அத்தியாயம் 03
நாயகியம்மா சாப்பாட்டு மேசையை நெருங்கும் முன்னவே, கவிக்கும் மூர்த்திக்கும் இடையில நடக்கற அடிதடி சத்தம் வெளியவர கேக்குது.
"ஏய் குந்தாணி, எதுக்கு இப்போ என் முதுகுல துணி தொவச்சுகிட்டு இருக்க, தள்ளிப்போ அங்குட்டு."
"என்னைய அங்க ஐய்யாட்ட கோர்த்து விட்டுட்டு, நீ இங்க சாப்பாட்ட மொக்கிட்டா இருக்க, அச்சோ என்னோட கேசரி அதுலயும் கைய்ய வெச்சுட்டயா உன்னேஏஏஏ..."
நாயகியம்மா கவியோட முதுகுல மொத்தி,
"மட்டுமருவாத இருக்காப்பாரு, இப்பதானடி ஐய்யாகிட்ட அத்தனை வசவு வாங்கின."
"அவ ஒன்னய விட வயசுல பெரியவனாக்கும். ஒழுங்கா அத்தான்னு கூப்பிடு."
" அத்தானாம் அத்தான் சரியான பொத்தான், இந்த தவக்கள வாயன நா அத்தான்னு வேற கூப்பிடனுமோ? இந்த மொகரய்க்கு மரியாத ஓன்னுதான் குறை."
"ஓய், ஏம்மொகரய்க்கு என்ன குறைச்சல், படிக்கும் போது எத்தனை பேர் எம்பின்னாடி வருவாங்க தெரியுமா? உங்க அருமை அண்ணங்கிட்ட நீயே கேட்டுப்பாரு."
"ஹிம்ம் இப்படி திண்ணுதிண்ணு பெருத்து கிடந்தா, நீயே வழியை அடைச்சுகிட்டு நடந்திருப்பே, அதான் உன்ன தாண்டி போக முடியாம எல்லாரும் பின்னாடி வந்திருப்பாங்களா இருக்கும். நாஞ்சொல்றது சரிதானண்ணே."
"ஹா ஹா ஹா நீ சொன்னா சரியாதான்மா இருக்கும்."
" எது டேய் என்னடா இந்த சில்வண்டு ஓவரா பேசுது, நீயும் ஆமாஞ்சாமி போட்டுகிட்டு இருக்க."
"உண்மை கொஞ்சம் கசக்கதான் மாம்சு செய்யும்."
இதுங்க இப்படியே சண்டப்போட்டுட்டு இருக்க இது எப்பவும் நடக்கறதுதான்னு பெரியவங்க எல்லாம் அவங்கவங்க வேலைய பார்க்க போய்டாங்க.
இந்த சமயத்துலதான் நம்ம கோதாவரி அவபுருசனுக்கு பிடிச்ச பால்கொளுக்கட்டைய செஞ்சு எடுத்துட்டு வீட்டுக்குள்ள வர்றா.
வேலை செஞ்சு ஓஞ்சு போய் வந்த மனுசனை இப்படி அர்த்தராத்திரியில விரட்டிவிட்டுட்டோமேன்னு மனவருத்தத்தோட அவனை சமாதானம் பண்ண வர்றா. கவியும் வேந்தனும் அவ உள்ள வரும்போதே கவனிச்சுட்டாங்க. ஆனாஆஆஆ…நம்ம மூர்த்தி கவனிக்கல.
"டேய் மாப்ள உன்தொங்கச்சிக்குத்தான் தெரியல, உனக்கும் மறந்துடுச்சா? படிக்கிற காலத்துல நான் ரோமியோனு."
கவியும் வேந்தனும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கறாங்க. ஆஹா ஆடு வசமா வந்து மாட்டிகிச்சி இன்னைக்கு பிரியாணி போட்டர்லானு. வேந்தன் ஆரம்பிக்கிறான்.
"அய்ய இவன்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டாம்மா வெத்து பேச்சுக்குதான் லாய்க்கி."
"எது டேய் எத்தனை பொண்ணுங்க லவ் லெட்டர் குடுத்திருக்காங்க தெரியுமாடா? நான் கண்ணசைச்சா போதுமாக்கும் இப்பவே என்னைய கட்டிக்க வரிசைல நிப்பாங்க. அந்த லதா புள்ள இப்ப கூட தினோம் என்ன எட்டி நின்னு பார்த்து சைட் அடிக்குது தெரியுமா?"
"ஆமாம்மா நல்லாவே தெரியுது உம்பின்னாடி."
"எம்பின்னாடியா, ஆத்தி இவ என்ன திரிசூலம் இல்லாத காளிப்மாறி நிக்கறா, அச்சச்சோ பேசுனதெல்லாம் கேட்டுட்டாளோ முடிஞ்சுது ஜோலி."
இத நீ பேசறக்கு முன்னயே யோசிச்சிருக்கனும்
"வாம்மா கோத இப்ப உடம்புக்கு பரவாயில்லையா. இன்னொருக்கா வேனா டாக்டரை பார்க்க போய்ட்டு வரலாமா?."
"இல்லண்ணே நா இப்ப நல்லாதா இருக்கேன், நீங்க கூட்டிட்டு போன ஆஸ்பத்திரியில, டாக்டர் நல்லாவே பார்த்தாங்க. சரிண்ணே நாபோய் ஆத்தாவ பார்த்துட்டு வரேன்."
மூர்த்தி எழுந்த பேச வர அவ கோபமா சமையல் அறைக்குள்ள போய்ட்டா
"அடப்பாவி அவ வந்தது தெரிஞ்சுதான் அண்ணணும் தங்கச்சியும் என் வாய புடுங்கனீங்களா.
என்னடா சிரிக்கரீங்க அப்ப எல்லாமே பிளானிங்கா.
ஏற்கனவே நேத்திக்கு கணக்கே இன்னும் பாக்கி இருக்கு, இதுல புதுசா வேற கோர்த்து விட்டுட்டீங்களேடா."
"ஹாஹாஹா ஆனா உன்ன நா தவளவாயன்னு கூப்படறதுல தப்பே இல்ல அத்தான். உன் வாயால தான் நீ மாட்டன அக்காட்ட, என்னோட கேசரிலயா கைய வெச்ச, இருக்கு இன்னிக்கு உனக்கு வீட்ல ஒரு பூச இருக்கு."
"அடிகுட்டிபிசாசே இத்துனூன்டு கேசரிகொசரமா என்னை மாட்டிவிட்ட, உன்னக் கூட விட்டுடுவேன். ஆனா உம்பக்கத்துல ஒன்னுமே தெரியாத மாறி ஒக்காந்து இருக்காம்பாரு உன்ணொண்ணன் அவனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன், நீ அவளை ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகும்போதே எனக்கு சொல்லி இருக்கலாம்லடா? இல்ல காலைல உன்ரூம்ல கழுத மாறி கத்துனனே அப்பவாச்சும் சொன்னயாடா."
"எனக்கு உன்னபோல கழுத பாஷை புரியாதே மாம்சு."
"இந்தநாள் உன் மொபைல்ல குறிச்சு வெச்சுக்கடா."
"கைல மொபைல் இல்லயே மாம்சு."
" என்னபோலவே நீயும் ஒம்பொண்டாட்டிட பேச தவிச்சு நிப்படா."
"எம்பொண்டாட்டிட பேச நீயேன்டா தவிச்சு நிக்கனும்?"
"நானில்லடா உம்பொண்டாட்டி கூட பேச நீ தவிச்சு நிப்பேன்னு சொன்னேன்."
"சரி நிப்பேன் அப்பறோம்."
"அப்போ என்ட்டதான்டா உதவிகேட்டு நிப்ப, அப்படி நடக்கல எம்பேரு ஒங்கப்பனுக்கு அப்பன் பேரு இல்லடா."
இவம்போட்ட சபதத்தை கண்டு அண்ணனும் தங்கச்சியும் கெக்கபெக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
இதைகேட்டுட்டே குழந்தைங்களோட உள்ள வந்த மதிவாணன் அவந்தலைல தட்டி,
"காலைலயே ஒங்க அக்கப்போற ஆரம்பிச்சுடீங்களா?
பொண்டாட்டி முடியலன்னு சொன்னா, அப்பவே டாக்டர்கிட்ட போகலாம்னு நீதான் கிளம்பி இருக்கனும். நம்ம சம்பாதிக்கறதே குடும்பத்துக்காகதான்டா.
அவங்களுக்குதான் நாம பர்ஸ்ட் பிரிபரன்ஸ் குடுக்கணும்.
நேத்து நானும் வேந்தனும் திருவிழாவுக்கு பத்திரிகை அடிக்கறது விஷயமா உங்கிட்ட பேசலாம்னு உன் வீட்டுக்கு வந்தோம், வீட்ல யாரும் இல்லபோல.
பாவம் கோதை, நிக்க முடியாம தலைசுத்தி விழுக போய்டுச்சு. கரெக்ட்டா நாங்க அங்க போனதால ஆச்சு. வேந்தன் தான் அப்பவே கோதையை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுபோய்ட்டு வந்தான். நம்மள நம்பி வந்த பொண்ணுக்கு எதுன்னாலும் அதுக்குநாமதான் பொறுப்பு."
"இல்லண்ணே இனி இப்படி நடக்காம அவளை பத்திரமா பார்த்துக்கறேண்ணே."
"அத்தான் உனக்கு இந்த முகம் செட்டே ஆகல, ப்ச்சு என்னத்தான், அக்காக்குதான் ஒன்னும் இல்லையே, அப்பறம் என்ன?"
"ஒருவேள உனக்கு வேலை அதிகம்னா இங்க வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிடு, ஏதாச்சும்னா நாங்க பார்த்துக்கறோம்."
இது தாங்க நம்ம தாத்தா குடும்பம், சின்ன புள்ளய்ங்க போல அடிச்சுகிட்டாலும், பாசத்துக்கு குறைவே இல்ல இங்க.
சரிவாங்க நாம நம்ம மூர்த்தியோட சபதத்த நிறைவேத்தப்போற, அந்தமகராசியை பார்க்க போகலாம்.
பிரதோஷ வேளையில் கோயில் மணியோசை கீதங்களாய் முழங்க, ஊதுபக்தி வாசனை மனம் நிறைக்க தீபாராதனைகளுக்கு நடுவே தெரியும், ஜடாமுடிதனில் பிறைசந்திரனை சூடி, ருத்ராட்சமாலைதனை ஆபரணங்களாய் தரித்து நிற்கும், சிவலிங்க திருமேனிதனில் இருந்து விழி நகர்த்த முடியாது, விழி மூடாமல் பக்தி பரவசத்தில் நிற்கிறாள் நங்கையவள்.
தீப ஒளிதனில் சிவலிங்க தரிசனத்தை காண எப்போதும் தெவிட்டுவதே இல்லை.
நீள்வட்ட முகந்தனில் கதைபேசும் கண்களது மீன்களை போட்டிக்கு அழைக்க, கூர்மூக்கில் ஒற்றைகல் சிவப்பு மூக்குத்தி ஜொலிக்க,வெடித்து நிற்கும் மாதுளை இதழ்களில் ஓயாது சிவ மந்திரம் முழங்க, தன் தளிர் விரல் கொண்டு இறைவனை நோக்கி கை கூப்பி நிற்கின்றாள் மதுரயாழினி.
No comments:
Post a Comment