Search This Blog

Followers

Powered By Blogger

Thursday, June 12, 2025

மன்னவரே 32


 

             அத்தியாயம் 32


  "என்னடா உளர்ற, அப்போ லவ் மேரேஜ் இல்லைன்னா, அப்புறம் எதுக்காக யாருக்கும் தெரியாம ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறீங்க? நீ அந்த முள்ளு காட்டுக்குள்ள போயிட்டு வந்ததிலிருந்து, நடந்துக்கிறது ஒண்ணுமே சரியில்ல வேந்தா."


தொலைபேசி அழைப்பை பேசி முடித்து வந்த மது இவர்களிடம் வந்து,


      "உங்கள்ள யார் சந்துரு?ஓஓஓ நீங்களா, கங்கிராட்ஸ் பிரதர் நிஜமாவே லாவண்யா ரொம்ப சூப்பர் கேரக்டர். அவங்க கிடைக்கிறதுக்கு நீங்க தான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.


  அவங்ககிட்ட பேசுனதுல இம்ப்ரஸ் ஆகிதான், உங்களை முன்ன பின்ன தெரியலைன்னாலும் கூட, நானே உங்க கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்து போட வந்திருக்கேன்."


  அவ்வளவுதான் நண்பர்கள் மூவரும் கரண்ட் கம்பியை மிதித்தது போல், ஷாக் ஆகி வேந்தனை பார்த்தனர். 


  அப்போது மறுபடியும் மதுவிற்கு அவள் தோழி வினுவிடம் இருந்து அழைப்பு வர, போனை ஆன் செய்து விட்டு, இவர்களிடம் தலையசைத்து வினுவுடன் பேச வெளியே சென்றாள்.


    "அவள பொருத்தவரைக்கும் இது சந்துருவோட கல்யாணத்துக்கு அப்ளிகேஷன் கொடுக்கிறோம்னு நினைச்சுட்டு இருக்கா, நீங்களா எதுவும் அவ கிட்ட உளறி தொலைக்காதீங்க."


    "டேய் இந்த விஷயம் தீபனுக்கு தெரிஞ்சா அவனே நம்மளை கைது பண்ணிடுவாண்டா."


      "அதனாலதான், அவன சாட்சி கையெழுத்து போட கூப்பிடாம, உங்க மூணு பேரையும் கூப்பிட்டு இருக்கேன்."


    "டேய் சந்துரு, அனேகமா உன் கல்யாணம் போலீஸ் ஸ்டேஷன்ல தான் நடக்க போகுது.


  ஆனா என்ன, நீ ஜெயிலுக்குள்ள இருந்து கையெழுத்து போட வேண்டி இருக்கும்."


    "டேய் மூர்த்தி வாயை வெச்சு தொலைக்காதடா? ஏற்கனவே அவங்க அப்பனுக்கு தெரியாம எப்படி கல்யாணத்தை முடிக்க போறோம்? அதுக்கு அப்பறம் எப்படி ஃபாரின்க்கு தப்பிச்சு போக போறோன்னு யோசிச்சி  பயந்துட்டு இருக்கிறோம்.


    கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே, என்னை கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வைச்சிடுவ போலயே, இது உனக்கே நியாயமாடா வேந்தா?"


      சந்துரு தனது புலம்பலை மூர்த்தியிடம் ஆரம்பித்து வேந்தனிடம் கேள்வியாக முடித்தான்.


    வேந்தன் தனது கையில் உள்ள இன்னொரு பைலை எடுத்து சந்துருவிடம் கொடுத்தான்


    "இதுல உன் கல்யாணத்துக்காக ரிஜிஸ்டர் பண்ண போற அப்ளிகேஷன் இருக்கு. 


        ஆல்ரெடி நானே ஃபில்லப் பண்ணிட்டேன். அதோட லாவண்யாவோட சர்டிபிகேட்டும் இதுல வெச்சாச்சு. உன்னோடது மட்டும் தான் பாக்கி. அதையும் வச்சு மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணும் போது ஆபீஸ்ல கொடுத்துடு."


     "வேந்தா நீ செய்யறது ஒன்னும் சரியில்ல. ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளுக்கு கட்டாய தாலி கட்டினது மாதிரி தான் இருக்கு, நீ இப்போ அந்த பொண்ணு கிட்ட நடந்துக்கிட்டது.


  நீ அந்த பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யலைன்னாலும், அந்த பொண்ணுக்கு தெரியாம இப்படி ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறது ரொம்ப தப்பு."


  "அந்த பொண்ணுக்கே உன்னை பிடிச்சிருந்தாலும், அவங்க பேரன்ட்ஸ் பத்தி நினைச்சு பார்த்தியா? அவங்க பொண்ணுக்கு  எப்படி மாப்பிள்ளை பார்க்கணும், எப்படி எல்லாம் கல்யாணம் பண்ணனும்னு எவ்ளோ கனவில் இருந்து இருப்பாங்க."


    "வெற்றி நீ சொல்றதெல்லாம் சரிதான். அவங்க அப்பா, அம்மா  கண்டிப்பா என்னை ஏத்துப்பாங், அந்த அளவுக்கு பெர்பார்மன்ஸ் போட்டு இருக்கேன்."


      "எது அவங்க அப்பா அம்மாவ உனக்கு தெரியுமா? அப்புறம் என்னடா பிரச்சனை, டேரக்டா பெரியவங்க மூலமாவே கல்யாணத்தை நடத்தி இருக்கலாம் இல்ல?"


    "இரு வெற்றி,வேந்தா நீ சொல்லு முதல்ல, அவங்க அப்பா அம்மா யாரு? நீ ஏதோ உள்குத்து வெச்சே பேசுற மாதிரியே இருக்கு."


        "நீ மட்டும் தான் மூர்த்தி என்னை கரெக்ட்டா புரிஞ்சு வச்சிருக்க. மதுவோட அப்பா நம்ம பூவு பாட்டியோட இரண்டாவது பையன் சிவராமன் அங்கிள் தான். இப்போ வடிவுப்பாட்டியும் பூவு பாட்டியும் அவங்க வீட்ல தான் இருக்காங்க.


    காலையில தான் கொண்டு போய் அங்கே விட்டுட்டு வந்தேன், ஒரு ரெண்டு நாள் அங்க இருப்பாங்க அதுக்குள்ள நான் இதெல்லாம் செட்டில் பண்ணிடுவேன்."


      "அடேய் அது உன் மாமன் பொண்ணு தானடா, அப்புறம் எதுக்கு இந்த திருட்டு கல்யாணம்? ஆனாலும் மணப் பெண்ணுக்கு தெரியாம நடந்த, இப்படி ஒரு கல்யாணத்தை நான் கேள்விப்பட்டதே இல்லைடா!"


      "ஐயோ பேசி பேசியே என்னை டயர்ட் ஆக்கிடுவீங்க போல இருக்கே, இப்ப நிரஞ்சனா எதை காரணமா வச்சு ஓடிப் போய் இருக்கா? ஒரு வேலை அவ திரும்பி வந்தா? உடனே கல்யாணம் பண்ணனும்னு சொன்னா? பெரியவங்க என்னை வற்புறுத்தினால் என்னால அவங்க பேச்சை தட்ட முடியாது.


  ஆனால் இப்போ நடந்த கல்யாணத்தால கண்டிப்பா என்னால மதுவை விட்டுக் கொடுக்க முடியாது. இதை ஒரு காரணமா, அவங்க கிட்ட சொல்ல முடியுமில்ல. சரி சரி அவ வர்றா கொஞ்ச நேரத்துக்கு எல்லாரும் வாய மூடிக்கிட்டு இருங்க."


          "இவங்க எல்லாம் ஏன் இப்படி திருதிருன்னு முழிக்கிறாங்க?"


    "அவங்க முழியே அப்படித்தான்."


  "சார் இங்க ஒர்க் முடிஞ்சுதா இல்லை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?"


    "முடிஞ்சுது மிஸ் மதுரம். நாம நேரா இனி ஆபீஸ்க்கு தான் போறோம். இனி இருக்க ஒர்க் எல்லாம் என் பிரெண்ட்ஸ் இவங்க இருந்து பார்த்துப்பாங்க. நான் உங்களை ஆபீஸ்ல விட்டுடறேன்."


  "சார் எனக்கு ஒரு ஹாவ் டே லீவ் கிடைக்குமா? என் வீட்டில் இருந்து கூப்பிட்டாங்க கொஞ்சம் அர்ஜென்ட் போல."


      "எங்களுக்கு இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க, உங்களுக்கு லீவு இல்லாமையா. ஆபீஸ் போனதும், நீங்களும் உங்க பிரண்டும் கண்டிப்பா இன்னைக்கு லீவ் எடுத்துக்கலாம்."


  "ரொம்ப தேங்க்ஸ் சார். ஆமா உங்க பிரண்டுக்கு தேங்க்ஸ் சொல்ற பழக்கம் எல்லாம் இல்லையா சார். இருந்தாலும் லாவண்யா மேடமோட அறிவுக்கும் அழகுக்கும் முன்னாடி இவர் கொஞ்சம் கம்மிதான்?"


    "அவன் அவனோட கல்யாண அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளல, நீங்க வாங்க நம்ம கிளம்பலாம். அப்புறம் மிஸ் மதுரம் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிட்டு போலாமா ப்ளீஸ். ஒரு நல்ல காரியம் செஞ்சிட்டு கிளம்பறோம், அதனால தான் கேட்டேன்."


      மது சிறிது யோசித்து விட்டு, சரி என்று கூறினால்.


      வேந்தனும் மதுவும் ஒரு தலையசைப்புடன் நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டனர்.


  "என்னடா வெற்றி, அவன் பாட்டுக்கு நம்மள விட்டுட்டு போறான்."


    "அடுத்து ஏதோ ப்ளான் போட்டுட்டான் அதுக்குள்ள நம்மளை இழுக்காம போறானே, அதுவரைக்கும் சந்தோஷப்படு."

No comments:

Post a Comment