Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, June 11, 2025

மன்னவரே 31


 

             அத்தியாயம் 31


  வேந்தன் மதுவுடன் தனது காரில், ஹாஸ்பிடலில் இருந்து ரிஜிஸ்டர் ஆபிஸை நோக்கி சென்று கொண்டிருந்தான்.


  "மிஸ் மதுரம் உங்களோட ஐடி ப்ரூப் ஏதாவது, இப்போ உங்ககிட்ட இருக்கா?"


  "இருக்கு சார், சேஃப்டிக்காக எப்பவுமே என்னோட வோட்டர் ஐடியை, என் கையில தான் வச்சிருப்பேன்."


    "ஓகே அதை கொடுங்க, நான் ஒரு ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்துடறேன், இதையும் சேர்த்து தான் சப்மிட் பண்ண வேண்டி இருக்கும்."


  வேந்தன் அவளது ஐடியை எடுத்துச் சென்று இரண்டு காபி ஜெராக்ஸ் எடுத்துவிட்டு, வீட்டில் எடுத்த அவளது புகைப்படத்தையும் நான்கு காப்பி போட்டோ பிரிண்ட் எடுத்து கொண்டான்.


    பிறகு இருவரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் நோக்கி சென்றனர். தன்னிடம் இருந்த அவளின் சான்றிதழ்களில் மதுவின் கையப்பத்தை பெற்றுக் கொண்டான்.


"மிஸ் மதுரம் நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. நான் உள்ள போய் ஃபார்ம் வாங்கிட்டு வந்துடறேன். அதோட வேற என்ன டீடெயில்ஸ் எல்லாம் தேவைப் படுதுன்னு கேட்டுட்டு  வந்துடுறேன்."


  வேந்தன் தன்னிடம் தயாராக இருந்த ஒரு விண்ணப்பத்தை கொண்டு வந்த சான்றிதழோடு சேர்த்து எடுத்துக் கொண்டு, அங்கிருந்த அலுவலகரிடம் கொடுத்தான்.


  மறக்காமல் இன்னொரு விண்ணப்பத்தையும் அங்கிருந்து பெற்றுக் கொண்டு மதுவிடம் வந்தான்.


  இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க. நாம போய் சைன் போட்டா போதும்.


  "நாம எதுக்காக இப்பவே சைன் பண்ணனும்? அவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணும் போது நாம கையெழுத்து போட்டா போதுமில்ல. அதுமட்டுமில்லாம  லாவண்யாக்காக தானே நான் இங்க வந்து இருக்கேன், அப்படி பார்த்தா அவங்களோட சைன் தானே நான் போட வேண்டி இருக்கும்?"


யோசிக்க ஆரம்பிச்சிட்டாளா, இவளை இப்படியே யோசிக்க விடக்கூடாது. தப்பாச்சே,


    "அப்ளிகேஷன்ல லாவண்யா தான் கையெழுத்து போடணுமுன்னு இல்ல, சாட்சிகள் கூட அந்த அப்ளிகேஷன்ல கையெழுத்து போடலாம். ரிஜிஸ்டர் பண்ற பைல்ல தான் கல்யாணம் பண்ணிக்க போறவங்க சைன் போடணும்."


  " ஓ சரி சார், ஆமா என்ன நாம மட்டும்தான் இங்க இருக்கோம்? உங்க பிரண்டு ஒருத்தரை கூட கண்ணுல காணமே?"


"நான் ஆல்ரெடி கால் பண்ணிட்டேன் அவங்க வந்துட்டு இருப்பாங்க"


    அப்போது மூர்த்தி, வெற்றி மற்றும் சந்துரு மூவரும் தனித்தனியாக ரெஜிஸ்டர் ஆபீசுக்கு ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரே நேரத்தில் மூவரும் கேள்வி எழுப்பினர்


"நீங்க எங்கடா இங்க?"


  "வேந்தன் தான் ஏதோ அவசரம்னு என்ன வர சொல்லி இருந்தான். ஆமா வெற்றி நீ எங்க இங்க?"


"வேந்தன் என்னையும் இதே போல அவசரம்னு சொல்லி தான் வரச் சொன்னான். அப்போ மூர்த்தி உனக்கும் இதே டயலாக் தானா?"


  "பின்ன தனித்தனியாவா சொல்லி இருப்பான், ஏதோ அவசரம்னு கூப்பிட்டான். அங்க எல்லா வேலையையும் அப்படியே போட்டுட்டு வந்துட்டேன், போய் பார்த்தா தானே தெரியும். திரும்ப கூப்பிட்டாலும் போன் எடுக்க மாட்டேங்கிறான். ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எதுக்காக வர சொல்லி இருப்பான்?"


  "அப்போ வேந்தன் உங்களுக்கும் கூப்பிட்டு இருந்தானா, சரி வாங்க போய் என்னன்னு பார்ப்போம்."


  இவர்கள் உள்ளே நுழையும் போது மதுவும் வேந்தனும் ஒருவர் பின் ஒருவராக கைய்யப்பம் இட்டு கொண்டிருந்தனர்.


  வேந்தன் இவர்களுக்கு இடையே நடக்கும் பதிவு திருமணத்திற்கான சான்றிதழை கடைசி பேப்பராக வைத்திருந்தான். அதனால் கையப்பமிட்டுக் கொண்டே வந்த, மதுவின் கண்களில் அது சரியாக விழவில்லை.


  ஆம் மதுவுக்கும் வேந்தனுக்கும் பதிவு திருமணம் தான் நடந்து கொண்டிருந்தது. முதலில் வேந்தன் அவளை காதலித்து, அவளின் சம்மதத்தோடு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில்தான் இருந்தான்.


  ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் வேந்தனுக்கு அழைத்த வெற்றி, குருந்த மரத்தின் அடியில் இருந்து மண்ணெடுக்கப் போவதாக கூறிய செய்தியால், உடனே தமது திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அதனால் அவளுக்கேத் தெரியாமல் அனைத்து வேலைகளையும் செய்தான்.


    அவளுக்கே தெரியாமல் அவளை திருமணம் செய்து கொள்வது, அவனின் மனதிற்கு சற்று வருத்தமாக தான் இருந்தது.


      என்ன செய்வது, ஒருவேளை அவளுக்கு பூர்வஜென்மம் ஞாபகத்திற்கு வந்துவிட்டால், நிகழ்காலத்தில் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளோ என்ற அச்சமே, அவனை இவ்வாறு செய்யத் தூண்டியது. 


  அத்தோடு மோகினி பள்ளமும் மற்றொரு காரணமாகும். அவள் வெளிவரும் முன் தங்களது திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். 


    அதுவே வேந்தனை மதுவிற்கு தெரியாமல், தங்களது திருமணத்தை இவ்வளவு விரைவாக நடத்தி முடிப்பதற்கு முக்கிய காரணமாக ஆனது.


    வேந்தனை ஒரு பெண்ணுடன் ரிஜிஸ்டர் ஆஃபீஸில் கண்டு, அதிர்ந்து நின்ற நண்பர்கள் மூவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"டேய் மூர்த்தி யாருடா அந்த பொண்ணு?"


    "நான் சொன்னேன்ல அந்த கார் ஹெட் லைட், அதே பொண்ணு தான் இது. ஆனா இவங்க ரெண்டு பேரும் எப்போ எப்படி ஜோடி செய்தாங்கன்னு தெரியலையே?"


    நண்பர்கள் அவ்விடத்திற்கு வரும்போது, சரியாக மதுவிற்கு அவள் வீட்டில் இருந்து அழைப்பு வரவே, இவர்களிடம் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு வெளியே ஃபோன் பேசச் சென்றாள்.


    "வேந்தா இங்க என்னடா நடக்குது? அந்தப் பொண்ணு இங்க என்ன பண்ணுது? அப்புறம் எங்களையெல்லாம் எதுக்கு இங்க வர சொல்லி இருக்க?"


       "ரிஜிஸ்டர் ஆபீஸ்ல போட்டோ எடுக்கவா வருவாங்க? மேரேஜ் பண்ணிக்க தான் வந்திருக்கோம். நான் மட்டும் தனியா பண்ணுனா அது எப்படிடா மேரேஜ் ஆகும். அப்புறம் சாட்சி கையெழுத்து போட மூணு பேர் வேணுமே, அதுக்காக தான் உங்க மூணு பேரையும் கூப்பிட்டேன்."


    சரியாக அந்த நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுமாறு அலுவலகத்தில் இருந்து கூப்பிட,


  "எப்படி? வந்து சாட்சி கையெழுத்து போடப் போறீங்களா, இல்ல இன்னும் என்னை நிக்க வச்சு, விசாரணை பண்ணிட்டே இருக்க போறீங்களா?"


      தன் நண்பனின் மேலுள்ள நம்பிக்கையில், அவனுக்காக சென்று சாட்சி கையெழுத்துகளை போட்டு விட்டு வெளியே வந்தனர்.


"வேந்தா இப்பவாச்சும் சொல்லு, அந்த புள்ள எப்ப இருந்து உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சுது? முதல்ல நீங்க ரெண்டு பேரும் எப்போ எங்கடா பாத்துக்கிட்டீங்க? எப்படா காதலிக்க ஆரம்பிச்சீங்க?"


  "நான் எப்போ சொன்னேன், இது லவ் மேரேஜ்ன்னு."

No comments:

Post a Comment