Search This Blog

Followers

Powered By Blogger

Tuesday, May 13, 2025

மன்னவரே 01

 


               அத்தியாயம் 1

ஆற்றங்கரையை ஒட்டிய அழகிய பூஞ்சோலை. பூ மரங்களின் நடுவே பூவோ! என நினைக்க தோன்றுமாறு அமர்திருந்தாள் அந்த பெண் பாவை.

        தன் கண்மலர் திறந்து கைநீட்டி அழைக்கின்றாள், தன் மனங்கவர்ந்த மன்னவனை நோக்கி திருவாய் மலர்ந்து தன் நீல கண்கள் மின்னிட,

என்னவரே என் மன்னவரே!

நினைவில்லையோ இப்பூவையை?

காட்டுபூவை நான் 

உனக்காக காத்திருந்து சருகானேன்.

உயிரோடு புதைந்தேனே 

உனை காண தவித்தேனே!

இன்னும் ஏனோ தாமதம்

எனை வந்து சேர்ந்திடவே,

கன்னி இவள் மனது 

கலங்கித்தான் போனதடா,

மன்னவனே உன் மார்பினில்

துயில் கொள்ள ஏங்குதடா,

எனை மறந்தாயோ 

என் மன்னவா!

        ஆடவன் இவன் அமிழ்ந்து தான் போகின்றான். அந்த நீல விழி நயனங்களில் உயிர் பதற வாரி சுருட்டிக்கொள்ளதான் நினைக்கின்றான் அப்பூம்பாவையை.

        எட்டி பிடிக்க நினைத்து கட்டிலில் இருந்து உருளுகின்றான் வேந்தனவன்.

      ஆறடி உயர ஆண்மகன் இவன்,தன் கன்னகுழி சிரிப்பினிலே காண்போரை ஈர்த்திடுவான், கூர் நாசி எனக்கு கோபம் கொஞ்சமே கொஞ்சம் அதிகமென உரைக்கின்றதோ!

     கற்றை மீசைக்கு கீழ் ஒளிந்துள்ள அதரங்கள், நான் டீடோட்டளர் என்றுதான் மொழிகின்றனவோ! மொத்ததில் திராவிட நிறத்தில் காண்போரை ரசிக்க வைக்கும் மன்னவனே இவன்.

     வேந்தன் எனும் யுவேந்திர பாண்டியன். தன் பதினெட்டு வயது தொட்டு வரும் இக்கனவில் இருந்து, மீள முடியாது தவித்து நிற்கின்றான்.

      வேந்தன் கீழே விழுந்து உருண்டதோட அல்லாமல், அவனுக்கு பக்கத்தில் படுத்திருந்த அவன் அத்தை மகன் மூர்த்தியையும் சேர்த்து இழுத்துக் கொண்டு உருண்டதில், அதிர்ந்து போன அவனோ தலையில் கையை வைத்து கண்ணைமூடிக் கொண்டே கத்த ஆரம்பித்து விட்டான்.

        நேற்று தன் மனைவியிடம் வாயைக்குடுத்து இவன் வம்பிழுத்திருக்க, அவள் இவன் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக விரட்டிவிட்டு விட்டாள், அவளை நினைத்துக் கொண்டே படுத்திருந்தவனை திடீரென்று வேந்தன்  இழுத்துக் கொண்டு கீழே உருள, இந்த தள்ளுமுள்ளுவில், எங்கே தன் மனைவி  தான் வந்துவிட்டாளோ என்று நினைத்து, கத்த தொடங்கி விட்டான்.
         
              “ஐய்யய்யோ கோதாவரி கோது  கோதுக்குட்டி, ஏ வெல்லகட்டி நாபோய் உன்ன திட்டுவனா? என்னை நம்புடி செல்லம்.”

            வேந்தன் இவனை பார்த்துவிட்டு, 

      “இந்த நாய் எப்ப இங்க வந்துச்சு?  டேய், டேய்ய்ய்ய் கண்ண முழிச்சு தொலைடா வெண்ண, ஒம்பொண்டாட்டி உன் வீட்ல இருக்கும். இங்க வந்து ஏன்டா கோதுமைய வித்துகிட்டு இருக்க, அடச்சீ இளிக்காத எழுந்து போ நாயே."

      "என்ன மாப்ள இப்புடி சொல்லிட்ட, நாம அப்படியா பழகி இருக்கோம்."  

    "ச்சை, தள்ளி போடா அங்கிட்டு, இங்க எப்படா வந்த?"
               
        "நைட்டே வந்துட்டேன் மாப்ள. எம்பொண்டாட்டி வெரட்டி விட்டுட்டா."

        "அந்த புள்ள காண்டாகி வீட்டவிட்டு வெளிய தள்ளுற அளவுக்கு நீயென்ன பண்ணுண?"

    "ஈஈஈஈஈஈ அது காலைலயே எம்பொண்டாட்டி சளி தொல்லயா இருக்கு மாமா, பொழுதோட நேரத்துலயே வாங்க டாக்டர்கிட்ட போகனும்னா.

        ஆனாப் பாரு நேத்தைக்குன்னு பாத்து ப்ரஸ்ல பிரச்சனை ஆயிடிச்சுடா மாப்ள. 

        ஒருத்தர் அவரோட அப்பாவுக்கு  என்பதாவது பிறந்த நாள்க்கு அழைப்பிதல் அச்சுக்கு குடுத்திருக்காரு போல,

    நம்ம பசங்க வருந்துகிறோம் போஸ்ட் அடிச்சுட்டானுங்க, அந்தாளு பெரிய கலாட்டாவே பண்ணிட்டான். அதுல இவ சொன்னதை சுத்தமா மறந்து தொலச்சுட்டேன்.

      நான் வீட்டுக்குள்ள நுழையும் போதே ஆரம்பிச்சுட்டாடா."

      "ஏய்யா உன்ட்ட நா காலைலயே என்ன சொன்னேன்? ஏய்யா திருத்திருனு முழிக்கிற?

        அப்ப நா என்ன சொன்னன்னே  மறந்துட்ட அப்புடிதான?"

     மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் கேட்க,

        "அதெல்லாம் இல்லடி கோதுக்குட்டி. ப்ரஸ்ல ஒரு அவசர வேல அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு."

        "எது கொஞ்சமா, உடம்புக்கு முடியல டாக்டர பார்க்கனும் நேரமே வாங்கனு சொன்னா, அர்த்தராத்திரீல சாமகோடாங்கி போல வந்திருக்க.

    உன்கிட்ட நா சாகற நேரத்துல தண்ணிக்கேட்டு நின்னாலும் எம்பதினெட்டாங் காரியத்துக்குத் தான்யா நீ வந்து நிற்பே.”

    “கண்டிப்பாடா செல்லக்குட்டி,  கறிச்சோறு முக்கியமாச்சே அத தவற விட்டிடுவேனா.”

                   இதை கேட்டு கோதாவரி, எக்ஸ்பிரஸ்ஸாகவே மாறி கைல கிடைச்சது எல்லாத்தையும், அவம்மேல வீச ஆரம்பிச்சுட்டா. அடுத்து அவ  விளக்கமாத்த எடுத்து வீச, சார் அப்பவே வீட்டுப்படியை தாண்டி இங்க வந்தாச்சு.

        "ஆமா நா பெட்ல தானே படுத்தேன், இங்க எப்படி வந்தேன்?

    ஹான், இப்ப ஞாபகம் வந்துடுச்சு, தூக்கத்துல யாரோ என் கையை பிடிச்சு இழுத்தது போல இருந்துச்சு.

      எங்க எம்பொண்டாட்டி இங்கயும் வந்துடாளோனு பயந்துடேன்டா.

        ஆமா நீ எப்படா கீழ படுத்த? என்ன சத்தத்தயே காணோம்.

        டேய் மாப்ள எங்கடா போன? இவ எப்ப போனான்னு தெரியலயே? அப்ப இவ்வளவு நேரம் நானாதான்  பேசிக்கிட்டு இருந்தனா?"

             அவன் எப்படிடா இருப்பான்,  அவன் பாத்ரூம்க்குள்ள போய் கதவை சாத்தி பத்து நிமிசம் ஆகுது.

        ஒரு கேள்வி கேட்டது குத்தமாடா. 
  அதுக்கு இரண்டு பக்கத்துக்கா விளக்கம் சொல்லுவ. 

    அம்மாடி கோதாவரி நீ அவனை வீட்லயிருந்து தொரத்துனதுல தப்பே இல்லபோ.

    கல்யாணத்துக்கு அப்பறம் புருஷங்க வாயில்லா பிள்ளபூச்சின்னு தானே ஊர் உலகத்துல சொல்வாய்ங்க. இவன் என்ன இந்த பேச்சு பேசறான் பாவந்தாண்டியம்மா நீயி.

  நாம நம்ம ஹீரோவ பார்க்கறதுக்கு முன்னாடி, அவன் குடும்பத்தை பார்த்திட்டு வந்திடலாம் வாங்க.

  மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள சொர்க்க நகரமாம் பொள்ளாச்சி, அதிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகிய ஊர்ரான வேடந்தூர் தான் நம் நாயகன்   வாழும் ஊர்.

  இங்கு வேட்டை ஆடுபவர்கள் அதிகம் இருந்ததால் இப்பெயர் வந்ததாம்.

  இவ்வூரைச்சுற்றி நிறைய ஆன்மீக தளங்கள் இருக்கு. அழகு சுவாமி சித்தர் கோயில், மாசாணி அம்மன் கோயில், உத்திர காளியம்மன் கோயில், பழமை வாய்ந்த அகத்தூர் அம்மன் கோயில், சேத்துமடை காளியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில்னு பல தெய்வீக தளங்கள் உள்ளது.

  இங்கு வருடம்முழுவதும் ரம்மியமான, இயற்கை அழகுடன் மிளிரும் தட்பவெப்ப நிலையை கொண்டது. சாரல் மழை இங்கு எப்போதும் உண்டு.

    அவ்வூரில் சுந்தர மூர்த்தி மற்றும் வடிவழகி தம்பதியர்க்கு இரண்டு மகன்கள்  மற்றும் மூன்று மகள்கள். மூத்தவர் சந்திர சேகர், அவர் மனைவி மல்லிகா. அவருக்கு இரு மகள்கள் வசுந்தரா மற்றும் கனகா.  

        வசுந்தரா காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கனகாவை உள்ளூரிலேயே சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

        இரண்டாவது பரிமளம் அவர் பெத்த ரத்தினம் தான் நம்ம மூர்த்தி. அவனுக்கு தன்னோட அப்பா பேருதா வெச்சாகனும்னு பரிமளம்மா அடம்பிடிச்சு வச்சுது. என்ன ப்ரயோஜனம் தாத்தனுக்கு நேர் எதிரால்ல வாச்சிருக்கான். இவனுக்கு ஒரு அக்கா இருக்கா, உள்ளூர்லதான்  கட்டி கொடுத்திருக்காங்க. 

        பரிமளம்மா வீட்டுக்காரர் புள்ளைங்க சின்னதா இருக்கும்போதே, இறைவனடி சேர்ந்து விட்டார். அதுக்கு பிறகு பரிமளம்மாவை அவங்க அண்ணன் தம்பிங்க பார்த்துக்க முன்வந்தாலும், அவங்க வேண்டாண்ணுட்டு தன் கணவரோட அச்சு ஆபீஸ்ஸை லீசுக்கும், விவசாய நிலத்தில வேலை பார்த்தும், சுயமா பசங்களை படிக்க வெச்சு பாத்துக்கிட்டாங்க.

        இருந்தும் பசங்களை நம்ம வடிவு பாட்டி தன் கூடயே வெச்சுகிட்டாங்க. கல்யாணத்துக்கு அப்பறம்தான் இவங்க  இங்க அடிக்கடி வர்றது இல்ல. 
பையன் தலையெடுக்கவும்தான் பரிமளம்மாவும் ஓய்வுல இருக்காங்க, அதுவும் மூர்த்தி வர்புறுத்தல்ல தான்.

    மூன்றாவது சிவநேசன் நம்ம நாயகனின் தந்தை. அவர் மனைவி தையல்நாயகி. இவர்ருக்கு இரு மகன் ஒரு மகள். முதலில் மதிவாணன் அவன் மனைவி ராதா, இவங்களுக்கு பையன் ஒன்னு பொண்ணு ஒன்னு.

    அடுத்து நம்ம நாயகர் யுவேந்திரன் அப்பறோம் கடைக்குட்டி கவிநிலா, காலேஜ்ல இரண்டாவது வருசம் படிக்கறா.

      நம்ம வடிவுப்பாட்டியோட கடைசி இரண்டு பொண்ணுங்க சுமதி அப்பறம் சுகந்தா இவங்களை பத்தி வரப்போற பகுதிகள்ல பார்ப்போம், நம்ம நாயகியையும்  சேர்த்துதான்ங்க.

No comments:

Post a Comment