Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, June 7, 2025

மன்னவரே 27


 

             அத்தியாயம் 27

       

சிவராமன் மேலூரை விட்டு வந்தாலும் அங்கிருக்கும் தனது நண்பர்களின் மூலமாக அவரின் குடும்பத்தை பற்றியும், தன் தாயின் உடல்நிலை பற்றியும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டார்.


    நேற்று இரவில் இருந்தே ஏதோ மனதிற்கு நெருடலாக இருக்க, இன்று தன் நண்பரிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார்.


    அப்போது தான் தனது அன்னைக்கு அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சென்று பார்க்க இயலாத தனது நிலையை எண்ணி மிகவும் வருந்தினார்.


    அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி படுக்க வைத்து விட்டு மனபாரத்துடன் தான் வெளியில் வந்தார் லட்சுமியம்மா.


      அப்பாவை பற்றி கேட்ட பிள்ளைகளிடம் அவருக்கு தலைவலி என்று கூறி சமாளித்தார்.


      மது, தான் நாளை காலை ஏழு மணிக்கே அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று தன் அன்னையிடம் கூறிவிட்டு உணவை முடித்துக் கொண்டு படுக்கச் சென்று விட்டாள்.


      அமுதன் மட்டும் தன் அன்னை கூறியதை நம்பாமல், மது சென்ற பிறகு அவரை பிடித்து விசாரித்தான்.


      தன் மனபாரத்தை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தவித்த லட்சுமியம்மா, தான் பெற்ற மகனிடம் மடைத்திறந்த வெள்ளமாக, தங்கள் முழு கதையையும் கூறினார்.


      அமுதனுக்கு தன் தந்தையை எண்ணி கவலையாக இருந்தது, என்ன ஆனாலும் பரவாயில்லை, நாளை தன் தாய் தந்தையை கூட்டிக்கொண்டு தமது பாட்டியை காண செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டான்.


    தன் அலுவலகத்திற்கு அழைத்து நாளை தனக்கு விடுப்பு கூறிவிட்டு, தன் அன்னையிடம், பாட்டி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்பத்திரியை பற்றி தந்தையிடம் விசாரிக்குமாறு கூறினான்.


      இங்கு இப்படி இருக்க, வேலப்பன் ஐயாவின் வீட்டில் அனைவரும் பதட்டத்துடன் இருந்தனர்.


    ஏற்கனவே தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலையினை என்னை வருத்தத்தில் இருந்தவர், தனது பேத்தி காணாமல் போனது தெரிந்ததும், முற்றிலுமாக உடைந்து விட்டார் வேலப்பன் ஐயா.


    எவ்வளவு முயன்றும் நிரஞ்சனா எங்கு சென்றாள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.


  அவளது அலைபேசியினை ட்ராக் செய்ய முயன்ற போது, அது ஆஸ்பத்திரிக்கு அருகில் இருக்கும் குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.


    அந்த தொலைபேசியில் ஒரு ஆடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டு, அடுத்த நாள் அலாரம் அடிக்குமாறு செட் செய்யப்பட்டு இருந்தது.


    அதை திறந்து பார்த்த தீபன்,

வேலப்பன் ஐயாவின் வீட்டில் அனைவரும் கேட்குமாறு, அந்த ஆடியோவை ஓட விட்டான்.


    அதில் தனது பாட்டி கீழே விழுந்ததை காரணமாக வைத்து, தனது திருமணத்தை முன்னிறுத்துவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், இந்த நிலைக்கு தன்னை ஆளாக்கியதற்காக, தன் குடும்பத்தை வெறுப்பதாகவும் அதனால் இரண்டு மூன்று நாட்கள் தனது தோழியுடன் சென்று தனிமையில் இருக்க விரும்புவதாகவும் கூறி, நிரஞ்சனாவின் குரலில் ரெக்கார்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது.


      இதனைக் கேட்ட குடும்பத்தாருக்கு வேதனையாக இருந்தது. மாறனால் இதை நம்ப முடியவில்லை,பாட்டியின் இத்தகைய நிலைக்கு தாங்கள் தானே காரணம். அதை வைத்து தானே திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

   

      தன் தங்கை தனக்குத் தெரியாமல் ஏதும் திட்டம் போட்டு இருக்கிறாளா என்று தெரியாமல், முழித்துக் கொண்டிருந்தான். தன் தங்கை தன்னிடம் சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டாள் என்று நம்பிக்கையும் அவனிடம் இருந்தது.


  எனவே யாருக்கும் தெரியாமல் அவளை தேட முடிவெடுத்தான்.   


    அவனுடைய தாய் தந்தையருக்கு  இந்த பெண் இப்படி செய்து விட்டாளே என்று, மற்றவர் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல், தலை குனிந்து நின்றனர்.


            அண்ணன் தங்கையின் ரகசியமறிந்தவர்கள், இது இவர்களின் அடுத்த திட்டமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டனர்.

  ஆகவே ரஞ்சி அவளாகவே வரட்டும் என்று அவளைத் தேடும் பணியை விட்டு விட்டனர்.


  இரவு, வேந்தனது பதட்டமான முகத்தையே நினைத்துக் கொண்டு படுத்திருந்த மதுவிற்கு தூக்கமே வரவில்லை. எதற்காக அப்படி பதறி கொண்டு சென்றான் என்று யோசித்துக் கொண்டிருந்தால்.


    உனக்கேன் இவ்வளவு அக்கறை அந்த ஆபீஸில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று, பராசக்தி டயலாக் பேசிய தனது மனசாட்சியை தலையில் தட்டி ஓரம் போக சொல்லிவிட்டு, அதை நினைத்துக் கொண்டே படுத்திருந்தால்.


    கட்டிலில் உருண்டு புரண்டு பார்த்தும் நித்திரா தேவி அவளை தழுவாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தாள். விடியும் வேளையில்தான் சற்று கண் அயர்ந்தால் மது.


  கனவிலும் உன்னை தனியே விடுவேனா! என்று துரத்தி வந்து விட்டான் வேந்தன்.


    அவளது மனக்கண்ணில் தெளிவில்லாத சில காட்சிகள் அரங்கேறின.


  நீரினுள் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனை அவன் தலை முடியினை பற்றிக் கொண்டு, நீருக்கு மேலே இழுத்து வந்தாள்  நீலவிழி சிறுமி ஒருத்தி.


அந்தக் காட்சியானது அப்படியே புகை போல களைந்து போக, ஒரு குளத்தின் அருகே பதினோரு வயதில் ஒரு சிறுவனும் ஐந்து வயதான ஒரு சிறுமியும் மகிழ்வுடன் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது.


    அச்சிறுவன், மதுரா ஓடாதே நிச்சயம் உன்னை பிடித்து விடுவேன் என்று கூறிக் கொண்டே துரத்த, அச்சிறுமியும் உன்னால் முடிந்தால் என்னை பிடித்து பார் தீரா என்று அச்சிறுவனுக்கு போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தாள்.


  அக்காட்சியும் அப்படியே புகை போல களைந்து போக அடுத்து, வீர முகம்தனை தாங்கி, செம்பழுப்பு வண்ணத்தில் மிளிரும் ஒரு சிலையை கண்டால், அதன் கண்கள் நீல நிறத்தில் ஒளி வீசி கொண்டிருந்தது.


      அந்த தேவியின் சிலை அருகே, தான் ஒரு நூலாடை அணிந்து காட்டுவாசி பெண் போன்ற தோற்றத்தில் கண்மூடி தியானத்தில் இருந்ததை கண்டால்.


    தனக்கு அருகில் புன்னகை தழும்பிய முகத்துடன் அமர்ந்திருந்த வேந்தன், தன் கைகளில் இருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்தான்.


      பதறிக்கண்விழித்தவள் அதிர்ந்த பார்வையோடு தன் நீல விழி கொண்டு அவனை பார்த்து, தீரா என்று அழைத்திட, புன்னகையுடனே தனது கழுத்தில் இருந்த பதக்கம் பொருந்திய சங்கலியை கழட்டி, அவள் கழுத்தினில் அணிவித்தவன்,


      "ஆம் மதுரா, இனி இந்த ஜென்மம் மட்டுமல்ல நான் பிறப்பெடுக்கும் எந்த ஜென்மத்திலும், நான் உனது தீரன் மட்டுமே. இது அந்த அன்னை கொற்றவை மீது ஆணையாக நான் உனக்கு அளிக்கும் வாக்குறுதி."


    தன் நீல விழிகளில் கண்ணீர் சூழ பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வேந்தனுக்கு பின்னால் இருந்த குகை வழியே, சர்வ அலங்காரத்துடன் இருந்தாலும், கோபத்தினால் முகம் விகாரமாக இருக்க, தன் கைகளில் உள்ள வாளினை ஓங்கிக்கொண்டு வந்தவளை கண்டு, அலறிக் கொண்டு கட்டிலில் இருந்து எழுந்தமர்ந்தால் மது நிகழ்காலத்தில்.

No comments:

Post a Comment