அத்தியாயம் 2
வேடந்தூர், இது பாரம்பரியமாக விவசாயத்தை சார்ந்துள்ள பகுதியாகும்.
முதன்மையாக இப்பகுதியைச் சுற்றியுள்ளவை தென்னந்தோப்புக்களாகும்.
கொக்கோ, வெற்றிலைப் பாக்கு,ஜாதிக்காய் ஆகியவை இடையிடையே பயிரிடப்படுகிறது. இங்கு கரும்பு மற்றும் நெல் குறிப்பிடத்தக்க பயிர்களாகும்.
நம்ம சுந்தர மூர்த்தி தாத்தாவோட குடும்பமும் விவசாயத்த சார்ந்ததுதான். பெரிய தலைமுறையினர் விவசாயத்தையும் இளையதலைமுறை அதிலிருந்து கிடைக்கும் பொருள்களை வைத்து, தென்னை நார் மற்றும் நார் சார்ந்த கலைபொருட்கள் செய்யும் தொழிற்சாலை நடத்தறாங்க.
இதுக்கு மூல காரணம் நம்ம வேந்தன்தான். உள்ளூர் அளவுல கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையா இருந்ததை வெளிநாடுகளுக்கு கயிறு, தென்னை நார்,நார் துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக மாற்றினான்.
ஆரம்பத்தில் இது அவ்வளவு சாத்தியப்படவில்லை. நிறைய தோல்விகள், சில பல சறுக்கல்கள், நிறையவே கேலி கிண்டல்களை கடந்து வரவேண்டி இருந்தது.
சிலசமயம் அவன் முடிவெடுக்க திணறும்போது தட்டிகொடுத்து ஊக்கப்படுத்தியதும் அவன் குடும்பம்தான்.
இந்த வீட்டு பெண்கள் அவங்க தேவைகளுக்கு யாரையும் எதிர்பாராது தன்னிச்சையாக செயல்படனும் என்று, வீட்டின் பின்னால் மூங்கில் வேய்ந்த கொட்டகை, கருப்பட்டி தயாரிக்க கட்டப்பட்டு உள்ளது.
இங்கே மூன்றுப்பேர் வேலை செய்கிறார்கள், அதை மேற்பார்வை பார்ப்பது வேந்தனுடைய அம்மாவும் பெரியம்மாவும் தான்.
அதனுடைய கணக்கு வழக்குகளை மதிவாணனுடைய மனைவி ராதா பார்த்துக் கொள்கிறார்.
இது நம்ம மூர்த்தி தாத்தாவோட ஐடியாதான், சூப்பர்ல.
இங்கு தயாரிக்கப்படும் சுத்தமான கருப்பட்டிகள் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மதிவாணன் ஒரு நடுநிலை பள்ளி ஆசிரியர். அவர் மனைவியும் ஒரு ஆசிரியை தான். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து கொள்கிறார்.
மூர்த்தி வேந்தனை தேடி கீழ வர, வடிவுப்பாட்டி அவனை பார்த்துட்டு சத்தம் போடறாங்க
"ஏன்டா கூறுகெட்டவனே நீ எங்கடா அவன் ரூமுக்குள்ளார இருந்துவாரே?"
"ஒனக்கு கல்யாணமாய்டுச்சு. நினைப்பிருக்கா இல்லயா? இப்படி இங்கன வந்து படுத்துகெடக்க."
"ஹான் ஒம்பேரனவிட்டுட்டு இருக்க முடியல அதான் வந்தேன்."
"ஒங்காத்தாக்கிட்ட அப்பவே சொன்னேன், இந்த கோட்டிப்பயலுக்கு இந்த புள்ளையை கட்டிவெய்காதடி அது வாயில்லாத பச்சமண்ணுண்ணு கேட்டாலா அவ. உன்னையை கட்டிகிட்டு பாவம் கஷ்டறாளேஏஏஏ ஏம்பேத்தி…"
"ஏய் கிழவி இப்போ எதுக்கு ஒப்பாரி வெய்க்குறே."
"எதே ஒம்பேத்தி பாவமா? அவ தொரத்தனதுனால தான் நா இங்க வந்து நிக்கிறதோட, உன்கிட்ட இப்படி வாங்கி கட்டிகிட்டு இருக்கேன் அதை தெரிஞ்சுக்கோ மொதல்ல."
"அவளா தொரத்திவிட்டா? அப்ப நீ எதாச்சும் கோட்டிதனமா பேசியிருப்ப."
அவ பதிலுக்கு பேசவர மேல இருந்து இறங்கி வந்த வேந்தன் அவந்தலைலத்தட்டி,
"இன்னுமாடா நீ முடிக்கல, போய் பல்ல வெளக்குடா பக்கத்துல நிக்க முடியல. ஆத்தா நீ வா எனக்கு பசிக்குது சாப்பிடப்போலாம் டிபன் என்ன இன்னிக்கு?"
"உன்ன கூப்பிடத்தா ராசா வந்தேன். அதுக்குள்ள இந்த வெட்டிப்பயட்ட போய் தெரியாத்தனமா வாயைக்குடுத்துட்டேன்."
"எது வெட்டிப்பயலா? ஏஆத்தா வாய எனக்கு குடுத்துட்டு, நீயென்ன மூக்குலயா பேசிட்டு இருக்க."
"போடா பொசகெட்டப்பயலே கேனத்தனமா பேசிக்கிட்டு.
உனக்கு பிடிச்ச குடல் குழப்புதா ராசா, இட்லி அவிச்சு வச்சிருக்கு நீ உக்காரு நான் எடுத்தாறேன்.
அடேய் கொட்டிக்க வேணும்னா வாயமூடிக்கிட்டு போய் பல்ல வெளக்கு. இல்ல அப்படியே ஓடீரு. இங்ஙன நின்னு சலம்பிக்கிட்டு கெடக்காத."
"வாயமூடிக்கிட்டு எப்படி பல்ல வெளக்கறதாம்?"
"என்னடா அங்க முனுமுனுக்கர."
"பல்பொடிய தேடற ஆத்தா."
அப்படின்னுட்டு திரும்ப, நம்ம மூர்த்தி தாத்தா தோப்புத்தொரவுகளை மேற்பார்வைய பார்த்துட்டு வீட்டுக்குள்ளாற வாராரு.
இவ அடுத்த நிமிசமே மேல ஓடிட்டா, எதுக்க வந்த கவிநிலாவை இடிச்சுக்கிட்டு.
இந்த லூசு அத்தான் ஏ இப்படி ஓடுதுன்னுட்டு கையை தேச்சுக்கிட்டே திரும்ப, மூர்த்தி தாத்தா இவள மொறச்சுக்கிட்டு நிக்கறாரு.
"அச்சச்சோ இவர பார்த்துட்டுதான் அந்த தடிமாடு அப்படி ஓடுச்சா, அய்யோ மொறய்கறாரே மொறய்கறாரே போச்சுப்போச்சு இன்னைக்கு பொழுது இவரோடதானா, மருதமலையானே உம்புள்ளய காப்பாத்தப்பான்னு"
இவ அவசர வேண்டுதல் வைக்க ஆரம்பிச்சுட்டா.
அங்குட்டு மூர்த்தி தாத்தா இன்னும் ருத்ர மூர்த்தியாத்தா நிக்கிறாரு அவள மொறச்சுக்கிட்டு.
"ஏனம்மிணி இதுதா எழும்புற நேரமா?வெள்ளன எழுந்துக்கறது இல்ல.சூரிய உச்சிக்கு வரமுட்டும் என்ன உறக்கம்னுகேக்கறேன். உங்கம்மா ஆத்தாக்கு அடுப்படியில உதவலய்னாலும், வயசுப்புள்ள வாசத்தொளுச்சு கோலம்ப்போட்டு, பூச அறையில வெளக்கு வைக்கவேண்டா?"
இவரு போட்ட சத்தத்துல வீட்டுக்குள்ள இருந்த மகளிர் அணிப்பூராவும் ஹால்ல ஆஜராயாச்சு.
"வீட்ல இத்தனபேரு இருக்கீங்க புள்ளைக்கு நல்ல பழக்கவழக்கத்த சொல்லித்தாறதில்ல."
"அடுத்த வீட்டுக்கு வெளக்கேத்த போற புள்ளய இப்படி அனுப்பனா, என்னத்தத்தா சொல்லி வளர்த்தாய்ங்கனு நாக்குமேல பல்லப்போட்டு பேச மாட்டாய்ங்க."
இங்க இவ்வளவு நடக்குது இந்த சின்ன மூர்த்தி மேல ரூம்ல இருந்து டெரஸ் வழியா கீழக்குதிச்சு, புறவாசல் (வீட்டின் பின்பறம்)வழியா சாப்பாட்டு அறைக்கு வந்துட்டான்.
அங்க நம்ம வேந்தரு ஹால்ல நடக்கறதை ஏதோ தியேட்டர்ல சினிமா பார்க்கறது போல சுவாரஸ்யமா பார்த்துட்டு இருக்காப்டி. அதுவும் இட்லி குடல் குழம்போட நல்லா ஒரு வெட்டு வெட்டிக்கிட்டே.
அங்கபோன இவன் அடேய் எனக்கு கொஞ்ஜோ மிச்சம் வைடான்னுட்டு இவனும் அவம்பக்கத்துல சேர்ர போட்டு ஒக்காந்து ஜோதீயில ஐக்கியமாய்ட்டான்.
"என்னடா பாசமலர் திட்டுவாங்குது. நீயென்னன்னா சாப்பாட்ட மொக்கிட்டு இருக்க, நீ போகல."
"ப்ச் போயி என்னையும் வாங்கி கட்டிக்க சொல்றயா?
இப்பபாரு அங்க இருக்க எல்லாத்துக்குமே பாரபச்சம் இல்லாம திட்டுவிழும்."
இவ சொன்னதுபோலத்தான் வடிவு பாட்டி, மல்லிகா,தையல் நாயகி,ராதானு எல்லாருக்கும் சரிசமமா வசவு மழை பொழியுது.
பேசிப்பேசி டயர்டு ஆகி அவரோட ரூம்க்கு போய்டாரு தாத்தா கோபமா.
தாத்தா உள்ள போகவும்தா எல்லாரும் இழுத்துப்பிடிச்ச மூச்சயே வெளிய விடராய்ங்க.
"அப்பப்பா மழையடுச்சு ஓய்சது போல இருக்கு எல்லா இவளாள."
"ஏன்டி இவளே அவரு கண்ணுள படாம வாரதுக்குகென்ன."
"போ ஆத்தா, நீயும் திட்டற எனக்கு சாப்பாடும் வேணா ஒன்னு வேணாம்ப்போ."
"அடிகழுத வெரசா நீ எழும்பாம புத்தி சொல்லற பெரியவகக்கிட்ட என்ன பேச்சு இது."
"நாயகி, புள்ளய அதட்டாத ஏற்கனவே அவ அழுதுட்டு கெடக்கா நீவேற புள்ளய திட்டுக்கிட்டு இருக்க பாரு புள்ள மொகம் சுண்டி போச்சு."
"அச்சோ மல்லிகாக்கா அதெல்லாம் வேசந்தா, எனக்கு தெரியாது இவள பத்தி."
"கம்முணுயிரு நாயகி,எஞ்சாமி அழழாமா எல்லாம் அந்த மனுசனால புள்ளய ரொம்பத்தா திட்டிப்போட்டாரு."
"அச்சோ அத்தே நீங்களுமா அவளாவது சாப்பிடாம இருக்கறதாவது."
"கவி கோவத்த அன்னத்து மேல காட்டக்கூடாது. ப்ச்சு அடம்பிடிக்காம சாப்பிட வாம்மா அண்ணி சொன்ன கேக்கனும். நாவேற உனக்குபிடிக்கும்னு கேசரி செஞ்ச."
"எது கேசரியா, நீங்க சொல்லி நான்கேட்காம இருப்பனா வாங்கண்ணி போலாம்."
ராதாவோட அவ சாப்பிட போயாச்சு நம்ம மல்லிம்மாவும் வடிவுபாட்டியும்தா முழிச்சுக்கிட்டு, போனவள பாத்துட்டு நிக்கராங்க.
"நாந்தா அப்பவே சொன்னனே."
நீங்க வாங்கக்கான்னுட்டு நாயகியம்மா உள்ளார போய்டாங்க.
நீங்களே சொல்லுங்க சாப்பாடு பெருசா கோவம் பெருசா, சாப்பாடுதானே. வாங்க நாமளும் கேசரிய உள்ள தள்ளிட்டு பொறுமையா கோவப்பட்டுப்போம் அடுத்த பகுதில...
No comments:
Post a Comment