க பொறுப்பா இருக்கற லட்சணமா?"


    "அந்தப் பொண்ணு பத்திரமா பாத்துக்கிறதை தவிர, உங்களுக்கு என்னடா வேலை? அப்படி என்ன வேலையை பார்த்து கிழிச்சீங்க?"


    "பொறு விஜயா சற்று அமைதி கொள்."


  "எப்படி குருஜி அமைதியா இருக்கிறது. நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள். அந்த பொண்ணு நம்மகிட்ட இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமுன்னு உங்களுக்கே தெரியும். இவனுங்க இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறானுங்களே இனி எப்படி என் பொண்ணு நினைச்சதை சாதிப்பா.


  இதுக்காக நம்ம எவ்வளவு வேலை பார்த்திருக்கோம், கோயில்ல இருக்கிற சாமியை மந்திர கட்டால அடக்கி வைச்சிருக்கோம்.


  அந்த காட்டு பிச்சியை, அந்த காட்டை விட்டு எங்கேயும் வெளியே போக முடியாதபடி, மந்திரத்தால கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.


    அது மட்டுமா அந்த கோயில்ல சாமி ஆடுற பூசாரியை, குருந்த மரத்தடியில் இருந்து மண் எடுக்கணும்னு சொல்ல சொல்லி, மண்ணு எடுக்கிறது மூலமா அந்த காட்டு பிச்சியோட மிச்சம் இருக்கிற சக்தியை எல்லாம் முடக்கப் போறோம்.


        இத்தனையும் எதுக்காக, என் பொண்ணோட ஆசைக்காக தான், ஆனா அதுவே நடக்காம போயிடும் போல இருக்கே."


      "விஜயா நான் சொல்வதை முதலில் பொறுமையாக கேள். ஏற்கனவே அந்த பெண் நிரஞ்சனாவின் உடலில், உன் பெண்ணின் ஆன்மா ஒப்புவதற்கான வழிமுறைகளை செய்து விட்டேன்.


  இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி, நாளை உன் மகள் அந்த மோகினி பள்ளத்தில் இருந்து வெளிப்படும் போது, இந்த நிரஞ்சனா அந்த ஊரில் இருக்க வேண்டும்.


  இந்தப் பெண் நிரஞ்சனாவை, உன் மகளுக்காகவே உருவேற்றி வந்துள்ளோம். அவளைத் தவிர வேற யார் உடலிலும் உன் மகளின் ஆன்மாவால் உட்புக முடியாது.


  எனது கணிப்பு சரி என்றால் நம்மிடமிருந்து தப்பித்த அந்த பெண், நிச்சயமாக அவளது ஊரிற்குதான் சென்று கொண்டிருப்பாள்.


  அதனால் கவலை ஏதும் இல்லை, நீ அமைதி கொள் விஜயா, நிச்சயம் வெற்றி நமதே."


    லட்சுமியம்மாவுக்கு மதுவை வேந்தனுடன் கண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கூறிக் கொண்டிருக்க, அவர் முற்றிலுமாக உடைந்து போனார்.


    நிரஞ்சனாவை பற்றி பூவுப்பாட்டி காலையில் தான் அவரிடம் கூறியிருந்தார். ஏற்கனவே தன்னால், தனது புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீராமல் அப்படியே இருக்க, மீண்டும் தான் பெற்ற மகளால், புதிதாக உருவாகி இருக்கும் இந்த பிரச்சினையை எண்ணி மனம் துவண்டார். 


    சரி விதி ஆடும் ஆட்டத்தில், யாருக்கு யார் என்பது இறைவன் போட்ட முடிச்சு, அதை யாரால் மாற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் மேலும் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றார்.


  அதுவும் அவள் தாலி மற்றும் குங்குமத்தை பற்றி கூறியது, தனது வளர்ப்பு பொய்த்து விட்டதோ என்று அந்த தாய் மனது நொறுங்கிப் போனது..


  அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு கோவிலில் சரிந்தவரை, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 


    டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு இது அவருக்கு மைல்டு அட்டாக் என்று கூறினர்.


    அவரின் மன அழுத்தமும், எதிர்பாராத அதிர்ச்சியும் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறினர். மீண்டும் இது போன்று அதிர்ச்சியான தகவல்கள் எதுவும் அவரை  நெருங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.


  குடும்பத்தினர் அனைவரும் லக்ஷ்மியம்மாவை காண உள்ளே செல்ல, மெதுவாக கண்விழித்தவர் தன் மகளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு, கத்த தொடங்கினார்.


  "அவள வெளிய போக சொல்லுங்கத்தே. நான் யாரையும் இப்ப பார்க்க தயாரா இல்லை, என்னோட வளர்ப்பு சரியா இல்ல போல, அதனாலதான் பெத்தவங்க கிட்ட கூட சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்க அவ முடிவு பண்ணிட்டா.


    அது மட்டுமா, எந்த நாட்டுல பிறந்துட்டு தாலியும் நெற்றி நிறைய வைக்கிற குங்குமமும் மதிப்பில்லைன்னு சொல்லிட்டா? எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்ல, வெளியே போக சொல்லுங்க."


    "அம்மா நான் சொல்றதை கேளு,  அவர்கிட்ட சும்மா விளையாட்டுக்காக தான் சொல்லிட்டு இருந்தேன்."


    "எது விளையாட்டு, தாலி உனக்கு விளையாடும் விஷயமா? குங்குமமும் மாங்கல்யமும் எவ்வளவு புனிதமானதுன்னு தெரியுமா?  இந்த நாட்டுல பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் அது எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியுமா?"


"அம்மா நான் சொல்றத கேளு."


  "இனி கேட்க என்ன இருக்கு, அதுதான் நீ சொன்னது எல்லாத்தையுமே என் காதால கேட்டுட்டேனே."


    "ஐயோ அம்மா..., நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளு, நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத. சில விஷயத்துக்காக நான் பொய் சொன்னேன்."


   வடிவுப்பாட்டி தான் மதுவிற்கு ஆதரவாக பேசினார்,


  "லட்சுமி மொதல்ல புள்ள சொல்றத, கொஞ்சம் காது கொடுத்து கேளு. அதுக்கு முன்னவே நம்ம புள்ளைய நாமலே சந்தேகப்படலாமா?"


  "இதுக்கு மேல என்ன கேட்கிறது. கண்ணால பாத்தாச்சு, அவ வாய்மொழியாகவே கேட்க வேண்டிய அளவுக்கு கேட்டாச்சு. இதுக்கு மேலயும் அவ என்ன சொல்லி, நான் என்னத்த கேட்க. இன்னைக்கு காலையில அவ ரெஜிஸ்டர் ஆபீஸ் போனது உண்மையா, பொய்யான்னு மட்டும் என் மேல சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்க"


  "நான் போனது உண்மைதான். ஆனா…"


    "போதும் இதுக்கு மேல நீ சொல்ற எதையும் நான் கேட்க வேண்டாம். அத்தை நான் தான் சொல்றனே அவள வெளியே போக சொல்லுங்க. இங்கயே இருந்து என்னை உயிரோட கொல்ல வேண்டாமுன்னு சொல்லுங்க.


  அவள பெத்ததுக்கு எனக்காக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய சொல்லுங்க, என்னோட கடைசி ஆசையும் இதுதான்.


  இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் மாங்கல்யம் என்கிறது புனிதமானது. அதை கட்டிக்காம குடும்பம் நடத்துவது ஒரு தப்பான முறையா போய்விடும். தயவு செய்து அவர் கையால, இவ கழுத்துல மாங்கல்யம் வாங்கிட்டு, என் பொணத்தை வந்து பார்க்க சொல்லுங்க.


  அப்படி இல்லைனா, அவ என்னை பாக்கவே வரவேண்டாம் வெளிய போக சொல்லுங்க."


    பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு மூச்சு விட சிரமமாக இருக்க, மூச்சுக்களை பெரிது பெரிதாக இழுத்து விட ஆரம்பித்தார்.


  உடனே டாக்டரும் நர்ஸ்களும் அழைக்கப்பட்டு, அவருக்கு மறுபடியும் சிகிச்சை ஆரம்பமானது.

Monday, June 16, 2025

மன்னவரே 36


 

              அத்தியாயம் 36


      "எவ்வளவு ஜென்மம் எடுத்து இவ தடம் புரண்டாலும், இவளை தாங்கி பிடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு இல்லையா? இப்பவாச்சும் இவ உன் கைய விட்டு போகாம பாத்துக்கோ. "


    ராகுல் அவரை புரியாமல் பார்க்க, அவர் புன்னகை சிந்தினார்.

   

"தவறி விழப் போறா பாருப்பா, கெட்டியா பிடிச்சுக்கோ"


      "நல்லா தான் பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க, என்ன ஆச்சுன்னு தெரியலம்மா."

 

      "முதல்ல அவள தூக்கிட்டு கோவிலுக்குள்ள வாப்பா. அந்த மரத்தடியில் இருக்கிற பைப்கிட்ட அவ கையையும் காலையும் நல்லா அழுத்தி கழுவு. அவள பிடிச்சது நீரோட போகட்டும்."


    அவர் சொன்னது போலவே செய்தவன், பிறகு நிரஞ்சனாவை கைகளில் தூக்கிக் கொண்டு கோவிலினுள் நுழைந்தான்.


  "இப்படி மண்டபத்துல அவள படுக்க வைப்பா, நான் இதோ வரேன்."


    ராகுலும் அவர் கூறியபடியே கோவில் மண்டபத்தில் அவளைப் படுக்க வைத்தான். அவனுக்கு அவளை எங்கோ பார்த்தது போன்று நினைவு, தன் நினைவடக்குகளில் எவ்வளவு தேடியும், எவ்வளவு யோசித்தும் விடைதான் கிடைக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் அருகே அமர்ந்து விட்டான்.


      "அவ தலையை எடுத்து உன் மடிமேல வச்சு, அந்த அம்மனை வேண்டிக்கிட்டு, இந்த தீர்த்தத்தை அவளுக்கு புகட்டுப்பா."


  அவனும் அவர் கூறியது போலவே நிரஞ்சனாவிற்கு தீர்த்தத்தை புகட்டினான்.


    அவர் கண்களை மூடிக் வேண்டி கொண்டு, தன் கையில் இருந்த நீரை அவள் முகத்தினில் தெளிக்க, நிரஞ்சனாவின் இமைகளுக்குள் இருந்த கருவிழிகள் அசயத் தொடங்கியது.


  பின்பு சிறிது நேரத்திலேயே மெதுவாக நிரஞ்சனா தன் கண்களை திறந்தால். அவள் கண் திறந்ததும் முதலில் பார்த்தது, தன் தலையை மடிமீது தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்த ராகுலைத்தான்.


    பதறி எழ முயன்றவள், தன் உடலின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், மீண்டும் அவன் மடியையே தஞ்சம் அடைந்தால்.


    "என்னம்மா உடம்புல தெம்பு வந்ததும், உதறிட்டு போலாம்னு பாத்தியோ. எல்லா நேரமும் தாங்கி பிடிக்க தம்பி இருக்குமுன்னு தைரியமா? எப்பவும் அவசரம் கூடாது, நிதானமாவே துணையோடு எழுந்து நில்லும்மா"


  "முதல்ல இந்த சேலையை வாங்கிக்கோம்மா, அதோ அந்த மறைவுக்கு பின்னாடி போய் மாத்திக்கிட்டு வா போ."


  அவள் புடவையை வாங்கிக் கொண்டு செல்ல, ராகுல் தனது அலைபேசியிலிருந்து ஓனரான வாசுதேவனுக்கு அழைத்தான்.


    அவரிடம் சுருக்கமாக நடந்தவைகளை கூறினான்.


    "நீ இருக்கிற இடத்தை எனக்கு லொகேஷன் அனுப்பு ராகுல், நான் உடனே என் வீட்டு டிரைவரை கார் எடுத்துட்டு அங்க அனுப்பி வைக்கிறேன்.


    அவன் கிட்ட வேனை கொடுத்துட்டு நீ அந்த பொண்ணை கூட்டிட்டு, அவங்க ஊர்ல கொண்டு போய் பத்திரமா இறக்கி விட்டுட்டு வா. பார்த்து பத்திரம், ஏதாவது பிரச்சனைனா உடனே எனக்கு கூப்பிடு."


  அவன் அவருக்கு நன்றி கூறி அழைப்பை துண்டித்து விட்டு, வாட்ஸ் அப்பில் அவன் இருந்த லொகேஷனை அவருக்கு அனுப்பி வைத்தான்.


    பிறகு அவனது தாய்க்கு அழைத்தான், எங்கே நடந்தவற்றை கூறினால் அவர் பயந்து விடுவாரோ என்று நினைத்து, வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும், அதனால் தனக்காக காத்திருக்காமல் உணவினை உண்டு விட்டு, நிம்மதியாக உறங்குமாறு கூறி அழைப்பை துண்டித்தான்.


  நிரஞ்சனா தான் அணிந்திருந்த தாவணியை கலைந்து விட்டு, புடவை உடுத்தி வந்தாள்.


  "ரெண்டு பேரும் இப்படி அம்மன் முன்னாடி வந்து நின்னு, கெட்டது எதுவும் நெருங்க கூடாதுன்னு நல்லா மனதார வேண்டிக்கங்க."


  அவர்களும் அவர் சொன்னது போலவே செய்தனர். அவர் அவர்கள் இருவரின் கைகளிலும் ஒரு தாயத்தினை கட்டினார்.


    "எந்த நேரத்திலும் இது உங்க கைய விட்டு, எப்பவும் நீங்க கூடாது. இது உங்க கையில இருக்கிற வரைக்கும், எந்த கெட்டதும் உங்க ரெண்டு பேரையும் நெருங்காது, நல்லபடியா ஊர் போய் சேருங்க."

 

    திருநீற்றினை இருவரது நெற்றியிலும் வைத்து ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பி வைத்தார். 


    வாசுதேவன் ராகுலுக்கு அழைத்து தனது கார் டிரைவர் அங்கு வந்து விட்டதாக கூறினார். உடனே ராகுல் அங்கு சென்று, டிரைவரிடம் நன்றி கூறி வேன் சாவியை கொடுத்துவிட்டு, கார் சாவியை வாங்கி வந்தான்.


    பிறகு இருவரும் அம்மனை நன்றாக வேண்டிக்கொண்டு தமது பயணத்தினை தொடங்கினர்.

  நிரஞ்சனாவிடம் அவளது ஊர் பெயரினை கேட்டு அறிந்து கொண்ட ராகுல் தமது அலைபேசியில்  அங்கு செல்வதற்கான வழியினை மேப் மூலம் அறிந்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.


வழியில் நிரஞ்சனாவிற்கு உணவு வாங்கிக் கொடுக்கவும் அவன் மறக்கவில்லை.

 

    வேடந்தூரில் மாலையில் ஆரம்பித்த ஊர் மக்களின் பொதுக்கூட்டமானது, சச்சரவுகளினோடே இன்னும் நடந்து கொண்டிருந்தது.


    "அட நிறுத்துங்கப்பா இன்னும் எவ்வளவு நேரம் தான் இதே மாதிரி பேசிக்கிட்டு இருக்க போறீங்க. சாயந்திரம் ஆரம்பிச்ச கூட்டம் அர்த்த ராத்திரி ஆயிடும் போல இருக்கு, எப்ப தான்யா முடிப்பீங்க?"


  "சுந்தரம் ஐயா இருந்திருந்தா இந்த பிரச்சனையே இல்ல, அவரு வெளியூர் போயிருக்கிறதுனால தானே, இப்போ யோசிக்க வேண்டியதா இருக்கு."


    "ஆமா பின்ன என்ன பண்றது அவர் ஏதோ அவசரம்னு வெளியூர் போனவர் இன்னும் திரும்பல."


    "நாளைக்கு வேற, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண் எடுக்க வேணும். ஏற்கனவே நாள் குறிச்சிட்டோமே அதனால நீங்களே பாருங்கன்னு அவர் சொல்லிட்டாரு."


    "அவர் ஹாஸ்பிடல்ல இருக்கிறதால இப்போதைக்கு அங்கிருந்து வர முடியாதாம். நம்ம வேலப்பன் ஐயா குடும்பத்திலயும் அந்த பொண்ணு ஓடிப் போனதால எல்லாரும் சங்கடத்தில் இருக்காங்க, அவங்களும் யாரும் வர மாட்டாங்கன்னு நினைக்கிறேன்." 


    "அதுதான் ஐயாவே சொல்லிட்டாரே அதனால கண்டிப்பா நாளைக்கு, குருந்த மரத்துக்கு அடியிலிருந்து மண்ணெடுத்து, நம்ம குல தேவிக்கு சிலை செய்யப் போறோம், எல்லாருக்கும் இதுல சம்மதம் தானப்பா?"


  "அப்புறம் என்ன நாளைக்கு இங்க கோவில்ல வேலை முடிஞ்சதும், நேரா கொற்றவை கோயிலுக்கு போய் அங்க பார்த்துட்டு வந்துடலாம், என்னப்பா சொல்றீங்க? ஏற்கனவே அவங்க பாதை போடுற வேலையெல்லாம் முக்கால்வாசி முடிஞ்சிடுச்சு."


    "நாம எல்லாரும் கோயில் வரைக்கும் போய், வேற என்ன தேவைப்படுதுன்னு ஒரு பார்வை பாத்துட்டு வந்துடுவோம் அப்பதான் திருவிழாவின் போது என்ன தேவைப்படும் என்கிறது தெரியும்."

Sunday, June 15, 2025

மன்னவரே 35


 

            அத்தியாயம் 35

     

          திக்கு தெரியாமல் நெடுஞ்சாலைதனில் ஓடிக் கொண்டிருந்த நிரஞ்சனா, தூரத்தில் ஏதோ வாகனம் வரும் வெளிச்சப் புள்ளி தெரிய, அதை நோக்கி ஓடத் தொடங்கினாள்.


    வழியெங்கும் மரங்கள் சூழ்ந்த இருளின் நடுவே, குத்து மதிப்பாகதான், அந்த தார் சாலையில் ஓடிக் கொண்டிருந்தாள்.


    அதே ரோட்டில்தான் எதிர் திசையில், கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் அடங்கிய மினி வேனினை, ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான், மதுவினால் கூகுள் என்று நாமகரணம் சூட்டப்பட்ட ராகுல்.


  கட்டுமான பொருட்கள் அடங்கிய மினி வேனை, பத்திரமாக தமது கம்பெனியின் அருகே இருக்கும் குடோனில் நிறுத்திவிட்டுதான், ஆபீஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமது பைக்கை எடுத்துக்கொண்டு இவனது இல்லம் செல்ல வேண்டும். இது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்.


    வண்டியை ஓட்டி கொண்டு வந்து கொண்டிருந்த ராகுலுக்கு, யாரோ ரோட்டில் ஓடி வருவது போல் தெரிந்தது.


  அருகே வரவர தான் அது ஒரு பெண் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.


  வேனினை கண்டவுடன் கைநீட்டி அதை நிறுத்த முயற்சி செய்தால் நிரஞ்சனா, அந்த முயற்சிக்கு பலனாக வேனும் நின்றது.


    அதிலிருந்து இறங்கிய ராகுல், அவளின் தோற்றத்தை கண்டு அதிர்ந்து நின்றான்.


        இவ்வேளையில் உடையெங்கும் இரத்தப் புள்ளிகள் சூழ்ந்திருந்த அவளது தோற்றத்தை கண்டு, இந்த குளிர்கால இரவு நேரத்திலும் அவனுக்கு வியர்வை பூத்தது.


      "சார் சார் ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. இங்கிருந்து என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ். என்னை கடத்தி வச்சிருந்தவங்க என்னை காணோம்னு துரத்திட்டு வந்தாலும் வந்துடுவாங்க."


  ராகுலுக்கு அவளின் தோற்றம் வித்தியாசமாக பட்டாலும், அவள் வேதனையில் அழும்போது, அவனால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. 


          இந்த இரவு நேரத்தில் பணம் பறிப்பதற்காக, இவ்வாறு சிலர் நடிப்பதை அவன் கேள்விப்பட்டதுண்டு. சில சமயம் அவனும் கூட அதில் ஏமாந்து போனதும் உண்டு. 


          பாவம் பார்த்து வண்டியை நிறுத்தியதனால் ஏற்பட்ட, பல வழிப்பறிகள் பற்றிய செய்திகள், ஏனோ இந்த சமயம் அவன் நினைவுக்கு வந்தது.


       இருந்தும் அவளின் முகத்தில் தெரிந்த பதட்டமும் கவலையும் இவனுக்கு உண்மை என்றே கூறியது.


  "முதல்ல பதட்டப்படாம தெளிவா  என்ன நடந்ததுன்னு சொல்லுங்க."


    நிரஞ்சனா அழுகையினூடே கூறத் தொடங்கினாள்.


  "யாரோ மந்திரவாதிங்க சிலர் என்னை கடத்திட்டு வந்துட்டாங்க. நான் எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியல. என் ஃபேமிலி கிட்ட போகணும், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்."


  பதட்டத்தோடு இவள் வந்த பாதையினை திரும்பி திரும்பி பயத்தோடு பார்த்துக் கொண்டே, இவனிடம் பேச, ராகுலும் அவளை வண்டியினுள் ஏறுமாறு கூறினான்.


    அவளை வேனின் பின்பக்கத்தில் பொருட்களோடு பொருட்களாக ஏறி அமர்ந்து கொள்ள சொல்லி,  வெளியே தெரியாத வண்ணம் அவளின் மீது, ஒரு தார்பாயை போட்டு மூடினான்.


    "இந்தக் காட்டத் தாண்டுற வரைக்கும் இப்படியே இருங்க, வெளியே என்ன சத்தம் கேட்டாலும் சரி, வண்டி  நின்னாலும் இல்ல ஏதாவது பேச்சு குரல் கேட்டாலும் சரி, தயவு செய்து இந்த தார்பாயை விலக்கிப் பார்த்திடாதீங்க."


  ராகுல் டிரைவர் இருக்கையில் அமர்ந்து வண்டியினை கிளப்பி சிறிது தூரமே சென்றிருப்பான், அப்போது சில கட்டுமஸ்தான ஆட்கள் காட்டுப் பாதையில் இருந்து ரோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


  வந்தவர்கள் இவனது வண்டியை நிறுத்தி,


  "இந்த வழியா ஏதாவது ஒரு பொண்ணு போனதை பார்த்தியா?"


  "கியா? தும் கியா பாத் கரேகோ, ஹமே ஹமே சமஜ்னையாத்தா?"


  "என்னடா இவன் கியாமுயாங்கிறான் ஆள பாத்தா வெளியூர்க்காரன் மாதிரி இருக்கிறான், கண்டிப்பா அந்த பொண்ணு இவன் வண்டியில ஏறி இருக்காது. பின்னாடி எல்லாம் ஒரே கட்டிட பொருளுங்களா தான் கிடைக்குது. அது எங்கயாவது இந்த காட்டுக்குள்ள தான் ஒளிஞ்சிருக்கனும்."


  "அதுதான் பாதிப்பேர் காட்டுக்குள்ள தேடிக்கிட்டு இருக்காங்களே, வா நாம அந்தப் பக்கம் போய் தேடி பார்க்கலாம்."


  அவர்கள் இவன் வண்டியை தாண்டி மறுபக்கம் இருந்த காட்டினுள் தேட சென்றனர்.


  ராகுல் வண்டியை இயக்கி அங்கிருந்து நகரத் தொடங்கினான்.


  அங்கிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் தாண்டி தான் வண்டியை நிறுத்தினான்.


  வண்டியின் பின்புறம் வந்து தார்ப்பாயை விளக்கியவன்,


"வெளிய வாங்க பயப்படாதீங்க, நாம அங்க இருந்து தூரமா வந்துட்டோம், இன்னும் கொஞ்சம் தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும். உங்க பேரன்ட்ஸ் நம்பர் இருந்தா சொல்லுங்க நான் போன் பண்ணி தரேன்." 


    "அது எனக்கு நினைவுல இல்லயே, எல்லாரோட நம்பரும் என் போன்லதான் இருக்கு. நான் எதையும் மனப்பாடம் செஞ்சு வச்சுக்கல."


  "என்னங்க இது, ஒருத்தரோட நம்பர் கூடவா உங்களுக்கு ஞாபகத்திற்கு வரல? எப்பவும் கையிலயே போனை வச்சுக்கிட்டு இருப்பீங்களோ?"


  தான் கூறியதைக் கேட்டு அவள் முகம் போன போக்கை பார்த்து அதற்கு மேல் எதுவும் அவனால் கூற முடியவில்லை.


    "சரி இன்னும் கொஞ்ச தூரத்துல பஸ் ஸ்டாண்ட் வந்துடும் நான் உங்களை அங்க இறக்கி விட்டுடவா? இல்ல போலீஸ் ஸ்டேஷன்ல வேணா விட்டு விடவா?"


  "வேண்டாம் எனக்கு யாரைப் பார்த்தாலுமே பயமாதான் இருக்கு, ப்ளீஸ் சார் என்னை நீங்களே என் வீட்டில் கொண்டு போய்  விட்டுடறீங்களா?"


    ராகுலுக்கும் அவளின் இக்கட்டான நிலமை புரிந்தது. ஆனாலும் தன்னிடம் உள்ள கட்டுமான பொருட்களை உரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டுமே, இதை இப்படியே வைத்துவிட்டு எவ்வாறு இவளுடன் செல்ல முடியும்.


        அத்தோடு அவள் இருக்கும் கோலத்தை முதலில் கலைக்க வேண்டும் என்று நினைத்தவன், அருகே சுற்றி முற்றி தேடினான்.


        அவன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்று தூரம் தள்ளி ஒரு கோயில் இருந்ததை கண்டான்.


      அங்குள்ள நீரால் முதலில் இவள்மேல் உள்ள  ரத்த துளிகளை அகற்ற வேண்டும் என்று முடிவு செய்து, அவளை அழைத்துக்கொண்டு அக்கோவிலை நோக்கி சென்றான்.


    கோவிலை நெருங்கும்போது ஏனோ நிரஞ்சனாவால் தெளிவாக நடக்க முடியவில்லை. அவள் மேல் உள்ள செய்வினை விளைவால் நிற்க முடியாமல் தள்ளாடத் தொடங்கினாள்.


    சரியாக கோயிலின் வாசற்படியை மிதிக்கும் போது மயங்கி சரியப் போனவளை ஒரு கை கொண்டு ராகுல் பிடித்துக் கொண்டான். அவளின்   மற்றொரு புறத்தை கோவிலின் உள்ளிருந்து வந்த இன்னொரு கரம் தாங்கியது.


    ராகுல் நிமிர்ந்து பார்த்தபோது அங்கே மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி நிறைய குங்குமம் வைத்து தெய்வம்சம் பொருந்திய ஒரு பெண்மணி கோவிலின் உள்ளிருந்து நிரஞ்சனாவை ஒரு புறம் தாங்கிக் கொண்டிருந்தார்.


      "எவ்வளவு ஜென்மம் எடுத்து இவ தடம் புரண்டாலும், இவளை தாங்கி பிடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு இல்லையா? இப்பவாச்சும் இவ உன் கைய விட்டு போகாம பாத்துக்கோ."

Saturday, June 14, 2025

மன்னவரே 34


 

           அத்தியாயம் 34


  அடப்பாவி மனுஷா, நின்னுட்டு இருந்த உன் வண்டி மேல வந்து மோதுனது ஒரு குத்தமாய்யா, நானும் காலையில் இருந்து எத்தனை அதிர்ச்சியை தான் தாங்குவேன். இவர் சொல்ற எத்தனை பொய்க்குதான் நான் ஒத்து  ஊதுவேன். நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது


ஆண்டவா, இவர் என்ன எனக்கு மேல இருப்பார் போலயே, கோவில்ல நின்னுகிட்டு  இப்படி புளுகுறாரே,பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க, இவர் உருட்டற உருட்டுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கிடைக்காது போலயே, மது தன் கால்களை உந்தி வேந்தன் காதில் கிசுகிசுத்தால்,


      "மிஸ்டர் எம்டி சார் இன்னும் எனக்கு எத்தனை பட்டத்தை தான் வாங்கி கொடுக்க போறீங்க, காலையில ஹாஸ்பிடல்ல எனக்கு கர்ப்பம்னு சொல்லி தான் லாவண்யா மேடமை பார்க்க கூட்டிட்டு போனீங்க, இப்போ உங்களை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணகிட்ட பொண்டாட்டின்னு என்னை சொல்றீங்க, அடுத்து என்ன வளைகாப்பா? இல்ல டைரக்டா லேபர் வார்டுக்கு பிரசவத்துக்காக என்னை கூட்டிட்டு போக போறீங்களா?"


        மது பற்களின் இடையே வார்த்தைகளை கடித்து துப்ப, வேந்தன் ஒரு அசட்டுப் புன்னகையை மட்டுமே அவளுக்கு பதிலாக கொடுத்தான்.


    பெரியவர் இவர்களை சந்தேகமாக பார்க்க,


  "அதுப்பா நீங்க யார்ன்னு கேட்கறா? இன்னைக்கு காலையில நடந்த, நம்ம கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட்டானே சந்துரு, அவனோட அப்பா தான்மா இவரு"


    மது ஒரு சைஸாக, அவனை முறைத்துக் கொண்டே தலையை உருட்டி வைக்க,


  "பாத்தீங்களாப்பா எங்களுக்காக சாட்சி கையெழுத்து போடத்தான் சந்துரு அங்கே வந்திருந்தான்."


    "இல்லப்பா வேந்தா, ஏற்கனவே ஹாஸ்பிடலையே ரெண்டு பேர் சொன்னாங்க, இவன் ஏதோ ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறதா போன்ல பேசிட்டு இருந்தானாம். நான் அதை நம்பல. ஆனா, இப்போ எனக்கு சந்தேகமா இருக்கு. எனக்கு உன்ன பத்தி தெரியும்ப்பா, நீ உன் குடும்பத்துக்கு தெரியாம கண்டிப்பா இப்படி கல்யாணம் பண்ணிக்க மாட்டே, நீ  உன் ஃப்ரெண்டை காப்பாத்தறதுக்கு வேண்டி பொய் சொல்லாத."


    இப்போது மது அவரிடம் பேச ஆரம்பித்தால்,


      "சார் அவர் சொல்றது உண்மைதான் எங்க ரெண்டு பேத்துக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்றதுக்கு சாட்சி கையெழுத்து போடுறதுக்காக தான், அவர் அங்க வந்திருந்தார். நீங்க வேணா உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்தா கேட்டு பாருங்க, உங்க பையன் மட்டும் இல்ல, அவரோட சேர்த்து  இவரோட பிரண்ட்ஸ்ங்க இன்னும் ரெண்டு பேர் அங்க வந்திருந்தாங்க."


  "அப்ப உங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருச்சுன்னு சொல்றீங்க அப்படித்தானே?"


"ஆமா சார் ஆமா."


  "அப்போ வாங்க, இப்பவே என் கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் தாலி கட்டி தம்பதியர் ஆகிடுங்க, என்ன? ரெண்டு பேரும் திருதிருனு முழிக்கிறீங்க வாங்க."


மது அவர் கூறியதில் அதிர்ச்சியாகி பிரம்மை பிடித்தது போல் நின்றுவிட, வேந்தன் அவளுக்கு பின்னால் சென்று நின்று கொண்டு,  அவன் ஏற்பாடு செய்த சந்துருவின் போலி அப்பாவை நோக்கி கட்டைவிரலை உயர்த்தினான்.


      கோயிலினுள் அடித்த மணி சத்தமே மதுவை தன்னிலைக்கு கொண்டு வந்தது. தனக்கு முன், நின்று கொண்டிருந்த அந்த பெரியவரை பார்த்து தெளிவாக பேச தொடங்கினாள்.


        "இங்க பாருங்க சார் தாலி கட்டி, மாலை மாத்தி கல்யாணம் பண்ணனும்னா, நாங்க அதை அங்க ரிஜிஸ்டர் ஆபீஸ்லயே பண்ணி இருப்போமே? எங்களுக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை. அதனாலதான் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கையெழுத்து மட்டும் போட்டு, எங்க திருமணத்தை உறுதி பண்ணிக்கிட்டோம்.


      இவருக்காக தான் நான் கோயிலுக்கே வந்திருக்கேன். எனக்கு இந்த தாலி கட்டிக்கிறது, குங்குமம் வச்சிக்கிறது இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை போதுமா.


    இதுக்கு மேல நீங்க நம்பினாலும் சரி நம்பாட்டியும் சரி, நான் சொல்றது ஒன்னு தான், எனக்கும் இவருக்கும் இன்னைக்கு காலைல தான் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் நடந்தது. அதுக்கு சாட்சி கையெழுத்து உங்க பையனோட சேர்த்து இவரோட பிரண்ட்ஸ் ரெண்டு பேர் தான் போட்டாங்க போதுமா."


"மதூஊஊஊஊ...."


  தனக்கு பரிச்சயமான  அந்த குரலைக் கேட்டு திரும்பிய மது, அங்கே தன் அன்னையைக் சற்றும்  எதிர்பார்க்காததால் அவரை கண்டு அதிர்ந்து நின்றாள்.


    வேந்தனும் கூட இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை,அவன் போலி அப்பாவை ஏற்பாடு செய்ததே மதுவின் நெற்றியில் தன் கைகளால் குங்குமம் இட வேண்டும் என்ற காரணத்தால் தான், அவன் ஒன்று நினைத்து செய்ய போக இப்படி ஆகும் என்று, அவன் கனவிலும் எண்ணி பார்க்கவில்லை.


  இவள் தன் அன்னையை நெருங்கி செல்லும் முன்னேயே, லட்சுமியம்மா நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி சரிய தொடங்கியிருந்தார். கீழே விழ போனவரை பூவுப்பாட்டி தன் கைகளில் தாங்கிக் கொண்டார். 


  மதுவின் குடும்பம் மட்டுமல்ல  வேந்தனின் ஒட்டு மொத்த குடும்பமும் அங்கு தான் இருந்தது.


    காரிருள் பூசிய நெடுஞ்சாலைதனில், கண்களில் கண்ணீர் பெருகி பாதையை மறைக்க, அதைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே, நிரஞ்சனா தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள்.


    சிறிது நேரத்திற்கு முன் தான் அவள் கண் விழித்திருந்தால், தான் எங்கிருக்கிறோம் என்று, அந்த இருட்டில் எரியும் தீபங்களின் உதவியோடு பார்த்தாள். 


    ஒரு கொடூரமான சிலையின் முன்னால் தான் படுக்க வைக்கப்பட்டு இருப்பதையும், தன்மீது ஏதோ துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்தாள். 


  நன்கு கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்தபோது தான் தெரிந்தது, அங்கு இருப்பது அத்தனையும் ரத்தம் என்று.


  எப்படி தனக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று யோசித்தபோது எதுவுமே புரிபடவில்லை.


    மனமானது தான் எப்போதுமே உதாசீனப்படுத்தும் தன் குடும்பத்தின் அருகாமையை தேடியது.


  கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டேயிருந்தது. இது அழுவதற்கான சூழல் அல்ல என்று புரிந்து கொண்டு, யாரோ வரும் அரவம் கேட்டு கண் மூடி படுத்துக் கொண்டால்.


    அரை கண்ணை திறந்து அவள் பார்த்தபோது மந்திரவாதிகள் போன்று இருந்த சிலர், அங்குள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.


  வந்தவர்களில் சிலர் இவளை தூக்கி சென்று, ஒரு காரில் படுக்க வைத்துவிட்டு அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றனர்.


  அவர்கள் அனைவருமே உள்ளே சென்றது இவளுக்கு வசதியாக போக, உடனே கார் கதவினை திறந்து கொண்டு அந்த கட்டிடத்தை விட்டு ஓட ஆரம்பித்தாள். திக்கு தெரியாமல் கிடைத்த வழிதனில் கண்ணுக்குத் தெரிந்த வழியில் ஓடினாள்.


    அந்தப் பாதை நேராக ஒரு நெடுஞ்சாலையை சென்று சேர, அங்கு யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று அந்த சாலையில் தொடர்ந்து ஓடத் தொடங்கினாள்.

Friday, June 13, 2025

மன்னவரே 33


 

            அத்தியாயம் 33

       

           வேந்தன் மதுவை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் வந்திருந்தான்.

  

    "எப்படி கரெக்டா நான் அடிக்கடி வர இந்த கோயிலுக்கே, என்னை கூப்பிட்டு வந்து இருக்கீங்க?"


"கேட்டு தெரிஞ்சுக்கிட்டதால தான்."


  "என்ன சொன்னீங்க?"


  "இல்லைங்க என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டப்ப, இது ஃபேமஸான கோவில்ன்னு சொன்னாங்க. அதனாலதான் இங்க வந்தேன்."


  "சரி ஒரு நிமிஷம் சார், நான் போய் பூ வாங்கிட்டு வந்துடறேன்."


  வேந்தன் தனது அலைபேசியில் இருந்து வடிவுபாட்டிக்கு அழைத்தான்.


      "ஆத்தா வீட்ல எல்லாம் கிளியரா, நானும் மதுராவும் வீட்டுக்கு வரும்போது வீட்ல யாரும் இருக்க மாட்டீங்க தானே. "


  "ஆமா ராசா வீட்ல இருக்குறவங்களையும், ஊர்ல இருந்து வந்தவங்களையும் கூட்டிக்கிட்டு தான் வெளியே வந்திருக்கேன்."

    "எது ஊர்ல இருந்து வந்திருக்காங்களா?"


    "அது...அதுதான் உனக்கு தெரியுமே ராசா, நான் உங்க தாத்தாகிட்ட எதுவுமே மறைச்சதில்லையே. அதுதான் காலையில நீ கிளம்புனதுமே, ஐயாக்கு போன் பண்ணி நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டு, இந்த வீட்டு அட்ரஸையும் அமுதன்கிட்ட கேட்டு சொல்லிட்டேன்."


        வடிவு பாட்டி தான் இருக்கும் இடத்தையும், நடந்த விஷயங்களையும் மூர்த்தி ஐயாவுக்கு போனில் அழைத்துக் கூறிவிட்டார்.


      விஷயம் அறிந்ததும் அங்குள்ள அனைவருமே, சிவராமனின் இல்லத்திற்கு கிளம்பிவிட்டனர். ஆனால்  இந்த விஷயம் இன்னும் மேலூரில் உள்ள யாருக்கும் தெரியாது.


      வேந்தன் முன்பே வடிவுப்பாட்டியிடம், தான் இன்று நடத்தப் போகும், அத்தனை நாடகத்தையும் கூறிவிட்டான். அவருக்கும் இதில் மகிழ்ச்சி தான். 


    அவர் நேரடியாகவே அனைவரின் சம்மதத்தோடு, திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூற, அவன் இது நடக்காத காரியம், முதலில் சிவராமன் மாமா ஊருக்கு வர ஒத்துக்கொள்வாரா என்று பாருங்கள் என கூறினான்.


  நடந்ததும் அதுதான், வடிவு பாட்டியும், பூவுப்பாட்டியும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சிவராமன் தன் தந்தையின் அனுமதி இன்றி, அந்த வீட்டினுள் கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.


    அதையும் மீறி ஊரில் வேலப்பன் ஐயாவின் இல்லத்தில் தங்காமல் வெளியே எங்காவது தங்கிக் கொள்ளலாமே என்று கூறியதற்கு, அது தன் தந்தைக்கு மரியாதையாக இருக்காது என்று முற்றிலுமாகவே மறுத்து விட்டார்.


      "சுத்தம், எதுக்கு ஆத்தா இப்படி அவசரப்பட்டு சொன்னே, ஒரு வேலை மேலூர்காரங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகுமில்ல."


    "அதுக்குன்னு எத்தனை நாள் ராசா இப்படியே இவங்கள ஒதுக்கி வைக்கிறது. அதோட நீ சொன்ன மாதிரி தான் சிவராமனும் சொன்னான். அவங்க அப்பா சம்மதம் இல்லாம அவன் அந்த ஊர் பக்கம் வரமாட்டானாம். பாவம் அவன் இதை சொல்லும் போது என்ற அண்ணி முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா?


      "சரி சரி ஆத்தா ஊர்ல இருந்து எல்லாருமே வந்து இருக்காங்களா?"


  "ஆமாப்பா ஆனா அந்த மூர்த்தி பயல தான் காணோம். அவன் பொண்டாட்டியும் ஆத்தாவும் கூட வந்துட்டாங்க, இவன் எங்க போனான்னு தெரியலையாம்."


  "சரி ஆத்தா மதுரா வர்றா, நான் போன வைக்கிறேன்."

  

      "ராசா கூடிய சீக்கிரமே என் பேத்திகிட்ட எல்லா உண்மையையும் சொல்லீருப்பா. நீ இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்லி, வாழ்க்கைக்கு அச்சாரம் போடறது, அவ்வளவா நல்லது இல்லப்பா."


  "சரி ஆத்தா கண்டிப்பா சொல்லிடறேன். நான் எதையும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா?"


    "எனக்கு உன்ன பத்தி தெரியாதா ராசா, இந்த விஷயத்தால, உங்க ரெண்டு பேருக்குள்ள, எதுவும் பிணக்கு வந்திடக்கூடாதுன்னு தான் பார்த்தேன். சரிப்பா நான் போனை வைக்கிறேன். பார்த்து சூதானமா இருங்க."


  "போலாமா சார், ஆமா உங்க பிரண்டோட முழு பெயர் என்ன? இன்னைக்கு லாவண்யா மேடமுக்காகவும் உங்க பிரண்டுக்காகவும் தான், இந்த கோயிலுக்கே நாம வந்து இருக்கோம். அதுதான் அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிடலாமேன்னு கேட்டேன்."


  அப்போது தூரத்திலிருந்து கண்ணாடி அணிந்த ஒரு டிப்டாப்பான முதியவர் வேந்தனை நோக்கி கையசைத்து, அவனிடம் வந்தார்.


  "என்னப்பா வேந்தா நல்லா இருக்கியா? என்ன வீட்டு பக்கமே வர மாட்டேங்குற."


    "அது அப்பா கொஞ்சம் வேலை பிசி அதுதான், வீட்டுக்கு வர முடியல. ஆனா சந்துருவ அடிக்கடி நான் வெளியே மீட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?"


  அவர்கள் பேசிக்கொண்டே நடந்து கோவிலினுள் வந்திருந்தனர்.


  "எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா. சரி வா நாம அப்படியே உள்ள போகலாம்."


    வேந்தனுடன் வந்த மதுவை, அப்போதுதான் கவனித்தார் சந்துருவின் தந்தை.


  "ஆமா வேந்தா இந்த பொண்ணு யாரு?"


  சரியாக அந்த நேரத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர,


      "வாட் என்ன சொல்றீங்க? என் பையன் சந்துருவ ரெஜிஸ்டர் ஆபீஸ்ல பாத்திங்களா? அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ற இடத்துலயா? கையெழுத்து போட்டுட்டு இருந்தானா?"


        மதுவும் வேந்தனும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


    "சார் இவர்தான் உங்க பிரண்டோட அப்பாவா?"


    "ஆமா, இப்போ இவருக்கு மட்டும் இவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போற விஷயம் தெரிஞ்சா, லாவண்யாவோட அப்பா கிட்ட டைரக்டா போய் பேசணும்னு சொல்லுவாரு."


    "ஆமா ஆமா லாவண்யா மேடம் தான் சொன்னாங்களே, இவர் நேர்மைடா நியாயம்டா உண்மைடான்னு வாழ்ற நாட்டாமையோட மறு அவதாரம்னு. முறைக்காதீங்க சார் வாய் தவறி உண்மையை சொல்லிட்டேன்."


    "இப்ப என்ன பண்றது, ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எதுக்காக அவன் போனான்னு சொல்றது."


  அதற்குள் அவர் போனை வைத்துவிட்டு கோபமாக திரும்பினார் இவனிடம்,


    "கேட்டியா வேந்தா சந்துரு பண்ண காரியத்தை, உன் பிரண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்கானாம். இவனுக்கு என்ன அங்க வேலைன்னு கேட்கறேன். போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கறான், இரு நானே போய் என்னன்னு பார்க்கறேன்."


  "அப்பா சந்துரு எனக்காக தான் அந்த ஆபீஸ்க்கு வந்தான். ஆக்சுவலா எங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு தான் அங்க ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சு. அப்படித்தானே?"


    இவன் திடீரென்று கூறிய பொய்யில் அதிர்ந்து நின்ற மது, அவன் தலையாட்டி கொண்டே இவளிடம் வினவ, அவளும் அதே போல் தலையை ஆட்டி வைத்தால்.


      இவன் நடத்தும் நாடகத்தைக் கண்டு கருவறையிலிருந்த லிங்கத் திருமேனியரும், மர்ம புன்னகை புரிந்தாரோ! இனி அடுத்த நொடி முதல் எனது திருவிளையாடல் ஆரம்பம் என்று.

Thursday, June 12, 2025

மன்னவரே 32


 

             அத்தியாயம் 32


  "என்னடா உளர்ற, அப்போ லவ் மேரேஜ் இல்லைன்னா, அப்புறம் எதுக்காக யாருக்கும் தெரியாம ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறீங்க? நீ அந்த முள்ளு காட்டுக்குள்ள போயிட்டு வந்ததிலிருந்து, நடந்துக்கிறது ஒண்ணுமே சரியில்ல வேந்தா."


தொலைபேசி அழைப்பை பேசி முடித்து வந்த மது இவர்களிடம் வந்து,


      "உங்கள்ள யார் சந்துரு?ஓஓஓ நீங்களா, கங்கிராட்ஸ் பிரதர் நிஜமாவே லாவண்யா ரொம்ப சூப்பர் கேரக்டர். அவங்க கிடைக்கிறதுக்கு நீங்க தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.


  அவங்ககிட்ட பேசுனதுல இம்ப்ரஸ் ஆகிதான், உங்களை முன்ன பின்ன தெரியலைன்னாலும் கூட, நானே உங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட வந்திருக்கேன்."


  அவ்வளவுதான் நண்பர்கள் மூவரும் கரண்ட் கம்பியை மிதித்தது போல், ஷாக் ஆகி வேந்தனை பார்த்தனர். 


  அப்போது மறுபடியும் மதுவிற்கு அவள் தோழி வினுவிடம் இருந்து அழைப்பு வர, போனை ஆன் செய்து விட்டு, இவர்களிடம் தலையசைத்து வினுவுடன் பேச வெளியே சென்றாள்.


    "அவள பொருத்தவரைக்கும் இது சந்துருவோட கல்யாணத்துக்கு அப்ளிகேஷன் கொடுக்கிறோம்னு நினைச்சுட்டு இருக்கா, நீங்களா எதுவும் அவ கிட்ட உளறி தொலைக்காதீங்க."


    "டேய் இந்த விஷயம் தீபனுக்கு தெரிஞ்சா அவனே நம்மளை கைது பண்ணிடுவாண்டா."


      "அதனாலதான், அவன சாட்சி கையெழுத்து போட கூப்பிடாம, உங்க மூணு பேரையும் கூப்பிட்டு இருக்கேன்."


    "டேய் சந்துரு, அனேகமா உன் கல்யாணம் போலீஸ் ஸ்டேஷன்ல தான் நடக்க போகுது.


  ஆனா என்ன, நீ ஜெயிலுக்குள்ள இருந்து கையெழுத்து போட வேண்டி இருக்கும்."


    "டேய் மூர்த்தி வாயை வெச்சு தொலைக்காதடா? ஏற்கனவே அவங்க அப்பனுக்கு தெரியாம எப்படி கல்யாணத்தை முடிக்க போறோம்? அதுக்கு அப்பறம் எப்படி ஃபாரின்க்கு தப்பிச்சு போக போறோன்னு யோசிச்சி  பயந்துட்டு இருக்கிறோம்.


    கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே, என்னை கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைச்சிடுவ போலயே, இது உனக்கே நியாயமாடா வேந்தா?"


      சந்துரு தனது புலம்பலை மூர்த்தியிடம் ஆரம்பித்து வேந்தனிடம் கேள்வியாக முடித்தான்.


    வேந்தன் தனது கையில் உள்ள இன்னொரு பைலை எடுத்து சந்துருவிடம் கொடுத்தான்


    "இதுல உன் கல்யாணத்துக்காக ரிஜிஸ்டர் பண்ண போற அப்ளிகேஷன் இருக்கு. 


        ஆல்ரெடி நானே ஃபில்லப் பண்ணிட்டேன். அதோட லாவண்யாவோட சர்டிபிகேட்டும் இதுல வெச்சாச்சு. உன்னோடது மட்டும் தான் பாக்கி. அதையும் வச்சு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணும் போது ஆபீஸ்ல கொடுத்துடு."


     "வேந்தா நீ செய்யறது ஒன்னும் சரியில்ல. ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளுக்கு கட்டாய தாலி கட்டினது மாதிரி தான் இருக்கு, நீ இப்போ அந்த பொண்ணு கிட்ட நடந்துக்கிட்டது.


  நீ அந்த பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யலைன்னாலும், அந்த பொண்ணுக்கு தெரியாம இப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறது ரொம்ப தப்பு."


  "அந்த பொண்ணுக்கே உன்னை பிடிச்சிருந்தாலும், அவங்க பேரன்ட்ஸ் பத்தி நினைச்சு பார்த்தியா? அவங்க பொண்ணுக்கு  எப்படி மாப்பிள்ளை பார்க்கணும், எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணனும்னு எவ்ளோ கனவில் இருந்து இருப்பாங்க."


    "வெற்றி நீ சொல்றதெல்லாம் சரிதான். அவங்க அப்பா, அம்மா  கண்டிப்பா என்னை ஏத்துப்பாங், அந்த அளவுக்கு பெர்பார்மன்ஸ் போட்டு இருக்கேன்."


      "எது அவங்க அப்பா அம்மாவ உனக்கு தெரியுமா? அப்புறம் என்னடா பிரச்சனை, டேரக்டா பெரியவங்க மூலமாவே கல்யாணத்தை நடத்தி இருக்கலாம் இல்ல?"


    "இரு வெற்றி,வேந்தா நீ சொல்லு முதல்ல, அவங்க அப்பா அம்மா யாரு? நீ ஏதோ உள்குத்து வெச்சே பேசுற மாதிரியே இருக்கு."


        "நீ மட்டும் தான் மூர்த்தி என்னை கரெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்க. மதுவோட அப்பா நம்ம பூவு பாட்டியோட இரண்டாவது பையன் சிவராமன் அங்கிள் தான். இப்போ வடிவுப்பாட்டியும் பூவு பாட்டியும் அவங்க வீட்ல தான் இருக்காங்க.


    காலையில தான் கொண்டு போய் அங்கே விட்டுட்டு வந்தேன், ஒரு ரெண்டு நாள் அங்க இருப்பாங்க அதுக்குள்ள நான் இதெல்லாம் செட்டில் பண்ணிடுவேன்."


      "அடேய் அது உன் மாமன் பொண்ணு தானடா, அப்புறம் எதுக்கு இந்த திருட்டு கல்யாணம்? ஆனாலும் மணப் பெண்ணுக்கு தெரியாம நடந்த, இப்படி ஒரு கல்யாணத்தை நான் கேள்விப்பட்டதே இல்லைடா!"


      "ஐயோ பேசி பேசியே என்னை டயர்ட் ஆக்கிடுவீங்க போல இருக்கே, இப்ப நிரஞ்சனா எதை காரணமா வச்சு ஓடிப் போய் இருக்கா? ஒரு வேலை அவ திரும்பி வந்தா? உடனே கல்யாணம் பண்ணனும்னு சொன்னா? பெரியவங்க என்னை வற்புறுத்தினால் என்னால அவங்க பேச்சை தட்ட முடியாது.


  ஆனால் இப்போ நடந்த கல்யாணத்தால கண்டிப்பா என்னால மதுவை விட்டுக் கொடுக்க முடியாது. இதை ஒரு காரணமா, அவங்க கிட்ட சொல்ல முடியுமில்ல. சரி சரி அவ வர்றா கொஞ்ச நேரத்துக்கு எல்லாரும் வாய மூடிக்கிட்டு இருங்க."


          "இவங்க எல்லாம் ஏன் இப்படி திருதிருன்னு முழிக்கிறாங்க?"


    "அவங்க முழியே அப்படித்தான்."


  "சார் இங்க ஒர்க் முடிஞ்சுதா இல்லை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?"


    "முடிஞ்சுது மிஸ் மதுரம். நாம நேரா இனி ஆபீஸ்க்கு தான் போறோம். இனி இருக்க ஒர்க் எல்லாம் என் பிரெண்ட்ஸ் இவங்க இருந்து பார்த்துப்பாங்க. நான் உங்களை ஆபீஸ்ல விட்டுடறேன்."


  "சார் எனக்கு ஒரு ஹாவ் டே லீவ் கிடைக்குமா? என் வீட்டில் இருந்து கூப்பிட்டாங்க கொஞ்சம் அர்ஜென்ட் போல."


      "எங்களுக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க, உங்களுக்கு லீவு இல்லாமையா. ஆபீஸ் போனதும், நீங்களும் உங்க பிரண்டும் கண்டிப்பா இன்னைக்கு லீவ் எடுத்துக்கலாம்."


  "ரொம்ப தேங்க்ஸ் சார். ஆமா உங்க பிரண்டுக்கு தேங்க்ஸ் சொல்ற பழக்கம் எல்லாம் இல்லையா சார். இருந்தாலும் லாவண்யா மேடமோட அறிவுக்கும் அழகுக்கும் முன்னாடி இவர் கொஞ்சம் கம்மிதான்?"


    "அவன் அவனோட கல்யாண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளல, நீங்க வாங்க நம்ம கிளம்பலாம். அப்புறம் மிஸ் மதுரம் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிட்டு போலாமா ப்ளீஸ். ஒரு நல்ல காரியம் செஞ்சிட்டு கிளம்பறோம், அதனால தான் கேட்டேன்."


      மது சிறிது யோசித்து விட்டு, சரி என்று கூறினால்.


      வேந்தனும் மதுவும் ஒரு தலையசைப்புடன் நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டனர்.


  "என்னடா வெற்றி, அவன் பாட்டுக்கு நம்மள விட்டுட்டு போறான்."


    "அடுத்து ஏதோ ப்ளான் போட்டுட்டான் அதுக்குள்ள நம்மளை இழுக்காம போறானே, அதுவரைக்கும் சந்தோஷப்படு."

Wednesday, June 11, 2025

மன்னவரே 31


 

             அத்தியாயம் 31


  வேந்தன் மதுவுடன் தனது காரில், ஹாஸ்பிடலில் இருந்து ரிஜிஸ்டர் ஆபிஸை நோக்கி சென்று கொண்டிருந்தான்.


  "மிஸ் மதுரம் உங்களோட ஐடி ப்ரூப் ஏதாவது, இப்போ உங்ககிட்ட இருக்கா?"


  "இருக்கு சார், சேஃப்டிக்காக எப்பவுமே என்னோட வோட்டர் ஐடியை, என் கையில தான் வச்சிருப்பேன்."


    "ஓகே அதை கொடுங்க, நான் ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்துடறேன், இதையும் சேர்த்து தான் சப்மிட் பண்ண வேண்டி இருக்கும்."


  வேந்தன் அவளது ஐடியை எடுத்துச் சென்று இரண்டு காபி ஜெராக்ஸ் எடுத்துவிட்டு, வீட்டில் எடுத்த அவளது புகைப்படத்தையும் நான்கு காப்பி போட்டோ பிரிண்ட் எடுத்து கொண்டான்.


    பிறகு இருவரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் நோக்கி சென்றனர். தன்னிடம் இருந்த அவளின் சான்றிதழ்களில் மதுவின் கையப்பத்தை பெற்றுக் கொண்டான்.


"மிஸ் மதுரம் நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் உள்ள போய் ஃபார்ம் வாங்கிட்டு வந்துடறேன். அதோட வேற என்ன டீடெயில்ஸ் எல்லாம் தேவைப் படுதுன்னு கேட்டுட்டு  வந்துடுறேன்."


  வேந்தன் தன்னிடம் தயாராக இருந்த ஒரு விண்ணப்பத்தை கொண்டு வந்த சான்றிதழோடு சேர்த்து எடுத்துக் கொண்டு, அங்கிருந்த அலுவலகரிடம் கொடுத்தான்.


  மறக்காமல் இன்னொரு விண்ணப்பத்தையும் அங்கிருந்து பெற்றுக் கொண்டு மதுவிடம் வந்தான்.


  இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க. நாம போய் சைன் போட்டா போதும்.


  "நாம எதுக்காக இப்பவே சைன் பண்ணனும்? அவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணும் போது நாம கையெழுத்து போட்டா போதுமில்ல. அதுமட்டுமில்லாம  லாவண்யாக்காக தானே நான் இங்க வந்து இருக்கேன், அப்படி பார்த்தா அவங்களோட சைன் தானே நான் போட வேண்டி இருக்கும்?"


யோசிக்க ஆரம்பிச்சிட்டாளா, இவளை இப்படியே யோசிக்க விடக்கூடாது. தப்பாச்சே,


    "அப்ளிகேஷன்ல லாவண்யா தான் கையெழுத்து போடணுமுன்னு இல்ல, சாட்சிகள் கூட அந்த அப்ளிகேஷன்ல கையெழுத்து போடலாம். ரிஜிஸ்டர் பண்ற பைல்ல தான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க சைன் போடணும்."


  " ஓ சரி சார், ஆமா என்ன நாம மட்டும்தான் இங்க இருக்கோம்? உங்க பிரண்டு ஒருத்தரை கூட கண்ணுல காணமே?"


"நான் ஆல்ரெடி கால் பண்ணிட்டேன் அவங்க வந்துட்டு இருப்பாங்க"


    அப்போது மூர்த்தி, வெற்றி மற்றும் சந்துரு மூவரும் தனித்தனியாக ரெஜிஸ்டர் ஆபீசுக்கு ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரே நேரத்தில் மூவரும் கேள்வி எழுப்பினர்


"நீங்க எங்கடா இங்க?"


  "வேந்தன் தான் ஏதோ அவசரம்னு என்ன வர சொல்லி இருந்தான். ஆமா வெற்றி நீ எங்க இங்க?"


"வேந்தன் என்னையும் இதே போல அவசரம்னு சொல்லி தான் வரச் சொன்னான். அப்போ மூர்த்தி உனக்கும் இதே டயலாக் தானா?"


  "பின்ன தனித்தனியாவா சொல்லி இருப்பான், ஏதோ அவசரம்னு கூப்பிட்டான். அங்க எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு வந்துட்டேன், போய் பார்த்தா தானே தெரியும். திரும்ப கூப்பிட்டாலும் போன் எடுக்க மாட்டேங்கிறான். ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எதுக்காக வர சொல்லி இருப்பான்?"


  "அப்போ வேந்தன் உங்களுக்கும் கூப்பிட்டு இருந்தானா, சரி வாங்க போய் என்னன்னு பார்ப்போம்."


  இவர்கள் உள்ளே நுழையும் போது மதுவும் வேந்தனும் ஒருவர் பின் ஒருவராக கைய்யப்பம் இட்டு கொண்டிருந்தனர்.


  வேந்தன் இவர்களுக்கு இடையே நடக்கும் பதிவு திருமணத்திற்கான சான்றிதழை கடைசி பேப்பராக வைத்திருந்தான். அதனால் கையப்பமிட்டுக் கொண்டே வந்த, மதுவின் கண்களில் அது சரியாக விழவில்லை.


  ஆம் மதுவுக்கும் வேந்தனுக்கும் பதிவு திருமணம் தான் நடந்து கொண்டிருந்தது. முதலில் வேந்தன் அவளை காதலித்து, அவளின் சம்மதத்தோடு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில்தான் இருந்தான்.


  ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வேந்தனுக்கு அழைத்த வெற்றி, குருந்த மரத்தின் அடியில் இருந்து மண்ணெடுக்கப் போவதாக கூறிய செய்தியால், உடனே தமது திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அதனால் அவளுக்கேத் தெரியாமல் அனைத்து வேலைகளையும் செய்தான்.


    அவளுக்கே தெரியாமல் அவளை திருமணம் செய்து கொள்வது, அவனின் மனதிற்கு சற்று வருத்தமாக தான் இருந்தது.


      என்ன செய்வது, ஒருவேளை அவளுக்கு பூர்வஜென்மம் ஞாபகத்திற்கு வந்துவிட்டால், நிகழ்காலத்தில் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்ற அச்சமே, அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது. 


  அத்தோடு மோகினி பள்ளமும் மற்றொரு காரணமாகும். அவள் வெளிவரும் முன் தங்களது திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். 


    அதுவே வேந்தனை மதுவிற்கு தெரியாமல், தங்களது திருமணத்தை இவ்வளவு விரைவாக நடத்தி முடிப்பதற்கு முக்கிய காரணமாக ஆனது.


    வேந்தனை ஒரு பெண்ணுடன் ரிஜிஸ்டர் ஆஃபீஸில் கண்டு, அதிர்ந்து நின்ற நண்பர்கள் மூவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"டேய் மூர்த்தி யாருடா அந்த பொண்ணு?"


    "நான் சொன்னேன்ல அந்த கார் ஹெட் லைட், அதே பொண்ணு தான் இது. ஆனா இவங்க ரெண்டு பேரும் எப்போ எப்படி ஜோடி செய்தாங்கன்னு தெரியலையே?"


    நண்பர்கள் அவ்விடத்திற்கு வரும்போது, சரியாக மதுவிற்கு அவள் வீட்டில் இருந்து அழைப்பு வரவே, இவர்களிடம் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு வெளியே ஃபோன் பேசச் சென்றாள்.


    "வேந்தா இங்க என்னடா நடக்குது? அந்தப் பொண்ணு இங்க என்ன பண்ணுது? அப்புறம் எங்களையெல்லாம் எதுக்கு இங்க வர சொல்லி இருக்க?"


       "ரிஜிஸ்டர் ஆபீஸ்ல போட்டோ எடுக்கவா வருவாங்க? மேரேஜ் பண்ணிக்க தான் வந்திருக்கோம். நான் மட்டும் தனியா பண்ணுனா அது எப்படிடா மேரேஜ் ஆகும். அப்புறம் சாட்சி கையெழுத்து போட மூணு பேர் வேணுமே, அதுக்காக தான் உங்க மூணு பேரையும் கூப்பிட்டேன்."


    சரியாக அந்த நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுமாறு அலுவலகத்தில் இருந்து கூப்பிட,


  "எப்படி? வந்து சாட்சி கையெழுத்து போடப் போறீங்களா, இல்ல இன்னும் என்னை நிக்க வச்சு, விசாரணை பண்ணிட்டே இருக்க போறீங்களா?"


      தன் நண்பனின் மேலுள்ள நம்பிக்கையில், அவனுக்காக சென்று சாட்சி கையெழுத்துகளை போட்டு விட்டு வெளியே வந்தனர்.


"வேந்தா இப்பவாச்சும் சொல்லு, அந்த புள்ள எப்ப இருந்து உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சுது? முதல்ல நீங்க ரெண்டு பேரும் எப்போ எங்கடா பாத்துக்கிட்டீங்க? எப்படா காதலிக்க ஆரம்பிச்சீங்க?"


  "நான் எப்போ சொன்னேன், இது லவ் மேரேஜ்ன்னு."

Tuesday, June 10, 2025

மன்னவரே 30


 

             அத்தியாயம் 30


  வேந்தன் மதுவுடன் பி.ஆர் ஹாஸ்பிடலின் முன்பு, காரில் சென்று இறங்கினான். 


      அங்குள்ள ரிசப்ஷனில் தங்கள் பெயரை பதிந்து விட்டு, தங்கள் டோக்கன் நம்பர் வரும்வரை அங்கேயே காத்திருந்தனர்.


அவன் காரில் வரும்போதே மதுவிடம் சந்துரு மற்றும் லாவண்யாவின் காதல் கதையை பற்றி கூறிவிட்டான்.


    அவர்களின் திருமண விசயமாக தான் இவளிடம் உதவி கேட்டதாக கூறியிருந்தான்.


  "இங்க தான் லாவண்யா ஒர்க் பண்றாங்களா?"


  "ஆமா நான் இங்க ஆல்ரெடி அப்பாயிண்ட்மெண்ட் போட்டுட்டேன், டோக்கன் படி நாம உள்ள போற டைமுக்கு தான் கரெக்ட்டா வந்து இருக்கோம்னு நினைக்கிறேன்"


  "அவங்களோட சர்டிபிகேட் எல்லாத்தையும் வெளியே வைச்சே வாங்கிக்களாமே, எதுக்காக ஹாஸ்பிடல் வரைக்கும் வந்திருக்கோம். அதுவும் பேஷன்ட்டா போனாதான் அவங்களை பார்க்க முடியுமா?"


    "மினிஸ்டர் பொண்ணை அவ்ளோ சீக்கிரம் வெளியே வச்சு பார்க்க முடியாதில்ல."


      "எது மினிஸ்டர் பொண்ணா?!"


    " மினிஸ்டர்  பொண்ணுரங்கத்தோட பொண்ணு தான் லாவண்யா. இது அவங்களோட ஹாஸ்பிடல் தான்."


    "மிஸ்டர் எம்டி சார், நீங்க என்னை கோர்த்து விடனும்ங்கறதுக்காக ஒன்னும் கூட்டிட்டு வரலையே?"


    "நோ மிஸ் மதுரம். எந்த ஒரு ஆபத்தாக இருந்தாலும் என்னை மீறி தான் அது உன்னை தொடணும்."


      அவளின் கண்களை பார்த்துக் கொண்டு ஆழ்ந்த குரலில் இவன் கூற, மது  அவன் கண்களில் தெரியும் மனதின் ஆழத்தில் தொலைந்து கொண்டிருந்தாள்.


  "மிஸ்ஸஸ் மதுரயாழினி யுவேந்திர பாண்டியன்"


  மது திரும்பி வேந்தனை முறைக்க


  "அது... லாவண்யா ஒரு மகப்பேறு மருத்துவர், அர்ஜென்ட் அப்பாயின்மென்ட் வாங்க வேற என்ன சொல்றதுன்னு தெரியல அது தான்...சிஸ்டர் இங்க இருக்கோம். "


    "சார் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க, மேடம் நீங்க அந்த ரூமுக்குள்ள போய் வெயிட் அண்ட் பிபி செக் பண்ணிட்டு வந்துடுங்க."


    மது வேந்தனை முறைத்துக் கொண்டே அந்த ரூமுக்குள் சென்று பிபி மற்றும் வெயிட் பார்த்துவிட்டு வெளியில் வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.


  "என்ன சொல்லி தொலைச்சிருக்கீங்க ஹாஸ்பிட்டல்ல?"


  "அது...சும்மா ஜென்ரல் செக்கப் தான்."


    "எந்த ஜென்ரல் செக்கப்க்கு கடைசியா குளிச்ச டேட் கேக்குறாங்க?"


  "கடைசியா குளிச்ச டேட்டா? அப்ப நீ தினமும் குளிக்க மாட்டியா?"


      ஐயோ முறைக்கிறாளே முறைக்கிறாளே என்னை இப்படியே எரிச்சு சாம்பலாக்கிடுவா போல இருக்கே. இதுக்கே இப்படின்னா, இனி ரிஜிஸ்டர் ஆபீஸ்ல எப்படி சமாளிக்க போறேனோ.


    ஆபத்பாந்தவர் போல நர்ஸ் வந்து இவர்களை அழைக்க, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளுக்கு முன் இவன் நர்சை பின் தொடர்ந்தான்.


    இருவரையும் டாக்டரின் அறைக்குள் அனுப்பிவிட்டு நர்ஸ் வெளியே சென்றுவிட, லாவண்யா தான் முதலில் பேச்சை தொடங்கினாள்.


      "அண்ணா ரொம்ப தேங்க்ஸ் எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பதற்கு. இந்த கவர்ல நீங்க கேட்டா எல்லா டாக்குமெண்ட்ஸும் இருக்கு. கல்யாணத்தப்போ கரெக்டா நான் அந்த டைமுக்கு ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எப்படியாவது வந்துடுவேன்"


  "தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா உன்னோட சிச்சுவேஷன் எனக்கு தெரியும். இதுவே உன் பேரன்ட்ஸ்ட பேசி சம்மதிக்க வைக்க முடிந்திருந்தால், கண்டிப்பா நானே சந்துரு ரிஜிஸ்டர் மேரேஜ்ன்னு சொல்லும்போதே வேண்டாம்னு சொல்லி இருப்பேன்.


    நான் சந்துருகிட்ட சொன்னேன்மா, அவங்க அப்பா கிட்டயாவது இந்த விஷயத்தை சொல்லுன்னு, அவன் தான் கேட்க மாட்டேங்கிறான். 


      கல்யாணம்கிறது சாதாரணமா கடந்து போற விஷயம் கிடையாது. இந்த விஷயத்துல ஏதாவது ஒரு குடும்பத்தோட சப்போர்ட் இருந்தால் தானே நல்லா இருக்கும்."


    "அவரை ஏதும் சொல்லாதீங்கனா, நான் தான் வேண்டாம்னு சொன்னேன். உங்களுக்கே தெரியும் எங்க அப்பா அரசியல்வாதி, அவரோட நடவடிக்கை எல்லாம் எப்படி இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.


    இது இந்த ஊர் உலகத்துக்கே தெரியும். ஆனா சந்துருவோட அப்பா நேர்மை உண்மைன்னு வாழ்றவர்.


    அவர் ஹாஸ்பிடல் நடத்துவதே மத்தவங்களுக்கு உதவி செய்ய தான்.


      ஆனா இந்த ஹாஸ்பிடல்ல? இருக்கிற உயிரை எடுக்காம இருந்தா சரி. விட்டால் இறந்து போனவங்ககிட்ட இருக்கிற கிட்னியவே வித்து காசு ஆக்கலாம்னு நினைப்பாங்க.


  அவர் இப்படி சேர்க்கிற பாவம் எல்லாம் குடும்பத்தில இருக்கற, எங்க தலை மேலதான் விடியும். இப்படிப்பட்டவரோட பொண்ணை, சந்துருவோட அப்பா அவங்க வீட்டு மருமகளா ஏத்துப்பாறாண்ணா."


    மதுவிற்கு லாவண்யாவை மிகவும் பிடித்து விட்டது. தவறான வழியில் செல்லும் பெற்றவருக்கு பிறந்திருந்தாலும், நெறி தவறி நடப்பதற்கான வாய்ப்பு இருந்தும், நெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவளை எப்படி பிடிக்காமல் போகும்.


  "கையை குடுங்க மேடம், இன்னைல இருந்து நான் உங்க விசிறி ஆயிட்டேன். வாத்தியார் புள்ள மக்குன்னு சொல்லுவாங்க, அதேபோல அரசியல்வாதியோட பொண்ணா இருந்துட்டு, இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களே!


      ஒருவேளை அவரோட பொண்ணா இருக்கிறதால தான், நீங்க இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்களோ? 


    சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, ஆனாலும் நீங்க அரசியல்வாதியோட பொண்ணுன்னு ரொம்ப நல்லா நிரூபிக்கிறீங்க மேடம். ஆமா பின்ன, மூச்சு விடாமல் இவ்வளவு நீளமா டயலாக் பேசறீங்களே."


  தனது தந்தையால் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த இக்கட்டான நிலையை எண்ணி, வருந்தி கொண்டிருந்த லாவன்யா மது பேசியதை கேட்டு தன் கவலைகளை மறந்து முகம் மலர்ந்தால்.


  "இவர் இப்போதைக்கு என்னை அறிமுகப்படுத்த போறதில்ல, ஐ அம் மிஸ் மதுரயாழினி. இந்த ஹாஸ்பிடல்ல கால் வைக்கிற வரைக்கும் இவரோட பிஏவா தான் இருந்தேன்.


  உங்கள பார்க்கறதுக்காகவே இவரோட ப்ரெக்னன்ட் வைப்பா இங்க உட்கார்ந்து இருக்கேன், அத்தோட உங்களுக்கு சப்ஸ்டிடியூட்டா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல விண்ணப்பம் கொடுக்கப் போறவளும் நான் தான். "


  "ஹாய் மது என்னை நீ லாவண்யான்னே கூப்பிடலாம். ரொம்ப தேங்க்ஸ் நீ எனக்கு செய்யப் போற உதவி ரொம்ப பெருசு."


    "இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கண்டிப்பா உங்களோட நல்ல மனசுக்காகவே, இந்த கல்யாணம் நடக்கிறதுக்கு என்னால முடிஞ்ச எந்த ஹெல்ப் வேணாலும் பண்ணுவேன். இது என்னோட ப்ராமிஸ்."


  மது இப்படி கூறியதும் வேந்தனின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.


    ஆஹா இந்த அறுந்த வாலு அவளாவே கமிட் ஆகிட்டாளே, ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இவளை எப்படி சமாளிக்க போறமோன்னு ரொம்பவே கவலையா இருந்துச்சு, எப்படியோ அந்த பிராப்ளமும் இப்ப தீர்ந்தது. இவளை இப்படியே கூட்டிட்டு போய் முதல்ல வேலையை முடிக்கிற வழியை பார்க்கணும்.

Monday, June 9, 2025

மன்னவரே 29


 

             அத்தியாயம் 29


மது அந்த கோப்பினையே கோபப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, வினு கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்துக் கொண்டிருந்தாள். 


    அந்தக் கோப்பினுள் வாய்ப்பாடு (tables) ஒன்றில் இருந்து இருபது வரை எழுதிப் பார்க்குமாறு போட்டிருந்தது.


  அதனைக் கண்டுதான் மது கோபத்துடனும் வினு சிரிப்புடனும் அமர்ந்திருந்தார்கள்.


  மது அதே பார்வையை வினுவின் புறம் திருப்பி,


  "பார்த்து பார்த்து ரொம்ப சிரிக்காத எருமை, பல்லு சுளுக்கிக்க போகுது. "


    "சுளுக்கிக்கிட்ட நான் டூத் பேஸ்டால நீவி, சுளுக்கு எடுத்துக்கிறேன்."


  என்று கூறி மதுவின் தோள்களைப் பிடித்து முன்னும் புறமும் ஆட்டி எதையோ தேட,


    "ப்ச்சு என்னடி பண்ற?"


      "அது... மது மதுன்னு ஒரு மானஸ்தி இருந்தா அவளை எங்கயாச்சும் பாத்தியா? வரும்போது என்னா பேச்சு பேசினா, ஓனருக்கு அவ பிபியை ஏத்த போறாளாம்? இப்ப அவளோட பிபியை செக் பண்ணா அந்த மிஷினே வெடிச்சிடும் போல ஹா ஹா ஹா."


      "இருக்கு டி  அவனுக்கு இருக்கு. எனக்கு இருக்க கோபத்துக்கு அவன் மட்டும் என் கையில சிக்கட்டும் அப்பறம் இருக்கு."


    சரியாக அந்த நேரத்தில்தான், வேந்தன் மதுவின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.


"ஹலோ யாருங்க?"


           "நான்... நான் மது பேசறேன்"


"மது???"


  "உங்க அர்ஜென்ட் பிஏவா ஜாயின் பண்ணி இருக்க, அதே மது தான்."


  "ஓ மிஸ் மதுரம் நீங்க கரெக்டான நேரத்தில் தான் கூப்பிட்டு இருக்கீங்க. உங்களால எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா?"


அவன் குரலில் ஒரு வித பதட்டத்தை உணர்ந்த மது,


  "சொல்லுங்க என்னால முடிஞ்சா கண்டிப்பா உதவி செய்யறேன்."


        "நான் இன்னும் ஒரு ஒன் ஹவர்ல ஆபீஸ்க்கு வரேன். நீங்க கொஞ்சம் தயாரா இருக்க முடியுமா? என் கூட ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கும். என் பிரண்டோட லவ்வருக்கு ஒரு பிராப்ளம், நான் மட்டும் தனியா போய் பேச முடியாது அந்தப் பொண்ணு கிட்ட, அதனாலதான் உங்கள கூப்பிடறேன்."


   "ஓகே சார் நான் ரெடியா இருக்கேன்."


  "தேங்க்யூ மிஸ் மதுரம் நேர்ல பார்க்கலாம் பை."

     

  அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த வினு,


"இதுதான் உங்க ஊர்ல கோபமா பேசறதா?"


  "அது அது அவர் ஏதோ பிரச்சனைன்னு சொன்னாரு, அதோட அவர் ஏதோ பதட்டத்தில பேசற மாதிரி இருந்தது. இப்ப நேர்ல வரத்தானே போறார் அப்புறம் பேசிக்கறேன்."


  "ஓஓஓஓஓ கோபத்துல அவனா இருந்தவர் இப்போ அவரா மாறியாச்சு? நீ உங்க அவர் மேல காட்ட போற கோபத்தை, நானும் பார்க்கத்தானே போறேன் 


    சரி சரி...இந்தாம்மா குழந்தைபுள்ள, போய் வாய்ப்பாடு எழுது போ, டீச்சர் வந்தரப்போறாங்க. அப்புறம் இங்க பென்ச் கூட இல்ல, சேர் மேல ஏறி நிக்க வச்சுற போறாரு."


    வினு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இதனைக் கூற, அதற்கு பரிசாக மதுவின் கைகளால் மீண்டும் பல அடிகளை பரிசாக பெற்றுக் கொண்டாள்.


  இங்கு வேந்தனோ வரவேற்பறை சுவற்றில் மாட்டியிருந்த மதுவின் புகைப்படத்தை, தன் அலைபேசியில் யாருக்கும் தெரியாமல் பதிவு செய்து கொண்டு, குடும்பத்தாரிடம் சென்றான்.


    வேந்தன் வந்து பார்க்கும் போது, சிவராமன் தனது தாயின் மடியில் தலை வைத்து அவரின் கால் அடியில் அமர்ந்திருந்தார். அங்கு ஒரு பாசப் போராட்டம் நடந்ததை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.


  அந்தக் காலத்திலேயே தனது தாயின் வாக்குறுதிக்காக, தன் தந்தையை எதிர்த்து நின்ற இவரை வேந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது.


      வேந்தனை வடிவுப்பாட்டி அங்குள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க, அமுதனுடன் சிறிது நேரத்திலேயே சரளமாக பேச ஆரம்பித்து விட்டான்.


    "அம்மா நான் மதுவுக்கு போன் பண்ணி வரச் சொல்லவா? அவ மட்டும் வீட்ல இல்லாதது ஒரு மாதிரி இருக்கு. பாட்டிங்களும் அவளை பார்த்த மாதிரி இருக்குமே."


  அச்சச்சோ நான் இங்க இருக்கிறதை உன் தங்கச்சி பார்த்தா என் பிளான் எல்லாம் என்ன ஆகிறது என்று எண்ணிய வேந்தன்,


    "ஒன்னும் அவசரம் இல்ல. பாட்டிங்க இரண்டு பேரும் இரண்டு நாளைக்கு இங்கதான் தங்க போறாங்க. உங்க தங்கச்சி பொறுமையா வந்தால் போதும்."


    "என்ன ராசா நீங்க வாங்கன்னுட்டு, உனக்கு அமுதேன் மச்சான் முறை தானே, அவனை மச்சான்னே கூப்பிடு. நீ மாப்பிள்ளைன்னு கூப்பிடனும் அமுதா. உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டால் தானே நல்லா இருக்கும். "


    இருவரும் சிரித்துக்கொண்டே தலையாட்டி கொண்டனர்.

 

  ஒரு கோர ராட்சச அரக்க சிலையின் முன் படுக்க வைக்கப்பட்டிருந்தால் நிரஞ்சனா.


  அவளைச் சுற்றி ரத்தத்தால் மந்திர கோடுகள் வரையப்பட்டிருந்தது.   


    எப்போதுமே வெள்ளை உடை அணிந்து கொண்டிருக்கும் குருஜி, சிவப்பு வண்ண ஆடை அணிந்து கருப்பு மையை அங்கங்களில் எல்லாம் பூசி, மண்டை ஓடுகளால் ஆன மாலை அணிந்து வேள்வி தீயினை வளர்த்துக் கொண்டிருந்தான்.


  அவனைச் சுற்றி அவனைப் போலவே உடைய அணிந்து, மை பூசிய மனிதர்கள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர்.


  காற்றில் எங்குமே ரத்த வாசம் பரவி துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.


  ரஞ்சிக்கு தன்னைச் சுற்றி ஏதோ நடக்கின்றது என்று உணர முடிந்தது. ஆனால் என்ன முயன்றும் அவளால் கண்களை திறக்க முடியவில்லை.


  ஏதோ ஒரு பாரம் தன் உடம்பை போட்டு அழுத்துவது போல உணர்ந்தால், அவளால் தனது கை கால்களை எவ்வளவு முயன்றும் அசைக்க முடியவில்லை. காதுகளில் ஒலிக்கும் மந்திரங்கள், செவி நரம்புகளை வெடிக்கச் செய்வது போல் இருந்தது.


அவ்வப்போது அவள் மீது தெளிக்கப்பட்ட ரத்த துளிகளால், அவளின் உடல் அதிர்ந்து கொண்டேயிருந்தது.


    ஒரு அலங்கரிக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மையானது ரத்தத்தில் தோய்த்து எடுத்து, வேள்விக்கு அருகே பூஜையில் வைக்கப்பட்டிருந்தது.


  குருஜி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவன் மந்திரங்களை விடாமல் முழங்கிக் கொண்டிருக்க,  ஒருவன் அந்த பொம்மையை எடுத்து ரஞ்சியின் மணிக்கட்டில் வைத்து அழுத்தினான்.


    அவளின் உடல் ஒரு அடிக்கு மேலே காற்றில் மிதந்தது. அவளது கண்கள் திறந்து, பார்வையானது மேலே நிலைக்குத்தி நின்றிருந்தது.

Sunday, June 8, 2025

மன்னவரே 28


 

            அத்தியாயம் 28


  மது நேரத்திலேயே அலுவலகம் செல்ல வேண்டும் என்று கூறியதால், அவளை எழுப்ப வந்த அவளின் தாய் லட்சுமி, இவள் அலறியதைக் கண்டு ஐந்து அடி தள்ளிப் போய் விழுந்தார்.


    தன் தாய் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து, மது எழுந்து வந்து அவரை தூக்க, அவர் அவளை கன்னத்தில் ஒரு இடி இடித்து விட்டு,


    "எதுக்குடி இந்தக் கத்து கத்துன? ஆபீஸ்க்கு நீ இன்னைக்கு நேரத்துல போகணும்னு சொன்னதால தானே உன்னை எழுப்ப வந்தேன். அதுக்கு எதுக்குடி இப்படி கத்தற?"


திரு திருவென முழித்த மது,


    "அது...அது...அதிகாலையில இப்படி கத்துனா அஷ்டலட்சுமிகளும் நம்ம வீடு தேடி வரும்னு சொல்லி கேள்விப்பட்டம்மா அது தான் கத்திப் பார்த்தேன்."


  இந்த வாய்க்காகவே சில பல கோட்டுகளை, பரிசாக தன் தலையில் பெற்றுக்கொண்டு, குளியலறைக்குள் புகுந்தால் மது,


      நீர்திவளைகள் தன் தலை மீது விழும் போது, கனவுகள் அனைத்தும் கலைந்து போனது போன்று ஒரு உணர்வு இருந்தது மதுவிற்கு, எவ்வளவு முயன்றும் நினைவலைகளை அவளால் மீட்டெடுக்க முடியவில்லை.


  தலையினை உலுக்கி கொண்டு நிகழ்காலத்தோடு ஒன்றிட எண்ணினால்.


      இன்று வினு அதிகாலையிலேயே, மதுவின் வீட்டிற்கு கிளம்பி வந்து விட்டாள்.


  அரக்க பறக்க ரெடியாகி வந்த மது, அம்மாவின் திட்டுகளோடு, அவர் தந்த உணவையும் மென்று முழுங்கி விட்டு, வினுவுடன் வேந்தனின் அலுவலகம் நோக்கி புறப்பட்டாள்.


  "அடுத்தவங்களுக்கு பிரச்சனை கொடுத்து, வேடிக்கை பார்க்கிற உன்னையே, அந்த ஓனர் இப்படி அரக்க பறக்க ரெடியாக வைச்சுட்டாரே இதுக்காகவே அவர பாராட்டியாகனும்."


      "அதிக சந்தோஷம் கொள்ளாதீர்கள் மன்னா, என்னை இப்படி உருண்டோட வைத்த குற்றத்திற்காகவே, நான் அந்த ஆபீஸிலிருந்து வெளி வருவதற்குள், உங்கள் ஓனரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்து, அவரை தலை தலையாய் அடித்து கொள்ளும்படி செய்கிறேனா இல்லையா என்று பாருங்கள்."


    "அட என் மங்குனி அமைச்சரே, ஏற்கனவே தாங்கள் நன்றாக...செய்த செயலுக்காகத்தான் தற்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம்."

   

  "அதனால் தங்கள் திருவாயை மூடிக்கொண்டு, குரங்கு சேட்டை எதுவும் செய்யாமல் இருந்தாலே நல்லது."


    மது வினுவை முறைத்து கொண்டே பார்ப்போம் பார்ப்போம் என்றிட,


  "அதுதானே தாங்கள் திருந்தி விட்டால் இந்த பூமி சுற்றுவதை நிறுத்தி விடாதா என்ன? அப்பறம் இந்த உலகம் என்ன ஆவது இந்த உலகில் வாழும் ஜீவராசிகளின் கதி என்ன ஆவது?"


      "போதும் டி உன் புது ஒனரை, சரி சரி நம்ம...நம்ம புது ஒனரை நான் எதுவும் செய்யல சரியா."


    அவர்கள் அலுவலகம் வந்து சேர்ந்த போது, அந்த ஆபீஸை சேர்ந்த பியூன் மட்டுமே அங்கு இருந்தார். அவர் அவர்களிடம் வந்து,


  “சார் கொடுக்கச் சொன்னார்.”

என்று ஒரு கோப்பினை கொடுத்துவிட்டு,  


    “இதுல நீங்க பாக்க வேண்டிய வொர்க்கும், ஏதாவது சந்தேகம்னா கேக்குறதுக்கு சாரோட போன் நம்பரும், இருக்கிறதாக சொல்ல சொன்னார்.”


     என்று கூறிச் சென்றார்.


  அவர் கொடுத்து சென்ற கோப்பினை திறந்துப் பார்த்த வினு விழி விரித்து நிற்க, அவள் அவ்வாறு நிற்பதைக் கண்டு அப்படி என்னவா இருக்கும் என்று அதனை வாங்கிப் பார்த்த மதுவின் கண்களில் சிகப்பு நிறம் ஏறியது.


  வினுவோ கோப்பினில் உள்ளவற்றை படித்துவிட்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.


  மது தன் கையில் இருந்த கோப்பினால் அவளின் தலையில் அடித்து விட்டு, கோப்பினில் இருந்த வேந்தனின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தாள்.


  ஆனால் அவனோ இவள் அழைப்பை ஏற்காமல், மதுவின் ரத்த அழுத்தத்தை எகிற செய்து கொண்டிருந்தான்.


      "அடேய், என் உசுர எடுக்கவே பொறந்தவனே, போனை எடுத்து தொலையேன்டா."


    இங்கு இவளை ஹைப்பிச்சில் கத்த வைத்த வேந்தனோ, அங்கு அவளின் வீட்டுக் கதவை தட்டிக் கொண்டிருந்தான்.


      ஆஸ்பத்திரியில் உள்ள பூவுப்பாட்டியை சென்று காண, தயாராகி கொண்டிருந்த சிவராமன் குடும்பத்தார் வாசலில் அரவம் கேட்கவும், யார் என்று சென்று பார்த்தனர்.


      முதலில் வேந்தனைக் கண்டு யார் என்று அடையாளம் தெரியாமல் லட்சுமியம்மா விசாரிக்க அவன், 


    "என்னை உங்களுக்கு தெரியாது, ஆனால் இவங்களை உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்."


    என்று  தனக்குப் பின் நின்றிருந்த பூவுப்பாட்டியையும் வடிவுப்பாட்டியையும் காட்டினான்.

   

  தன் அத்தையை கண்டு, இது பிரம்மை தானோ என்று அதிர்ந்து நின்ற லட்சுமி அம்மாவை, அமுதன் வந்து உலுக்கிய பிறகே சுயநினைவுக்கு வந்தார்.


  பசுவைக் கண்ட கன்றாக, தனது வளர்ப்புத் தாயை கட்டிக்கொண்டு கதறி அழ தொடங்கி விட்டார் லட்சுமியம்மா.


  "என் ராசாத்தி நாஞ்சாகறதுக்குள்ள உன்ன பாத்து மன்னிப்பு கேட்கணுமுன்னு நினைச்சேன் தாயி, என்னை மன்னிச்சிடும்மா."


"அச்சோ என்னத்தே இது, எதுக்கு இப்படி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லறீங்க."


    "இல்ல தாயி என்ற அண்ணன் சாகும்போது, உன்னை என் மகமாரி பாத்துக்குறேன்னு சொன்னேன், ஆனா அந்த வாக்குறுதியை என்னால காப்பாத்தவே முடியலயே."


      "நீங்க வேற உங்க மகன் வேறயாத்தே, அவர் என்னை மகாராணி மாதிரி பார்த்துக்கிறாரு."


  "அடி மகளே உங்க அத்தை கிட்ட இருந்து பார்வையை இங்கிட்டும் திருப்புடியம்மா, நானும் என் பேரனும் கூடத்தான் வந்திருக்கோம். எங்களை இப்படியே வாசலோட வழியனுப்பி வைச்சிடலாம்னு நினைச்சுட்டு இருக்கிறயா."


  "அச்சோ வடிவுசித்தி அப்படியெல்லாம் இல்ல. உள்ளே வாங்க, இது உங்க வீடு வாங்க வாங்க. நாங்க எல்லோரும் அத்தையை பார்க்கலாம்னு தான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பிட்டு இருந்தோம்."


  உள்ளே வந்தவர்களிடம் தன்மகன் கனியமுதனை அறிமுகம் செய்து வைத்தார்.


  "எஞ்சாமி உன்ன பாக்குறதுக்கு, இந்த கிழவிக்கு இத்தனை வருஷம் ஆயிருக்கே. அப்படியே உருவத்துல எங்க அண்ணனை உரிச்சி வச்ச மாதிரி பிறந்திருக்கப்பு" 


  "உருவம் மட்டும் இல்லத்தே குணத்துலயும் அவன் உங்க அண்ணணை போலத்தான். அவந்தங்கச்சின்னா அவனுக்கு உசுரு. என்நேரமும் அவள வம்பு இழுத்திட்டே இருந்தாலும், அவ முகம் வாடக் கூட விடமாட்டான்."


  அப்போதுதான் வேந்தனுக்கு மதுவின் ஞாபகம் வந்தது. தனது அலைபேசியை எடுத்து பார்த்தவன், அதில் பலமுறை இவனுக்கு மது அழைத்திருந்ததாக காண்பிக்க, எதற்காக அவள் அழைத்திருப்பாள் என்பதை புரிந்து கொண்ட வேந்தன், விஷமப் புன்னகையுடன் திரும்ப அவளுடைய அலைபேசிக்கு அழைத்தான்.

Saturday, June 7, 2025

மன்னவரே 27


 

             அத்தியாயம் 27

       

சிவராமன் மேலூரை விட்டு வந்தாலும் அங்கிருக்கும் தனது நண்பர்களின் மூலமாக அவரின் குடும்பத்தை பற்றியும், தன் தாயின் உடல்நிலை பற்றியும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டார்.


    நேற்று இரவில் இருந்தே ஏதோ மனதிற்கு நெருடலாக இருக்க, இன்று தன் நண்பரிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார்.


    அப்போது தான் தனது அன்னைக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சென்று பார்க்க இயலாத தனது நிலையை எண்ணி மிகவும் வருந்தினார்.


    அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி படுக்க வைத்து விட்டு மனபாரத்துடன் தான் வெளியில் வந்தார் லட்சுமியம்மா.


      அப்பாவை பற்றி கேட்ட பிள்ளைகளிடம் அவருக்கு தலைவலி என்று கூறி சமாளித்தார்.


      மது, தான் நாளை காலை ஏழு மணிக்கே அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று தன் அன்னையிடம் கூறிவிட்டு உணவை முடித்துக் கொண்டு படுக்கச் சென்று விட்டாள்.


      அமுதன் மட்டும் தன் அன்னை கூறியதை நம்பாமல், மது சென்ற பிறகு அவரை பிடித்து விசாரித்தான்.


      தன் மனபாரத்தை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தவித்த லட்சுமியம்மா, தான் பெற்ற மகனிடம் மடைத்திறந்த வெள்ளமாக, தங்கள் முழு கதையையும் கூறினார்.


      அமுதனுக்கு தன் தந்தையை எண்ணி கவலையாக இருந்தது, என்ன ஆனாலும் பரவாயில்லை, நாளை தன் தாய் தந்தையை கூட்டிக்கொண்டு தமது பாட்டியை காண செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டான்.


    தன் அலுவலகத்திற்கு அழைத்து நாளை தனக்கு விடுப்பு கூறிவிட்டு, தன் அன்னையிடம், பாட்டி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரியை பற்றி தந்தையிடம் விசாரிக்குமாறு கூறினான்.


      இங்கு இப்படி இருக்க, வேலப்பன் ஐயாவின் வீட்டில் அனைவரும் பதட்டத்துடன் இருந்தனர்.


    ஏற்கனவே தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலையினை என்னை வருத்தத்தில் இருந்தவர், தனது பேத்தி காணாமல் போனது தெரிந்ததும், முற்றிலுமாக உடைந்து விட்டார் வேலப்பன் ஐயா.


    எவ்வளவு முயன்றும் நிரஞ்சனா எங்கு சென்றாள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.


  அவளது அலைபேசியினை ட்ராக் செய்ய முயன்ற போது, அது ஆஸ்பத்திரிக்கு அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.


    அந்த தொலைபேசியில் ஒரு ஆடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டு, அடுத்த நாள் அலாரம் அடிக்குமாறு செட் செய்யப்பட்டு இருந்தது.


    அதை திறந்து பார்த்த தீபன்,

வேலப்பன் ஐயாவின் வீட்டில் அனைவரும் கேட்குமாறு, அந்த ஆடியோவை ஓட விட்டான்.


    அதில் தனது பாட்டி கீழே விழுந்ததை காரணமாக வைத்து, தனது திருமணத்தை முன்னிறுத்துவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், இந்த நிலைக்கு தன்னை ஆளாக்கியதற்காக, தன் குடும்பத்தை வெறுப்பதாகவும் அதனால் இரண்டு மூன்று நாட்கள் தனது தோழியுடன் சென்று தனிமையில் இருக்க விரும்புவதாகவும் கூறி, நிரஞ்சனாவின் குரலில் ரெக்கார்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது.


      இதனைக் கேட்ட குடும்பத்தாருக்கு வேதனையாக இருந்தது. மாறனால் இதை நம்ப முடியவில்லை,பாட்டியின் இத்தகைய நிலைக்கு தாங்கள் தானே காரணம். அதை வைத்து தானே திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

   

      தன் தங்கை தனக்குத் தெரியாமல் ஏதும் திட்டம் போட்டு இருக்கிறாளா என்று தெரியாமல், முழித்துக் கொண்டிருந்தான். தன் தங்கை தன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டாள் என்று நம்பிக்கையும் அவனிடம் இருந்தது.


  எனவே யாருக்கும் தெரியாமல் அவளை தேட முடிவெடுத்தான்.   


    அவனுடைய தாய் தந்தையருக்கு  இந்த பெண் இப்படி செய்து விட்டாளே என்று, மற்றவர் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல், தலை குனிந்து நின்றனர்.


            அண்ணன் தங்கையின் ரகசியமறிந்தவர்கள், இது இவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டனர்.

  ஆகவே ரஞ்சி அவளாகவே வரட்டும் என்று அவளைத் தேடும் பணியை விட்டு விட்டனர்.


  இரவு, வேந்தனது பதட்டமான முகத்தையே நினைத்துக் கொண்டு படுத்திருந்த மதுவிற்கு தூக்கமே வரவில்லை. எதற்காக அப்படி பதறி கொண்டு சென்றான் என்று யோசித்துக் கொண்டிருந்தால்.


    உனக்கேன் இவ்வளவு அக்கறை அந்த ஆபீஸில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று, பராசக்தி டயலாக் பேசிய தனது மனசாட்சியை தலையில் தட்டி ஓரம் போக சொல்லிவிட்டு, அதை நினைத்துக் கொண்டே படுத்திருந்தால்.


    கட்டிலில் உருண்டு புரண்டு பார்த்தும் நித்திரா தேவி அவளை தழுவாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தாள். விடியும் வேளையில்தான் சற்று கண் அயர்ந்தால் மது.


  கனவிலும் உன்னை தனியே விடுவேனா! என்று துரத்தி வந்து விட்டான் வேந்தன்.


    அவளது மனக்கண்ணில் தெளிவில்லாத சில காட்சிகள் அரங்கேறின.


  நீரினுள் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனை அவன் தலை முடியினை பற்றிக் கொண்டு, நீருக்கு மேலே இழுத்து வந்தாள்  நீலவிழி சிறுமி ஒருத்தி.


அந்தக் காட்சியானது அப்படியே புகை போல களைந்து போக, ஒரு குளத்தின் அருகே பதினோரு வயதில் ஒரு சிறுவனும் ஐந்து வயதான ஒரு சிறுமியும் மகிழ்வுடன் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது.


    அச்சிறுவன், மதுரா ஓடாதே நிச்சயம் உன்னை பிடித்து விடுவேன் என்று கூறிக் கொண்டே துரத்த, அச்சிறுமியும் உன்னால் முடிந்தால் என்னை பிடித்து பார் தீரா என்று அச்சிறுவனுக்கு போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தாள்.


  அக்காட்சியும் அப்படியே புகை போல களைந்து போக அடுத்து, வீர முகம்தனை தாங்கி, செம்பழுப்பு வண்ணத்தில் மிளிரும் ஒரு சிலையை கண்டால், அதன் கண்கள் நீல நிறத்தில் ஒளி வீசி கொண்டிருந்தது.


      அந்த தேவியின் சிலை அருகே, தான் ஒரு நூலாடை அணிந்து காட்டுவாசி பெண் போன்ற தோற்றத்தில் கண்மூடி தியானத்தில் இருந்ததை கண்டால்.


    தனக்கு அருகில் புன்னகை தழும்பிய முகத்துடன் அமர்ந்திருந்த வேந்தன், தன் கைகளில் இருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்தான்.


      பதறிக்கண்விழித்தவள் அதிர்ந்த பார்வையோடு தன் நீல விழி கொண்டு அவனை பார்த்து, தீரா என்று அழைத்திட, புன்னகையுடனே தனது கழுத்தில் இருந்த பதக்கம் பொருந்திய சங்கலியை கழட்டி, அவள் கழுத்தினில் அணிவித்தவன்,


      "ஆம் மதுரா, இனி இந்த ஜென்மம் மட்டுமல்ல நான் பிறப்பெடுக்கும் எந்த ஜென்மத்திலும், நான் உனது தீரன் மட்டுமே. இது அந்த அன்னை கொற்றவை மீது ஆணையாக நான் உனக்கு அளிக்கும் வாக்குறுதி."


    தன் நீல விழிகளில் கண்ணீர் சூழ பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வேந்தனுக்கு பின்னால் இருந்த குகை வழியே, சர்வ அலங்காரத்துடன் இருந்தாலும், கோபத்தினால் முகம் விகாரமாக இருக்க, தன் கைகளில் உள்ள வாளினை ஓங்கிக்கொண்டு வந்தவளை கண்டு, அலறிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தமர்ந்தால் மது நிகழ்காலத்தில்.