Search This Blog

Followers

Powered By Blogger

Friday, June 13, 2025

மன்னவரே 33


 

            அத்தியாயம் 33

       

           வேந்தன் மதுவை அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் வந்திருந்தான்.

  

    "எப்படி கரெக்டா நான் அடிக்கடி வர இந்த கோயிலுக்கே, என்னை கூப்பிட்டு வந்து இருக்கீங்க?"


"கேட்டு தெரிஞ்சுக்கிட்டதால தான்."


  "என்ன சொன்னீங்க?"


  "இல்லைங்க என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டப்ப, இது ஃபேமஸான கோவில்ன்னு சொன்னாங்க. அதனாலதான் இங்க வந்தேன்."


  "சரி ஒரு நிமிஷம் சார், நான் போய் பூ வாங்கிட்டு வந்துடறேன்."


  வேந்தன் தனது அலைபேசியில் இருந்து வடிவுபாட்டிக்கு அழைத்தான்.


      "ஆத்தா வீட்ல எல்லாம் கிளியரா, நானும் மதுராவும் வீட்டுக்கு வரும்போது வீட்ல யாரும் இருக்க மாட்டீங்க தானே. "


  "ஆமா ராசா வீட்ல இருக்குறவங்களையும், ஊர்ல இருந்து வந்தவங்களையும் கூட்டிக்கிட்டு தான் வெளியே வந்திருக்கேன்."

    "எது ஊர்ல இருந்து வந்திருக்காங்களா?"


    "அது...அதுதான் உனக்கு தெரியுமே ராசா, நான் உங்க தாத்தாகிட்ட எதுவுமே மறைச்சதில்லையே. அதுதான் காலையில நீ கிளம்புனதுமே, ஐயாக்கு போன் பண்ணி நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்லிட்டு, இந்த வீட்டு அட்ரஸையும் அமுதன்கிட்ட கேட்டு சொல்லிட்டேன்."


        வடிவு பாட்டி தான் இருக்கும் இடத்தையும், நடந்த விஷயங்களையும் மூர்த்தி ஐயாவுக்கு போனில் அழைத்துக் கூறிவிட்டார்.


      விஷயம் அறிந்ததும் அங்குள்ள அனைவருமே, சிவராமனின் இல்லத்திற்கு கிளம்பிவிட்டனர். ஆனால்  இந்த விஷயம் இன்னும் மேலூரில் உள்ள யாருக்கும் தெரியாது.


      வேந்தன் முன்பே வடிவுப்பாட்டியிடம், தான் இன்று நடத்தப் போகும், அத்தனை நாடகத்தையும் கூறிவிட்டான். அவருக்கும் இதில் மகிழ்ச்சி தான். 


    அவர் நேரடியாகவே அனைவரின் சம்மதத்தோடு, திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூற, அவன் இது நடக்காத காரியம், முதலில் சிவராமன் மாமா ஊருக்கு வர ஒத்துக்கொள்வாரா என்று பாருங்கள் என கூறினான்.


  நடந்ததும் அதுதான், வடிவு பாட்டியும், பூவுப்பாட்டியும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சிவராமன் தன் தந்தையின் அனுமதி இன்றி, அந்த வீட்டினுள் கால் எடுத்து வைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.


    அதையும் மீறி ஊரில் வேலப்பன் ஐயாவின் இல்லத்தில் தங்காமல் வெளியே எங்காவது தங்கிக் கொள்ளலாமே என்று கூறியதற்கு, அது தன் தந்தைக்கு மரியாதையாக இருக்காது என்று முற்றிலுமாகவே மறுத்து விட்டார்.


      "சுத்தம், எதுக்கு ஆத்தா இப்படி அவசரப்பட்டு சொன்னே, ஒரு வேலை மேலூர்காரங்களுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகுமில்ல."


    "அதுக்குன்னு எத்தனை நாள் ராசா இப்படியே இவங்கள ஒதுக்கி வைக்கிறது. அதோட நீ சொன்ன மாதிரி தான் சிவராமனும் சொன்னான். அவங்க அப்பா சம்மதம் இல்லாம அவன் அந்த ஊர் பக்கம் வரமாட்டானாம். பாவம் அவன் இதை சொல்லும் போது என்ற அண்ணி முகம் எப்படி வாடி போச்சு தெரியுமா?


      "சரி சரி ஆத்தா ஊர்ல இருந்து எல்லாருமே வந்து இருக்காங்களா?"


  "ஆமாப்பா ஆனா அந்த மூர்த்தி பயல தான் காணோம். அவன் பொண்டாட்டியும் ஆத்தாவும் கூட வந்துட்டாங்க, இவன் எங்க போனான்னு தெரியலையாம்."


  "சரி ஆத்தா மதுரா வர்றா, நான் போன வைக்கிறேன்."

  

      "ராசா கூடிய சீக்கிரமே என் பேத்திகிட்ட எல்லா உண்மையையும் சொல்லீருப்பா. நீ இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்லி, வாழ்க்கைக்கு அச்சாரம் போடறது, அவ்வளவா நல்லது இல்லப்பா."


  "சரி ஆத்தா கண்டிப்பா சொல்லிடறேன். நான் எதையும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா?"


    "எனக்கு உன்ன பத்தி தெரியாதா ராசா, இந்த விஷயத்தால, உங்க ரெண்டு பேருக்குள்ள, எதுவும் பிணக்கு வந்திடக்கூடாதுன்னு தான் பார்த்தேன். சரிப்பா நான் போனை வைக்கிறேன். பார்த்து சூதானமா இருங்க."


  "போலாமா சார், ஆமா உங்க பிரண்டோட முழு பெயர் என்ன? இன்னைக்கு லாவண்யா மேடமுக்காகவும் உங்க பிரண்டுக்காகவும் தான், இந்த கோயிலுக்கே நாம வந்து இருக்கோம். அதுதான் அவங்க பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணிடலாமேன்னு கேட்டேன்."


  அப்போது தூரத்திலிருந்து கண்ணாடி அணிந்த ஒரு டிப்டாப்பான முதியவர் வேந்தனை நோக்கி கையசைத்து, அவனிடம் வந்தார்.


  "என்னப்பா வேந்தா நல்லா இருக்கியா? என்ன வீட்டு பக்கமே வர மாட்டேங்குற."


    "அது அப்பா கொஞ்சம் வேலை பிசி அதுதான், வீட்டுக்கு வர முடியல. ஆனா சந்துருவ அடிக்கடி நான் வெளியே மீட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?"


  அவர்கள் பேசிக்கொண்டே நடந்து கோவிலினுள் வந்திருந்தனர்.


  "எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா. சரி வா நாம அப்படியே உள்ள போகலாம்."


    வேந்தனுடன் வந்த மதுவை, அப்போதுதான் கவனித்தார் சந்துருவின் தந்தை.


  "ஆமா வேந்தா இந்த பொண்ணு யாரு?"


  சரியாக அந்த நேரத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வர,


      "வாட் என்ன சொல்றீங்க? என் பையன் சந்துருவ ரெஜிஸ்டர் ஆபீஸ்ல பாத்திங்களா? அதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ற இடத்துலயா? கையெழுத்து போட்டுட்டு இருந்தானா?"


        மதுவும் வேந்தனும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


    "சார் இவர்தான் உங்க பிரண்டோட அப்பாவா?"


    "ஆமா, இப்போ இவருக்கு மட்டும் இவங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போற விஷயம் தெரிஞ்சா, லாவண்யாவோட அப்பா கிட்ட டைரக்டா போய் பேசணும்னு சொல்லுவாரு."


    "ஆமா ஆமா லாவண்யா மேடம் தான் சொன்னாங்களே, இவர் நேர்மைடா நியாயம்டா உண்மைடான்னு வாழ்ற நாட்டாமையோட மறு அவதாரம்னு. முறைக்காதீங்க சார் வாய் தவறி உண்மையை சொல்லிட்டேன்."


    "இப்ப என்ன பண்றது, ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எதுக்காக அவன் போனான்னு சொல்றது."


  அதற்குள் அவர் போனை வைத்துவிட்டு கோபமாக திரும்பினார் இவனிடம்,


    "கேட்டியா வேந்தா சந்துரு பண்ண காரியத்தை, உன் பிரண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ்ல இருக்கானாம். இவனுக்கு என்ன அங்க வேலைன்னு கேட்கறேன். போன் போட்டாலும் எடுக்க மாட்டேங்கறான், இரு நானே போய் என்னன்னு பார்க்கறேன்."


  "அப்பா சந்துரு எனக்காக தான் அந்த ஆபீஸ்க்கு வந்தான். ஆக்சுவலா எங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு தான் அங்க ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சு. அப்படித்தானே?"


    இவன் திடீரென்று கூறிய பொய்யில் அதிர்ந்து நின்ற மது, அவன் தலையாட்டி கொண்டே இவளிடம் வினவ, அவளும் அதே போல் தலையை ஆட்டி வைத்தால்.


      இவன் நடத்தும் நாடகத்தைக் கண்டு கருவறையிலிருந்த லிங்கத் திருமேனியரும், மர்ம புன்னகை புரிந்தாரோ! இனி அடுத்த நொடி முதல் எனது திருவிளையாடல் ஆரம்பம் என்று.

No comments:

Post a Comment