Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, May 31, 2025

மன்னவரே 20

 


             அத்தியாயம் 20


      "மது என்னடி இப்படி சொல்ற, அது என்ன காரணமா இருந்தாலும் சரி, நாம இங்க வேலை பார்க்கிறோம், செலக்ட் ஆகறோம், இந்த கம்பெனியிலேயே செட்டில் ஆகுறோம்."


  "நீ சினிமா பாத்து ரொம்ப...கெட்டு போயிட்ட செல்லம். நேத்து கே டிவில சூரியவம்சம் படத்தை பார்த்த எபெக்ட்டா?"


      "மது குட்டி, இந்த இன்டர்வியூக்காக, நான் விடிய விடிய படிச்சிருக்கிறேன் டி. என் உழைப்பெல்லாம் வீணாகலாமா?


  சின்ன வயசுல இருந்து,  நான் படிச்ச குரூப்ல இருந்து, வேலைக்கு சேர்ர வரைக்கும், உன் பேச்சை தானே நான் கேட்டேன். ப்ளீஸ் இந்த ஒரு தடவை எனக்காக இங்கேயே சேர்ந்துக்கலாமே."


"அடி என் டொமேட்டோ, அதுக்கு நாம முதல்ல செலக்ட் ஆகணும்."


"கண்டிப்பா ஆவோம். இப்பதானே வேற கம்பெனில இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினோம். அதுல நம்ம ரெண்டு பேருமே செலக்ட் தானே.


  அப்படி செலக்ட் ஆயிட்டா, நான் சொன்ன மாதிரி தான் நீ கேட்கணும்."


  "அது நடந்தா பாக்கலாம்."


  "ம்ஹூம், இந்த பாக்கலாம் என்கிற போங்கே என்கிட்ட வேண்டாம். பிராமிஸ் பண்ணு நான் சொல்றதை கேட்கிறேன்னு."


    "சரி சரி வேலியில போற ஓணானை வேட்டியில் தான் நான்  எடுத்து விடுவேன்னு, இந்த கம்பெனி ஓனர் முடிவு பண்ணிட்டா, அதை யாரால மாத்த முடியும்."


    அங்கிருந்த வரவேற்பாளரிடம் இந்த நிறுவனத்தை பற்றிய தகவல் பெறுவதற்காக, அவரை தொடர் கேள்விகளால் துளைத்தெடுத்த காரணத்தினால், அவரின் முறைப்பை பரிசாக பெற்றுக் கொண்டு வந்து, இவர்கள் அருகில் அமர்ந்தான் கூகுள் என்கின்ற ராகுல். 


      "என்ன கூகுள் அண்ணா, இங்க வந்ததும் உங்க வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா. ஆல்ரெடி வெளியே

இந்த கம்பெனிய பத்தி விசாரிச்சு இருப்பீங்களே இந்நேரம்?


        அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத விசாரிப்பு. அங்க பாருங்க நாம வரும்போது, அந்த பொண்ணு சிரிச்சிகிட்டு எவ்வளவு அழகா இருந்துச்சு ரிசப்ஷன்ல, இப்போ மந்திரிச்சு விட்ட மாதிரி நிக்குது."


      "அது நாம இப்போ ஒரு இடத்துக்கு வேலை செய்ய போறோம்னா, அத பத்தி தெரிஞ்சு வச்சிகிறதுல தப்பில்லையேம்மா?"


  "உங்க கடமை உணர்ச்சியை பார்த்து நான் புல்லரிச்சு போயிட்டேன் போங்க."


    சிறிது நேரத்திலேயே இவர்களிடம் வந்த அலுவலக ஊழியர் ஒருவர், தோழிகள் இருவரையும் அவர்களது இன்டர்வியூவிற்க்காக, மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றார்.


    ராகுல், தான் இங்கேயே இருப்பதாக கூறி, அவர்களை அனுப்பி வைத்தான்.


      தோழிகள் இருவரும் தமது வாழ்க்கையின், அடுத்த அத்தியாயத்திற்கான படிக்கட்டுகளை தேடி, வெவ்வேறு அறைக்குள் நுழைந்தனர்.


    வினுவிற்கு, இந்த நிறுவனத்தின் மேனேஜர் கேள்விக்கணைகளை தொடுத்து கொண்டிருந்தார்.


    கதவினை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்த மது, இருக்கையில் இருந்த வேந்தனைக் கண்டு திடுக்கிட்டு அங்கேயே நின்று விட்டாள்.


      அவன் இவளை கண்டு கொண்டது போலவே தெரியவில்லை, தனக்கு முன் இருந்த கோப்பினில் பார்வையை பதித்திருந்தவன், அவள் அங்கேயே நிற்பதை பார்த்து வந்து அமரும்படி சைகை காட்டினான்.


      "சோ மிஸ் மதுரம் ரைட்?"


    மது பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டு,


    "சார் என் பேர் மதுரயாழினி."


      "வாட் எவர், உங்களோட குவாலிபிகேஷன் பத்தி சொல்லி இருந்தாங்க. எவ்வளவு நாளா இந்த ஃபீல்டுல ஒர்க் பண்றீங்க, அண்ட் அதர் கம்பெனிஷ்க்கு இந்த மாதிரி அக்கௌன்ட் எதுவும் பார்த்து இருக்கீங்களா?"


      அதற்கு அடுத்து அவன் கேட்ட, அத்தனை கேள்விகளும் வேலை சம்பந்தமாக தான். மதுவும் அதற்கு தகுந்த பதில்களை கொடுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தால், ஒருவேளை அவன் தன்னை மறந்து விட்டானோ என்று.


      மது, வேந்தனை குறுகுறுவென்று பார்க்க, வேந்தன் தன் புருவங்களை உயர்த்தி, என்னவென்று கண்களாலேயே வினாவ, அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைத்து தன் பார்வையை தழைத்துக் கொண்டால்.


    வேந்தன் குறும்பு புன்னகையுடன் தலையை ஆட்டிக் கொண்டே கேள்விகளைத் தொடர்ந்தான். கேள்விகளின் இடையே அவள் பார்க்காத போது அவளை ரசிக்கவும் அவன் தவறவில்லை.


      மதுவும் சிறிது நேரம் இவன் பார்வையில் தடுமாறினாலும், அவன் கேள்விக்கான பதில்களை, சிறந்த முறையில் கூறிக் கொண்டிருந்தாள்.


    "ஓகே குட். ஐ அம் இம்ப்ரஸ்ட். நீங்க நல்லாவே ப்ரிப்பேர் ஆகி இருக்கீங்க. உங்களுக்கு ஒரு டவுட் இருக்கலாம் இவ்வளவு பெரிய கம்பெனியில் ஆடிட்டிங் இல்லையான்னு, கண்டிப்பா இருக்கு.


      அது என்னன்னா எங்களுக்கு ஆடிட்டர்ஸ் இருந்தாங்க, பட் ஒரு சில காரணத்தால அவங்களால தொடர முடியல. அதனால நானே பார்க்க வேண்டியிருந்தது."


      "வேற ஒரு இடத்துல கொடுக்கிறதுக்கும் எனக்கு விருப்பமில்லை. என்னுடைய மேற்பார்வையில் ஒரு டைம் ரிவைண்டு பண்ணனும்னு நெனச்சேன். அதுக்காக தான் உங்கள இப்போ தேர்ந்தெடுத்து  இருக்கோம்.


        உங்களுக்கு எவ்வளவு நாள் தேவைப்படும்னு நினைக்கிறீங்க?"


    "சார் அதிகபட்சமா ஒரு மாசம் தேவைப்படும், ஆனா இது தான்னு முடிவா சொல்ல முடியாது மேபி  நாட்கள் தேவைப்படலாம்."


  "சரி நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள்ள முடிப்பதற்கு முயற்சி செய்யுங்க."


"ஓகே சார் கண்டிப்பா நாங்க முயற்சி செய்றோம்."


  "இந்த கணக்கு ஓகே, இந்த கணக்கை எப்ப செட்டில் பண்ணப் போறீங்க மிஸ் மதுரம்."


  வேந்தன் ஒரு தாளினை நீட்ட, கேள்விக்குறியோடு அதனை வாங்கி பார்த்தால் மது.


    அதில் வேந்தனது கார் ஹெட் லைட் மாற்றியதற்கான தொகை இருந்தது.


   அசட்டையாக அதை அவன் டேபிளில் வைத்தவள்.


  "இதை எதுக்காக நான் கொடுக்கணும்?”


    தன்னை கண்டு கொண்டான் என்று, அவள் பதறுவாள் என நினைத்தால், இவ்வாறு எதிர் கேள்வி அவளிடம் இருந்து வரவே, வேந்தனால் அவளின் தைரியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

   

"நீங்க ஒடச்சதுக்கு நீங்க தானே பே பண்ணியாகணும்னு மிஸ் மதுரம்."


  "ப்ச்சு, முதல்ல இப்படிக்கு கூப்பிடுறத நிறுத்துறீங்களா?"

 

    "ஒரு மாசம் இங்க வொர்க்ல இருக்கப் போற உங்கள, நான் என்ன பேர் சொல்லி கூப்பிட்டா என்ன?


  அதுவும் உங்க பேருல தானே இருக்கு. ஒருவேளை நான் உங்களை செல்ல பேரு சொல்லி கூப்பிடனும்னு  எதிர்பார்க்கறீங்களா மிஸ் மதுரம்?"


"மண்ணாங்கட்டி, நீங்க எப்படி கூப்பிட்டா எனக்கு என்ன மிஸ்டர் எம்டீ சார். ஆனா இந்த அமௌன்ட் நான் எதுக்காக கொடுக்கணும். நான் தான் உடைச்சேன் என்பதற்கு என்ன ஆதாரம்."


  வேந்தன் சிரித்துக் கொண்டு தனது முன்னிருந்த லேப்டாப்பின் திரையை, அவளை நோக்கி திருப்பி வைத்தான்.


    அதில் ஓடிய காட்சிகளை கண்ட மது, திரு திருவென முழிக்க ஆரம்பித்தாள். வேந்தன் கால் மேல் கால் போட்டு கொண்டு, புருவத்தை உயர்த்தி தோரணையாக கேட்டான்.


   "என்ன மிஸ் மதுரம், பட்டா போட்டர்லாமா?"


Friday, May 30, 2025

மன்னவரே 19

 


             அத்தியாயம் 19


  அமைச்சர் பொன்னுரங்கத்தின் வீட்டில் தனக்கு முன் நிற்கும், தனது அடியாட்களிடம் கத்திக் கொண்டிருந்தார் அமைச்சர்.


      அவருக்கு சற்று தள்ளி யோசனையுடன் அமர்ந்திருந்தார் அமைச்சரின் குருஜி.


      "அறிவு கெட்டவனுங்களா, நீங்க எல்லாம் ஒரு வேலைக்கு கூட லாயக்கில்ல, உங்கள நம்பி இந்த வேலையை கொடுத்தேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்.


   அந்த போலீஸ்காரன் காட்டச்சுத்தி கேமரா மாட்டறவரைக்கும், நீங்க என்ன புடுங்கிட்டா இருந்தீங்க.


      எனக்கு இன்னும் ஒரு வாரத்துல பொருள் கைக்கு வந்தாகணும்.”


  "தலைவரே கேமரா மட்டும் இல்ல, ஊர் காவல் படைன்னு சொல்லி ஒரு பத்து இளவட்ட பசங்கள, காட்டச்சுத்தி காவலுக்கு விட்டு இருக்காங்க. இதெல்லாம் அந்த ஊர் தலைவரோட வேலையாம்."


  ஆம், சுந்தரமூர்த்தி அய்யாவிடம் ஊர் மக்களின் பாதுகாப்பிற்காக என்று கூறி, ஒரு கம்ப்ளைன்ட்டை ஃபைல் பண்ண சொல்லியிருந்தார்கள் வேந்தனும் தீபனும்.


      அத்தோடு ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி, திருவிழா முடியும் வரைக்கும், ஊர் மக்களின் பாதுகாப்பு அவர்கள் பொறுப்பு என்று, ஊர் காவல் படையை உருவாக்கி இருந்தனர். 


      அதில் தைரியமான சிலரை தேர்ந்தெடுத்து காட்டை சுற்றி காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.


  "அந்த காட்டுக்குள்ள இருக்குறவங்களை கூட, இப்போ எப்படி வெளிய கூட்டிட்டு வர்ரதுன்னே தெரியல தலைவரே."


      "அவனுங்களையெல்லாம் அப்படியே சாக சொல்லு, இத்தனை நாளா ஒரு வேலையாச்சும் முடிச்சானுங்களா?"


    "பொறு ரங்கா, இந்தத் திருவிழா முடிவதற்குள், அந்த பொருள் உன் கைக்கு வந்து சேரும், இதற்கு நான் பொறுப்பு.


      நாம கண்காணிக்கிறது இருக்கட்டும், முதல்ல நம்மள யாராவது கண்காணிக்கிறாங்களான்னு உன் ஆளுங்கள பார்க்க சொல்லு. நாம எங்கேயோ சறுக்குறோம், அது எந்த புள்ளினு முதல்ல கண்டுபிடிக்க சொல்லு."


  "ஆகட்டும் குருஜி அப்படியே பண்றேன்.


    டேய் குருஜி சொன்னது கேட்டீங்கள்ள, எவனாது சந்தேகப்படுற மாதிரி உங்களை சுத்தி இருந்தானுங்கன்னா, அவனுங்க டீடெயில்ஸை கலெக்ட் பண்ணிட்டு சொல்லுங்க."


  அப்போது அமைச்சருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, அதை திரையில் கண்டு விட்டு குருஜீயிடம் சென்று கொடுத்தார்.


  "சொல்லு விஜயா, எப்படி இருக்கிறாய் நலம்தானே?"


    "குருஜி, என் பொண்ணு அந்த பள்ளத்துக்குள்ள கஷ்டப்பட்டு இருக்கும்போது, நான் எப்படி நலமா இருக்க முடியும்.


  இன்னும் எவ்வளவு நாள் தான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை, இதுக்கு என்ன தான் தீர்வு?


      அதோடு, அடுத்த வாரம் குருந்த மரத்துக்கு அடியில் இருந்து மண் எடுக்க போறாங்க, அந்த காட்டுப் பிச்சிக்கு சிலை செய்ய, அவளுக்கு சக்தி கிடைத்துவிட்டால் பிறகு என்ன நடக்கும் என்று, நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா குருஜி."


    அவர் கூறிய செய்தியில் திடுக்கிட்ட குருஜி, சிறிது யோசனைக்கு பின், மர்ம புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.


    "விஜயா இதில் நமக்கான வாய்ப்பும் ஒளிந்துள்ளதை கவனிக்க தவறினாயா?"


    "குருஜி?"


    "அங்கிருந்து மண் எடுத்து விட்டால், அவளுக்கு தற்போதுள்ள கொஞ்ச சக்தியும் போய் விடும் அல்லவா?


    திரும்பவும் அங்கு சிலை பிரதிஷ்டை செய்யும் வரை, அங்கு எந்த சக்தியும் காவலுக்கு இருக்காது அல்லவா?"


  உன் மகள் உயிர்த்தெழ போகும் நாள், வெகு தூரத்தில் இல்லை விஜயா.


    வேந்தனுக்கு முற்பிறவி ஞாபகம் வருவதற்கு முன், அவன் உன் மகளுடன் திருமண பந்தத்தில் இணைய வேண்டும்.


  இல்லையேல், அவன் அவனின் காதல் மனைவியை தேடி, சென்றடைந்து விடுவான்.


  அந்தக் காட்டு ராணி, ஊரினுள் நுழைந்தால் வரலாறு திரும்பும். வேந்தனின் ராணியாக இரு மடங்கு சக்தியுடன், அனைவரையும் தவிடு பொடி ஆக்கி விடுவாள்."


    "அவளை இந்த ஊரினுள் நுழைய விடமாட்டேன் குருஜி, அதற்காகவே எங்கும் சொல்லாமல் இந்த ஊரிலேயே தவம் கிடக்கிறேன். ஒருவேளை அவள் திரும்பி விட்டால், அவளின் சாவு என் கைகளால் தான். "


  வினு திறந்த வாயை மூடாமல் ஆச்சரியமாக மதுவை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்.


  "நீ நெஜமா தான் சொல்றியா, உங்க அப்பா நீ வேற ஆஃபீஸ்க்கு போக ஒத்திகிட்டாரா?"


  "நீ வேற வினு என்னாலையும் தான் இதை நம்பவே முடியல. எங்க அண்ணன் இதை கேட்டு உறைஞ்சு போயே நின்னுட்டான். அதைவிடு, உன் வீட்டில் என்ன சொன்னாங்க."


  "எங்க வீட்டில் எல்லாரும் செம ஹேப்பி. அது நல்லா ஃபேமஸான கம்பெனியாம். நானும் வெளியே விசாரிச்சேன், நல்லா விதமா தான் சொல்றாங்க.


  அவங்க கம்பெனில இங்கயே ஜாயின் பண்ணிக்கறீங்களான்னு கேட்டால், கண்ணை மூடிட்டு சரின்னு  சொல்லச் சொல்லி அப்பா சொல்றார்."


    தோழிகள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசுதேவன் ராகுலுடன் அலுவலகத்தில் நுழைந்தார். இவர்களையும் அழைத்துக் கொண்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தவர்,


  "என்ன முடிவு பண்ணிருக்கீங்க ரெண்டு பேரும்?"


  "எங்களுக்கு சம்மதம் சார்."


    "ஓகே, அப்ப நீங்க ரெண்டு பேரும், ராகுல் கூட அந்த ஆபீஸ் போங்க. நான் நேத்தே சைட்டுக்கு போகல, அங்க போயிட்டு நேரா அங்க வந்துடறேன்.


  உங்க ரெண்டு பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ம்மா. நம்ம கம்பெனிக்கு நல்ல பேரை வாங்கி கொடுங்கனும் ரெண்டு பேரும்."


  இவர்கள் அனைவரும் கிளம்பி சென்று, சுந்தரம் குரூப் என்ற பதாகையை தாங்கிய கட்டிடத்தினால் நுழைந்தனர்.


  தோழிகள் இருவரையும் வரவேற்ப்பறையில் அமர வைத்துவிட்டு, ராகுல் ரிசப்ஷனில் தங்களது வரவை பதிவு செய்ய சென்றான்.


  வரவேற்பறையே ஒரு கலை பொருட்களின் கூடம் போன்று இருந்தது.


      விதவிதமான வடிவங்களில், நுணுக்கங்களுடன் கூடிய அழகிய வேலைப்பாடுகள், மனதை கொள்ளை கொண்டன.


    "மது ரொம்ப அழகா இருக்கில்ல, உனக்கு தெரியுமா? இவங்க தென்னை நார் வச்சு கலைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வச்சிருக்காங்க. அவங்களோட பெஸ்ட் கலெக்ஷன்ஸ் தான் இதெல்லாம். 


  அதோட கயிறு, தென்னை நார், நார்கட்டித்துகளோடு இந்த கலைப் பொருட்களையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யறாங்க.


  சுந்தரம் இவரோட தாத்தா பேராம். அதே பேர் தான் எல்லா கம்பெனிஸுக்கும் வச்சிருக்கார். இதோட எம்டி யுவேந்திர பாண்டியன். ஆள் சிங்கிள் தான், எல்லா ஒர்க்குக்கும் இவர் தான் மேற்பார்வையாம். இந்த ஐடியாஸ் எல்லாமே இவரோடதுதானாம். இதுதான் அவங்களோட மெயின் ஆபீஸ்.


      இவங்களுக்கு தனியா கருப்பட்டி தொழிற்சாலையும் இருக்காம்."


    மது வினுவை மேலிருந்து கீழாக பார்த்து,


    " நீ எதுக்கு இப்போ ரியல் எஸ்டேட் விளம்பரத்துல வர லேண்ட் விக்க வந்த ஆக்டர் மாதிரி, இந்த ஆபீஸ்க்கு விளம்பரம் பண்ணிகிட்டு இருக்க."


      "அது..., நல்ல கம்பெனி நாம இங்க வேலைக்கு இருந்தா, நமக்கு தானே பெருமை. "


  "நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் மன்னா, நாம் வந்திருப்பது இன்டர்வியூக்காக. இதில் தேர்வு பெற்றால் தான் நமக்கு இங்கு வேலை.


  அதுவும் நாம், நம் ஆபீசின் சார்பில் தான் வேலை செய்ய வந்திருக்கிறோம். புரிந்ததா என் மங்குனி மன்னா."


"என்னடி மது?"


  "என்ன நொன்னடி, இவ்வளவு விஷயம் சொன்னியே, அதிலிருந்தே உனக்கு தெரிய வேணாம்.


      இவ்வளவு பெரிய கம்பெனிஸ்ல ஆடிட்டிங் இல்லாம இருக்குமா? அதுவும் வெளிநாட்டு லெவல்லனா கண்டிப்பா, அவங்க வெச்சிருப்பாங்க.


எனக்கு தெரிஞ்சு நம்மளை இவங்க கூப்பிட்டதற்க்கு இரண்டே காரணம் தான், ஒன்னு அவங்களோட ஆடிட்டர்ஸ் மேல சந்தேகம் வந்து கணக்குகளை உறுதி பண்ணிக்கவா இருக்கலாம்.


  இல்லைனா கணக்குகளை மாத்தி எழுதி, பங்குதாரருக்கு தெரியாம, கள்ளக்கணக்கு எழுதவா இருக்கலாம்."


    எம்டி அறையில் இருந்து, இவர்களை கட்டிடத்தினுள் நுழைந்ததிலிருந்து பார்த்துக் கொண்டே, நீர் அருந்தி கொண்டிருந்த வேந்தனுக்கு  மது பேசியதை கேட்டு புரை ஏறியது,


  "அடி என் அத்த மகளே, நீ இவ்வளவு விவரமா இருந்தா, நான் எப்படி என் திட்டத்தை செயல்படுத்துறது."

Thursday, May 29, 2025

மன்னவரே 18

 


          அத்தியாயம் 18


      "சார் இதுல எங்களோட ஹெல்ப் என்ன இருக்கு?"


  "எதுவா இருந்தாலும் சொல்லுங்க. எங்களால முடிஞ்சா, கண்டிப்பா செய்யறோம்."


  "அவங்க, அவங்களோட கம்பெனி கணக்குகளை எல்லாம் ஒரு டைம் ரீவைண்ட் பண்ணி பாக்கணும்னு சொல்றாங்க ம்மா. 


    அதுக்கு யாராச்சும் நம்பிக்கையான ஒர்க்கர்ஸ் கிடைப்பாங்களான்னு என்கிட்ட கேட்டு இருந்தாங்க.


    நான் உங்க ரெண்டு பேரை தான் ரெக்கமண்ட் பண்ணி இருக்கேன். இது உங்களுக்கு கிடைச்ச ஒரு நல்ல சான்ஸ்.


    அது ஒரு பெரிய கம்பெனி. வெளிநாட்டு கம்பெனியோட வியாபாரம் செய்றவங்க, இங்கேயே அவங்களோட கம்பெனிஸ் ரெண்டு மூணு இருக்கு."


    "சார் இவ்வளவு பெரிய கம்பெனின்னு சொல்றீங்க, கண்டிப்பா அதுக்கு தனியா ஆடிட்டர்ஸ் வச்சிருப்பாங்களே?"


  "இவ்வளவு நாளா அதோட ஓனரே பார்த்துட்டு வந்தாங்களாம். இவரோட வேலை பிசில அதுல நிறைய பெண்டிங் வச்சுட்டாராம்.


    மத்தவங்க கிட்ட வெளியே கொடுத்தா, முதல்ல இருந்து பார்க்க ஆரம்பிக்கணும். ஏதாவது டவுட்ஸ்னா இடையில் இவரால போயிட்டு இருக்க முடியாது.


    அந்த பெண்டிங் ஒர்க்ஸ் எல்லாம் முடிச்சு கொடுக்க, யாராவது கிடைப்பாங்களான்னு கேட்டாரு. நான் உங்களை சிபாரிசு பண்ணி இருக்கேன். மேக்ஸிமம் நீங்க அவங்க ஆபீஸ்ல இருந்து வேலை பார்க்கிற மாதிரி இருக்கும். 


    கவலைப்படாதீங்க நம்ம ராகுலும் அந்த கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க்கிற்காக உங்க கூடவே இருப்பாரு. நீங்க அங்கேயே உங்களோட ஒர்க் எல்லாம் வச்சுக்கலாம்.


      அப்பறோம், நான் என்னதான் உங்களை ரெகமெண்ட் பண்ணி இருந்தாலும், அவங்க உங்ககிட்ட சில கேள்விகள் கேட்டு திருப்தியா இருந்தா மட்டும் தான், வேலைக்கு எடுத்துக்கறதா சொன்னாங்க, இதுல உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே."


  "இதுல என்ன சார் இருக்கு எல்லா கம்பெனியிலும் இருக்கிறது தானே, ஸ்டாப்ஸ் புதுசா எடுக்கும்போது அவங்களோட திறமை என்னன்னு தெரிஞ்சா தானே, அவங்களுக்கான வேலையை கொடுக்க முடியும். ஆனா சார் அப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டாரே"


  "உங்க அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் மதுமா. முதல்ல உங்க ரெண்டு பேத்துக்கும் சம்மதமான்னு சொல்லுங்க"


  மதுவும் வினுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க 


      "சரி நீங்க வேணும்னா இன்னைக்கு வீட்ல போய், டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து நாளைக்கு உங்க பதிலை சொல்லுங்க. ஆனா உங்களுக்கான நல்ல வாய்ப்பு இது, தவற விட்டுறாதீங்க."


  அவரிடம் தலையை தலையை ஆட்டிக் கொண்டு, வெளிவந்தனர் தோழிகள் இருவரும்.


      "என்ன வினு பண்ணலாம்?"


      "ஒருவேளை நாம வெளிய வேலை தேடிட்டு இருந்த விஷயம், நம்ம ஓனர்க்கு தெரிஞ்சிருச்சோ? அதான் அவரே நம்மள பிளாக் பண்ணி வேற ஆபீஸ்க்கு தள்ளி விட்டுட்டாரோ?"


    "ஆமா அவருக்கு வேற வேலை இல்ல பாரு, உன்னையும் என்னையும் கண்காணிக்கிறது தான் வேலை. ஐயோ எங்க அப்பா கிட்ட போய் சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னே தெரியலையே.


    ஒருவேளை நீ வேலைக்கே போக வேண்டாம் சாமி, வீட்டிலேயே இருந்துக்கோன்னு சொல்லிட்டாருன்னா?


        இதுதான் சாக்குன்னு என் ஜாதகத்தை கையில் தூக்கிடுவாங்களே, நானே என் அப்பா அம்மாகிட்ட கெஞ்சி, ஒரு வருஷம் டைம் வாங்கி வேலைக்கு வந்துட்டு இருக்கேன், அதுவும் போச்சா."


           வாசுதேவன் சிவராமனுக்கு அழைத்து இது பற்றி பேசினார். அவர் சற்று தயங்கினாலும் ஏற்கனவே, புதிதாக தன் மகளின் திறமைக்கு கிடைத்த நல்ல வேலையை, வேண்டாம் என்று சொல்லி விட்டோம். 


        சரி, இதற்காவது அனுப்பி வைப்போம் என்று, தன் நண்பன் மேல் உள்ள நம்பிக்கையில் இதற்கு சிவராமன் ஒத்துக் கொண்டார். 


    அவர் கூறிய நிறுவனமும் தற்போது வளர்ந்து வரும், நற்பெயர் எடுத்த நிறுவனம்தான். தன் மகளின் திறமைக்கு கிடைக்கப் போகும் அங்கீகாரமாகவே இதை நினைத்தார். 


    அதனாலேயே அவர் ஒத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அதற்குப் பின், அவர் மனம் ஒரு நிலையில் இல்லை.


    மது பிறந்த அந்த கோவிலில் இருந்தார் சிவராமன். அந்த தெய்வத்தின் முன்பு கண்களை மூடி அமர்ந்து விட்டார். முற்பகல் நேரம் என்பதால் அவ்வளவாக மக்கள் கூட்டம் அங்கு இல்லைபோலும்.


      அவரின் விழி மூடியிருந்தாலும், மனதில் வாதிட்டுக் கொண்டிருந்தார், எதிரில் சிலையாக அமர்ந்திருந்த மாகாளியம்மனோடு.


  "தாயே காளியம்மா நீ சொன்ன ஒரு காரணத்துனாலே தான், என் பொண்ணோட படிப்பிலிருந்து இப்ப பார்க்கிற வேலை வரைக்கும் என்னோட கண்காணிப்பில் இருக்கிற மாதிரி பார்த்துகிட்டேன்.


        இப்போ அவ திறமைக்கேற்ப வேலை கிடைக்கும் போது மறுக்கவும் முடியல, போன்னும் சொல்ல முடியல.


  நான் சரின்னு சொல்லிட்டாலும் என் மனசு ஏனோ பதட்டமாவே இருக்கு. அதுதான் உங்களை தேடி வந்து இருக்கேன்.


  பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும்னு  நாங்க ஆசைப்படறோம். நீ தான் அதுக்கு ஒரு நல்வழி காட்டணும் தாயே."


        தன் கண்களை மூடி மனதில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த சிவராமன் கண்விழித்துப் பார்த்தபோது எதிரே அன்று மது பிறந்த போது கண்ட அதே வயதான பெண்மணி மஞ்சள் பூசிய முகத்தோடு நெற்றி நிறைய பொட்டோடு புன்னகை மின்ன அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.


    "என்னப்பா மத்தவங்க குறைதீர்க்க பிறந்த மகராசிய பெத்துட்டு, இப்படி மருகி நிற்கலாமா?"


  அவருக்கு பேச வாய் வரவில்லை. அந்த தாய் பேசுவதை மட்டும் பயபக்தியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.


  "எந்த ஒரு விஷயமும் காரணம் இல்லாம நடப்பது இல்ல மகனே, இது அவள் சென்று சேர வேண்டிய பாதை தான். விதியை யாராலும் மாற்ற முடியாது நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றே நினைத்து கொள்.


      கூடிய சீக்கிரமே உன் மகளின் திருமண செய்தி உன்னை வந்து எட்டும்.”


        “செய்தி கிட்டுமா? அப்போ, பொண்ணோட திருமணத்த பார்க்குற கொடுப்பினை, அவளைப் பெத்த எங்களுக்கு  இல்லையா?"


  அந்த தாய் சிரிக்கும் கண்களில், கூர்மையுடன் அவரை நோக்கி,


    "அந்த கொடுப்பினையை, உன்னை பெற்றவர்களுக்கு நீ கொடுத்தாயா?"


தன்னை யாரோ  உலுக்கியதை போல இருக்க, கண்களை தேய்த்துக் கொண்டு பார்த்தார்.


    தன் மனைவி, அருகில் காபி கோப்பையுடன் இருக்கவே அப்போதுதான் புரிந்தது, அவருக்கு தான் கண்டது கனவு என்று.


        இனி அந்த தாய் விட்ட வழி என்று மதுவின் வரவிற்காக காத்திருந்தார்.


      மது வந்ததும் அவளை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டவர்


  "மதுமா வாசு மதியம் எனக்கு கூப்பிட்டு இருந்தான்."


  மதுவிற்கு என்ன சொல்லப் போறாரோ என்று மனதிற்குள் பயபந்து உருண்டு கொண்டிருந்தது.


  "உனக்கு அந்த புது வேலைக்கு போக விருப்பமா?"


  "உங்க இஷ்டம் தான் பா. நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குறேன் பா."


      சிவராமனுக்கு மனது நெகிழ்ந்து போனது தனது மகளை நினைத்து,


"அப்பாக்கு சம்மதம் தாம்மா. உனக்கு பிடிச்சிருந்தா, நீ அங்க போய் வேலை செய்."


மதுவிற்கு இது உண்மைதானா என்று நம்ப முடியவில்லை. தான் சற்றும் எதிர்ப்பாராத இந்த முடிவை, தன் தந்தை எடுப்பார் என்று அவள் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை.


Wednesday, May 28, 2025

மன்னவரே 17

 


            அத்தியாயம் 17


  மதுவும் வினுவும் வாசு  புரமோட்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் என்னும் பதாகையை தாங்கிய கட்டிடத்திற்கு முன்பு, தம் ஸ்கூட்டியில் வந்து இறங்கினர். இதுதான் அவர்கள் பணிபுரியும் அலுவலகம்.


    இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு தகுந்த முறையில் வீடு கட்டித் தருவதோடு, பேங்க் லோன் வேண்டுமென்றால் அதற்கான அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, குறிப்பிட்ட பேங்க்களில் இருந்து பைனான்ஸ் வாங்கிக் கொடுத்து, இஎம்ஐ ஆப்ஷனில் வீடு கட்டித் தரப்படும்.


    அதற்காக சரிபார்க்கப்படும் அக்கவுண்ட் செக்ஷனில் தான் தோழிகள் இருவரும் பணி புரிகின்றனர்.


  ஒரு சில சிறிய கடைகளில், வருடக் கடைசியில் ஏற்படும் ஆடிட்டிங் பிரச்சனைகளும், இவர்களிடம் வருவதுண்டு. 


  அதையும் இவர்கள் இருவரும் தான் சரி பார்த்துக் கொடுக்கின்றனர். இங்கு இவர்களோடு சேர்த்து இன்னும் நான்கு பேர், அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள்.


        வெளிவட்டாரத்தில் கமிஷன் அடிப்படையில், நிறைய பேர் வெவ்வேறு துறையில் வேலை செய்கிறார்கள்.


    இங்கு வாடிக்கையாளர்களிடம் அக்ரீமெண்ட் போடப்பட்டு, வேலைக்கான முன்பணத்தை பெற்றுக்கொண்டு தான் வேலையை ஆரம்பிப்பார்கள்.


    ஒருவேளை வாடிக்கையாளர்களுக்கு இவர்களின் வேலை பிடிக்காமல், வேலையை நிறுத்த சொல்லி விட்டு கொடுத்த அட்வான்ஸ் திரும்பக் கேட்டால், நிறுவனத்தில் இருந்து கொடுக்கும் செக்குகள் அனைத்தும் பவுன்ஸ் ஆகி தான், திரும்ப வரும்.


    அதையும் மீறி சிலர் அலுவலகம் தேடி வந்து கலர் கலர் வார்த்தைகளால் சண்டையிட்டால், வாசுதேவனிடமிருந்து வரும் ஒரே வார்த்தை,


"வேறொரு பார்ட்டியை, இங்க சேர்த்து விட்டுட்டு, நீ உன் பணத்தை வாங்கிக்கோ. அதைத் தவிர வேற எந்த ஆப்ஷனும் இல்ல."

 

      இங்கு தினம் தினம் தொலைபேசியிலும் நேரிலும் கேட்கும் கலர் கலர் பொன்மொழிகளாலேயே, தோழிகள் இருவரும் வெளியில் வேறு நல்ல வேலையாய் தேடிக் கொண்டிருக்கின்றனர்.


  வாசுதேவன் மதுவின் அப்பாவான சிவராமனுக்கு நல்ல நண்பர். வேலை விஷயத்தில் எப்படியோ, ஆனால் பழக்கவழக்கத்தில் நேர்மையான மனிதர்.


      அதனால்தான் தன் மகளின் பாதுகாப்பிற்கு ஒரு குறையும் இருக்காது என்று, இங்கு தன் மகளை வேலையில் சேர்த்துள்ளார்.


  இவர்கள் அலுவலகத்தினுல் நுழையும் போதே, பணம் திரும்ப கிடைக்க பெறாத வாடிக்கையாளர் ஒருவர், சாபத்தையும் நிறைய கலர் கலர் வார்த்தைகளையும் அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.


    அத்தனையும் கேட்டுக் கொண்டு, அவரை தாண்டிக் தான் இவர்களுடைய இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.


      "காலையிலேயே நல்ல வார்த்தைங்களா...கேட்டாச்சு, இன்றைய நாள் அமோகமா இருக்கும் போ."


  "ஆமா, ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு மது, அது எப்படி டி உங்க அப்பா இந்த மாதிரி ஒரு இடத்தில உன்னை வேலைக்கு சேர்த்து விட்டு இருக்காரு.


          ஓனர் உங்க அப்பாவோட ஃப்ரெண்டுனா, இவர் செய்ற எல்லா போர்ஜரி வேலையும் உங்க அப்பாக்கு தெரிஞ்சிருக்குமே. அதையும் மீறி உங்க அப்பா எப்படி, இங்க உன்னை சேர்த்தார்?"


    "என் அப்பாக்கு இவர் மட்டும் தெரிஞ்சவங்க இல்லை, நம்ம பில்டிங்க்கு அடுத்த பில்டிங்லா இருக்க டீக்கடை அண்ணாச்சியும், இரண்டு கடைக்கு அந்த பக்கம் இருக்க பழமுதிர் நிலைய ஓனரும்,நம்ம ஆபீஸ்க்கு எதிர்ல இருக்க பேக்கரி ஓனரும், அடுத்த தெருவுல தள்ளு வண்டியில பழம் விற்கிறவரும் தெரிஞ்சவங்க தான். 


    வேலைக்கு சேர்ந்த மறுநாளே, எங்க அப்பா என்னை கூட்டிட்டு போய், இவங்க எல்லார்கிட்டயும் அறிமுகப்படுத்தி வச்சு, என்னை பாத்துக்க சொல்லிட்டு தான் விட்டுட்டு போனார்."


      "அப்போ, உன்ன சுத்தி உங்க அப்பா ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வெச்சிருக்கார்னு சொல்லு."


         "தவறு மன்னா, தங்கள் கூற்றில் பிழை உள்ளது. ஒரு நல்ல பாதுகாப்பு வளையமா பார்த்து, என்னை பொருத்தி வச்சிருக்கார்ன்னு சொல்லலாம்."


      "நான் உன்ன கூண்டுக்கிளின்னு சொல்றதுல தப்பே இல்ல. சரி முறைக்காதே...முறைக்காதே..."


            அப்போது வாசுதேவன் அலுவலகத்திற்கு விஜயம் புரிந்து, நேராக அவருடைய அறைக்கு சென்றார்.


    அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அதை ஆச்சரியமாக பார்த்திருந்தனர்.


          "என்ன அதிசயமா இருக்கு. இன்னைக்கு இவர் சைட் விசிட்டிங் போற நாள் தானே? எப்பவும் இந்த மாதிரி, சைட் விசிட்டிங்கை  விட்டுட்டு ஆபீஸ்க்கு வந்ததில்லையே."


    "வினு நம்ம ஆபீஸ் கூகுளை கூப்பிட்டு விசாரி, ஏதாவது பிரச்சனையா, இல்ல புதுசா பெரிய வாத்தா ஏதாச்சும் இவர்கிட்ட மாட்டி இருக்கான்னு?"


    இவர்கள் ஆபீஸ் கூகுள் என்று கூறுவது, இங்கு பணிபுரியும் ராகுலை தான், இவனுக்கு ஆபீஸின் உள்ளும் வெளியேவும் நடைபெறும் விஷயங்கள் அத்தனையும் அத்துப்படி. 


    எங்கு என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பவன். அதனாலயே இவர்கள் வைத்த பெயர் ஆபீஸ் கூகுள்.


      ராகுலின் குடும்பத்தார் அவர் அப்பாவின் காலத்திலேயே, வட இந்தியாவில் இருந்து பிழைப்புக்காக இங்கு புலம்பெயர்ந்தவர்கள்.


    அவன் தந்தையின் இறப்பிற்கு பின், குடும்ப வருமானத்திற்காகவும், தம் அக்கா தங்கையின் திருமணதிற்காகவும் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கிடைத்த வேலையில் சேர்ந்தான்.


  சிறிது காலத்தில் வாசுதேவனிடம் வேலைக்கு சேர்ந்தவன்,இதன் நுணுக்கங்களையும் வளைவு நெளிவுகளையும் தெரிந்து கொண்டு, இந்த தொழிலை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.


        அலுவலகத்தில் உள்ள பெண்களை உடன்பிறப்பாக நினைப்பவன். அதனாலேயே இவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கருதுபவன்.இவனை மீறி அலுவலகத்திற்குள் நுழைந்து இங்குள்ளோருக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.


    "என்ன கூகுள் அண்ணே, அதிசயமா இருக்கு. உங்க குருஜி சைட் விசிட்ட விட்டுட்டு, ஆஃபீஸ் பக்கமா வந்து இருக்காரே, ஏதாச்சும் பிரச்சனையா?"


    "பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லம்மா, ஒரு பெரிய பார்ட்டியோட ப்ராஜெக்ட் நம்மகிட்ட வந்திருக்கு. அதுதான் சார் அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ண இங்க வந்திருக்கார்."


      வாசு தன் கேபினில் இருந்து இவர்கள் மூவரையும் அழைக்க,  அங்கு சென்றனர்.


    "மது, வினோதினி உங்க ரெண்டு பேத்துக்கும் உங்களுக்கு பிடிச்ச துறையில், உங்களை நீங்களே நிரூபிக்க ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு."


மதுவும் வினுவும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டனர்.


  "ராகுல் உங்ககிட்ட சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். ஒரு பெரிய கம்பெனியோட கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் பண்ற வாய்ப்பு, இப்போ நமக்கு கிடைச்சிருக்கு.


    அது இனி அடுத்தடுத்து கண்டின்யூ ஆகிறது, உங்க ரெண்டு பேரு கையில் தான் இருக்கு."

Tuesday, May 27, 2025

மன்னவரே 16


 

           அத்தியாயம் 16


  மூர்த்தி என்னதான் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டாலும், சுற்றி இருந்த இருள் அவன் இதயத்தின் சத்தத்தை, அவனுக்கே கேட்கும் அளவுக்கு பலமாக அடித்துக் கொண்டிருந்தது.


      "படுபாவிப் பயலுக, போன இடத்துல அங்கேயே செட்டில் ஆயிட்டானுங்களா?


      இப்படி என்ன இருட்டுல தனியா காவல் காக்க வச்சுட்டானுங்களே."


      சரசரவென்று தனக்கு பின்னே ஏதோ சத்தம் கேட்க பயத்தில் அவ்விடத்தை விட்டு ஓட தொடங்கினான்.


  மூர்த்தி தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று விட்டு, நேராக தம் நண்பர்களை பார்க்க வேட்டியுடன் வந்திருந்தான்.


  வெற்றி ஏதோ அவசரம் என்று தொலைபேசியில் அழைக்க, இவனும் வேந்தனுடன் கிளம்பி விட்டான்.


    கல் தடுக்கி விழுந்து எழுந்த போது, தன் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான்.


அடித்த காற்றில் வேட்டி பறந்து சென்று ஒரு மரத்தின் அடிக்கிளையில் சிக்கிக் கொண்டது.


          கிளையில் சிக்கிக்கொண்ட தனது வேட்டியை எடுக்க முயன்று கொண்டிருக்கும்போது, சிறிது சிறிதாக வெளிச்சம் பரவுவதை உணர்ந்தான்.


               சற்று முன் காட்டிலிருந்து வெளியேறியவர்களில் இருவர், தீப்பந்தத்துடனும் கை நிறைய பொருட்களுடனும், காட்டினை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


         உடனே சட்டென்று மரத்துக்கு பின்னால் சென்று, மூர்த்தி ஒளிந்து கொண்டான்.


தீப்பந்தம் பிடித்துக் கொண்டு வந்தவன், மூர்த்தியின் வேட்டியை கண்டு, ஏதோ ஒரு வெள்ளையான உருவம் காற்றில் மிதந்து வருவதாக எண்ணி, பயந்து போய் அருகில் வருபவனிடம் காண்பித்தான்.


      "அய்யோ அண்ணே, அங்க பாருங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம், காத்துல மிதந்துட்டு இருக்கு."


    இன்னொருவனும் அதனைக் கண்டு மிரண்டு தான் போனான்.


    மூர்த்திக்கு சட்டென்று ஒரு யோசனை மனதில் தோன்றியது. அதன்படி சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.


        ஏற்கனவே அந்த வெள்ளை உருவத்தை கண்டு பயந்து போய் நின்றிருந்த இருவரும், இந்த சிரிப்பு சத்தத்தில் கையில் இருந்த பொருட்களை கீழே போட்டு விட்டு சுற்றிமுற்றி தேடினர்.


  "யா...யார்? யாரது?"


    மூர்த்தி தன் குரலை மாற்றி கொண்டு சத்தமாக பேச தொடங்கினான்.


      "அண்ணே.... என்ன தெரியலையா? நான் தான் மாரிரிரி."


        "மாரியா? நீ... நீ தான் செத்துப் போயிட்டியே?"


        "ஆமா நானே தான். என்ன மட்டும் அப்படியே தனியா விட்டுட்டுப் போய்டீங்களே, எப்பவும் உங்களோட தானே நான் இருப்பேன், அதான் இப்போ உங்கள தேடி வந்துட்டேன். 


    நான் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? எனக்கு ரொம்ப தாகமா இருக்கு கொஞ்சம் குடிக்க ரத்தம் கிடைக்குமா?"


        இவன் இப்படி கூறியதும் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு, வந்த பாதையிலேயே திரும்பி ஓட ஆரம்பித்தனர். 


    "அப்பாடா இனி கொஞ்ச நேரத்துக்கு இவனுங்க தொல்லை இல்லை. இவனுங்க போய் ஆளுங்களை கூட்டிகிட்டு திரும்ப வர்றதுக்குள்ள, எப்படியாச்சும் வேந்தனும் தீபனும் காட்டுக்குள் இருந்து வெளியே வந்திடனும்."


        காட்டினுள் தங்களுக்கு முன்னால் மலை போன்ற உருவம் கொண்டு, பூமி அதிர வேகமாக, நெருப்பினை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காட்டெருமைகளை தான், வேந்தனும் தீபனும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

      கூடாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மூவர் இவற்றைக் கண்டு, மற்றவர்களை நோக்கி கத்திக் கொண்டே ஓடினர்.


    "தீபா இதுதான் நமக்கு கிடைச்ச சரியான சந்தர்ப்பம், அந்த சுரங்கப்பாதை நோக்கி ஓடு சீக்கிரம்."


          வேந்தனுக்கு மனதின் உள்ளுணர்வில் ஏதோ உந்துதல்  போன்று தோன்ற, சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்.


          அங்கு காட்டு எருமைகளை பின்னிருந்து விரட்டிக் கொண்டே, ஒரு மான், நீலக் கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தது.


      அதனை கண்டவுடன் பிரம்மை பிடித்தது போல வேந்தன் அசையாமல் நின்று விட்டான். அவன் மனதில் பல எண்ணங்களும் காட்சிகளும் மாறி மாறி வந்து போயின.


      அதன் கண்களில் இருந்தது ஏக்கமா! அல்லது மனதின் வலியா! என்று பிரித்தறிய வேந்தனால் முடியவில்லை.


      ஆனால், அதன் கண்கள் எனும் நீல நிற ஆழ்கடலுக்குள், மூழ்கிடவே வேந்தனின் மனம் விரும்பியது.


    அசையாது நிற்கும் தன் நண்பனை உலுக்கி, நிகழ்காலத்துக்கு கொண்டு வந்த தீபன், அவனை இழுத்துக்கொண்டு சுரங்க பாதையை நோக்கி ஓடினான்.


    "டேய் விடுடா, அந்த மான் அந்த மான்கிட்ட நான் போய் ஆகணும்."


      "லூசாடா நீ? அங்க எங்கடா மான் இருக்கு? காட்டெருமைங்க தான் கட்டுக்கடங்காம ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்குள்ள போய் சாக சொல்றியா?"


      "அங்க... அங்க உனக்கு ஏதும் தெரியலையா தீபா? அந்த மான் அந்த மான் உனக்கு தெரியலையா? அங்க அந்த மரத்துகிட்ட?"


        தீபன் நின்று திரும்பி பார்த்து,

          "அங்க ஒண்ணுமே இல்லயேடா. நாம இங்க இருந்து முதல்ல தப்பிச்சாகணும்."


        "இல்லடா நான் போய் ஆகணும் போயே ஆகணும்."


        தன் கையை உதறிவிட்டு செல்ல முயற்சித்தவனை தம் பலம் கொண்ட மட்டும், இழுத்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தீபன்.


          இவர்கள் சென்று அதிக நேரம் ஆனதால் வெற்றியும் அந்த சுரங்கப்பாதையின் எல்லையில் இருந்து, காட்டுக்குள் இருக்கும் மற்றொரு எல்லைக்கு இவர்களை தேடி வந்து விட்டான். 


          தூரத்திலிருந்தே தீபன் வேந்தனை இழுத்துக் கொண்டு வருவதை கண்டு, ஏதோ விபரீதம் என்று அறிந்து அங்கு விரைந்தான்.


        "என்னடா ஆச்சு? நீ ஏன் இவனை பிடிச்சு இழுத்துட்டு வர்றே?"


            "அவன் ஏதேதோ உளறிட்டு இருக்கான். முதல்ல இவனை புடி, நாம அவனுங்க வர்றதுக்குள்ள அவங்க கண்ணுல படாம இந்த காட்டுக்குள்ள இருந்து வெளியேறி ஆகணும்."


        இருவரும் சேர்ந்து வேந்தனை சுரங்கப்பாதை வழியே காட்டுக்கு வெளியில் கூட்டி வந்தனர்.


              வெளியே வந்த பிறகு தான் வேந்தனுக்கு, மனது ஒரு நிலை பட்டது.


          தான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டோம் என்று அவனுக்கே புரியவில்லை.


        மூர்த்தி அச்சுரங்கப்பாதையின் வாயிலில் நின்று கொண்டு இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனது நிலையை கண்டதும் வெற்றியும் தீபனும் சிரிக்க தொடங்கி விட்டனர்.


        "என்ன கண்றாவி டா இது? உனக்கு வேட்டி கட்டினால் இந்த பட்டாபட்டி போடுற பழக்கம் எல்லாம் இல்லையா? இந்த கொடுமையெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையில எழுதி இருக்குது பாரு." 


    "டேய் நீங்க அப்புறமா புலம்புங்க, ஏற்கனவே காட்டுக்குள்ள வர இருந்த ரெண்டு பேரை, இப்பதான் விரட்டி விட்டிருக்கேன், முதல்ல அந்த மரத்தில் இருக்க என் வேட்டிய எடுத்துட்டு சீக்கிரம் இந்த இடத்தை காலி பண்ணலாம் வாங்க டா."


      அதற்குமேல் நண்பர்கள் நேரத்தை வீணடிக்கவில்லை, மறக்காமல் மூர்த்தியின் வேட்டியையும் எடுத்துக்கொண்டு தம் வாகனத்தை நோக்கி சென்றனர்.


      வேந்தனின் மௌனத்தை நண்பர்கள் யாரும் கலைக்கவில்லை. அவனின் மனக்குழப்பம்  முகத்தில் தெரிந்ததால், அவனே மீண்டு வரட்டும் என்று விட்டுவிட்டனர். 


  மூர்த்தி இது பற்றி கேட்க, பிறகு சொல்வதாக செய்கையால் கூறிவிட்டனர்.


    நண்பர்கள் நால்வரும் நேராக வெற்றியின் பண்ணை வீட்டுக்கு தான் சென்றனர்.


      தீபன் தன் கையில் உள்ள அந்த இரு காகிதங்களை பிரித்துப் பார்க்க, அதில் கொற்றவை தேவியின் சிலை செம்பளுப்பு நிறமாக மிளிர்ந்ததை கண்டான்.


"ஹேய் இது கொற்றவை தேவி சிலை தானே, ஆனா இது ஏன் வேற கலர்ல இருக்கு?"


  "நானும் அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன். இந்த மாதிரி சிலையை அங்க பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லையே. நம்ம நாச்சியம்மன் கோவிலில் தான் கொற்றவை தேவி சிலையோட போட்டோவும் கோவிலோட போட்டோவும் இருக்கே."


      வேந்தனின் முகம் இப்போது தெளிவாக இருந்ததை கவனித்த தீபன், அந்த இரு காகிதங்களையும் அவனிடம் நீட்டினான்.


      "நீ இதை பத்தி ஏதாச்சும் கேள்விப்பட்டிருக்கியா வேந்தா."


    அந்த புகைப்படத்தை கண்டவுடன் வேந்தனுக்கு இறந்த காலமானது ஒரு சுழல் போல், அவனை உள்ளே இழுப்பது போன்று இருந்தது.


    பல காட்சிகள் மனதினில் தோன்றி மூளைக்குச் செய்தி அனுப்ப, நிகழ் காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் இடையே உண்டான அழுத்தத்தை தாங்க முடியாமல், மயக்கமடைந்து கீழே விழுந்தான் வேந்தன்.

மன்னவரே 15

 


             அத்தியாயம் 15


      "காட்டுக்குள்ள யாரு கண்ணுலையும் படாம எப்படியாவது நுழைஞ்சாகனும் ."


    "எது? டேய் வேந்தா, இவன் என்ன சொல்றான்னு பாருடா?"


      "தீபன் சொல்றது சரிதான், அவங்க பேசிட்டு இருந்தத கேட்ட தானே, இப்ப விட்டுட்டா நம்மால, இந்த வழியா போக முடியாது. இனியும் இந்த ஊர்ல, ஒரு உயிர் கூட அவனுங்களாள அநியாயமா போகக்கூடாது.


    நானும் தீபனும் அந்த சுரங்க பாதை வழியா உள்ள போறோம்.


      வெற்றி நீ அந்த பாதைக்கு வெளியே நில்லு, உள்ள ஏதாச்சும் பிரச்சனைனா உனக்கு சிக்னல் கொடுக்கிறோம், மூர்த்தி நீ அவனுங்க திரும்ப வந்தா உள்ள வராமல் இருக்க, எதையாச்சும் பண்ணி அவனுங்களை திசை திருப்பி விடு." 


    "எது, ஏன்டா என்னை மட்டும் அந்த கொலைகார பயலுகளோட கோர்த்து விடுறே? இந்த வெட்டிப் பயல அனுப்ப வேண்டியது தானே?"


      "உன் அளவுக்கு அவனால சமாளிக்க முடியாது மாம்சு. நீதான் பேசியே சமாளிப்பதுல பட்டம் வாங்கினவன் ஆச்சே, பேசுறதுக்கு டைம் இல்ல, அவனுங்க திரும்ப வர்றதுக்குள்ள நாங்க நுழைஞ்சாகணும். சரி சரி நாங்க கிளம்புறோம்."


    "டேய்  டேய்ய்ய் போயிட்டான், எனக்குன்னே தனியா உக்காந்து ஸ்கெட்ச் போடுவானுங்க போல.


      சும்மாவா சொல்றாங்க, பேய்க்கு வாக்கப்பட்டா, அர்த்த ராத்திரியில அலைஞ்சு தானே ஆகணும். இவனுங்க கூட சேர்ந்ததுக்கு எம்புத்திய..."


        "மச்சான் ஏதாவது ஹெல்ப் வேணுமா? என் செருப்பு வேணா தரவா?"


    "மரியாதையா ஓடிரு, அவனுங்க சொன்னது போல அந்தக் குழிக்கிட்ட போய் நில்லு போ."

     

      "நண்பன் ஆச்சேன்னு உதவி செய்ய நினைச்சேன், வேண்டாட்டி போ. என்ஜாய் தி மொமெண்ட் மச்சான். டாடா பைய் பைய்."


      "கொழுப்பு தாண்டா உனக்கு. அய்யய்யோ, தனியா விட்டுட்டு போயிட்டானுங்களே, சமாளிப்போம் என்ன பண்ணிட போறானுங்க."


            தீபனும் வேந்தனும் சுற்றும் முற்றும் நோட்டமிட்டுக்கொண்டே அந்தப் பாதையை நெருங்கினர்.


        சமதளமாக இருந்த பாதை, ஒரு சருக்கு பாதை போன்று உள்ளே இறங்கியது.


      அதன் வழியாக சென்றபோது, ஒருவர்  மட்டுமே குனிந்து செல்லுமாறு பாதை உருவாக்கப்பட்டு இருந்தது.


    அவர்கள் இருவரும் செல்பேசியிலுள்ள டார்ச்சின் உதவியுடன், அடிமேல் அடிவைத்து எச்சரிக்கையாக அப்பாதை வழியே முன்னேறி சென்றனர்.

     

      சிறிது தூரம் சென்றதும், அப்பாதையின் முடிவில் மண்ணால் ஆன படிக்கட்டு போன்ற திட்டுக்களை கொண்டிருந்தது.


      அதில் ஏறி மேலே சென்றால், காட்டின் உட்பகுதியை காண முடிந்தது.


    அங்கு நெடுந்துயர்ந்த மரங்கள் வானை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருக்க, அவ்விடம் முழுவதும் மை இருளில் மூழ்கியிருந்தது.


      பாதையின் முடிவில் இருந்து சற்று தூரம் தள்ளி, பேச்சு குரல்களும் சிறு வெளிச்சமும் தென்பட்டது.


  காட்டினை நெருங்கும் போதே வேந்தனுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு மனதை ஆட்கொண்டது.


    அது எதனால் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.


  மூச்சினை இழுத்து விட்டு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தீபனுடன் சென்று கொண்டிருந்தான்.


  சிறிது நேரத்திலேயே கண்களுக்கு இருட்டு பழகிவிட்டதால் அந்த வெளிச்சப் புள்ளியை நோக்கி இருவரும் நகர்ந்தனர். 


  "தீபா நாம முதல்ல அந்த குறிப்பையும், அவன் சொன்ன அந்த சிலையோட படத்தையும் கைப்பற்றி ஆகணும்.


  என்ன நடந்தாலும், நாம அது இல்லாம இந்த காட்டை விட்டு வெளியேற கூடாது."


   "ம்ம்ம், நீ சொல்றதும் சரிதான்."


  அவர்கள் கண்ட அந்த வெளிச்சமானது கொற்றவை தேவி கோவிலுக்கு சற்று தள்ளி உள்ள கூடாரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.


    இருவரும் ஒரு மரத்திற்கு பின் நின்று கொண்டு, அங்குள்ளவர்களை கண்காணிக்க தொடங்கினர்.


      எரிந்து கொண்டிருந்த நெருப்பினை சுற்றி, ஏழெட்டு பேர் அமர்ந்திருந்தனர்.


  கூடாரத்திலிருந்து வந்த ஒருவன், காட்டில் கிடைக்கும் பழங்களை கொண்டு வந்து அனைவருக்கும் கொடுக்க, அதை உண்டு கொண்டே எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.


      "இந்த மாரி இருந்திருந்தா  ஊருக்குள்ள இருந்து, நமக்காக நேரா நேரத்துக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்திருப்பான்.


      அவன் இல்லாதனால, இந்த காட்டுக்குள்ள கிடைக்கிறதை வெச்சு தான், நம்ம பசியை போக்கிக்க வேண்டியிருக்கு."


      "இந்த ஊருக்குள்ள எவனாவது, மாரிய போல உதவிக்கு கிடைக்கிறானுங்களானு பாருங்கடா."


      "ஓய் என்னடா மாமியார் வீட்டுக்கு வந்த மருமகன் மாதிரி பேசிகிட்டு இருக்கே.


      நாம இங்கே என்ன டூருக்கா வந்திருக்கோம்? கூடிய சீக்கிரம் இந்த வேலையை முடிச்சு கொடுத்துட்டு, எப்படியாவது இங்கிருந்து கிளம்பியாகனும். இல்லைனா மாரியோட கதி தான் நம்மளுக்கும்."


      "அட ஏன்டா அதை ஞாபகப்படுத்துற, ஒழுங்கா சிலையை தேடிட்டு இருந்த நம்மள அந்த குருஜி, குருந்த மரத்தை அழிச்சா தான் சிலை இருக்கிற இடம் தெரியும்னு, அங்கே அனுப்பினாரு. நடந்ததை பார்த்த இல்ல? 


    இந்த சிலை நமக்கு கிடைச்சிருந்தா இப்படி அங்க நாம போய், மரண பயத்தை கண்ணுல பாத்துட்டு வந்திருப்போமா?"


      "என்னடா நீயும் பாஸ் மாதிரியே புரியாம பேசிட்டு இருக்க."


    "நாம என்ன முயற்சி செய்யாமையா இருக்கோம், இந்தக் காடு எந்த பக்கம் போனாலும் ஒரே மாதிரி இருக்கு.


      இதுக்கு இடையில, இந்த காட்டு மிருகங்கள் வேற, அடிக்கடி வந்து பயமுறுத்திக்கிட்டு கெடக்கு. மாரிக்கு  நடந்ததை நேர்ல பார்த்ததுல இருந்து தூக்கமே இல்ல. இப்போ உருப்படியா ஒரு வாய் சோத்துக்கும் வழியில்ல."


  "அட ஏண்டா புலம்பிக்கிட்டே இருக்க, அது தான் நம்ம பாஸ் சாப்பாடு கொடுத்து விடறேன்னு சொன்னார் இல்ல."

   

    நண்பர்கள் தமக்குள் கண்காட்டி விட்டு மரத்திற்கு பின்னே பதுங்கிப் பதுங்கி, ஒருவர் பின் ஒருவராக கூடாரத்தை நோக்கி சென்றனர்.


      கூடாரத்தினுள்ளே மது பாட்டில்கள் துணிகள் மற்றும் உணவுப் பொருட்கள் என்று குப்பைகளாக அங்கங்கே சிதறிக் கிடக்க, அவைகளுக்கு நடுவே இருந்த பெட்டியை நோக்கி சென்றனர்.


    திறந்திருந்த அந்தப் பெட்டியில் இருந்து, இரண்டு சுருள் காகிதங்களை எடுத்துக்கொண்டு திரும்ப முனையும் போது, கூடாரத்தின் வாயிலின் அருகே பேச்சு குரல் கேட்டது.

  

  சட்டென்று தீபனை இழுத்துக் கொண்டு குப்பையோடு குப்பையாக தரையில் படுத்துக் கொண்டான் வேந்தன்.


    எதுவோ பேச முனைந்த தீபனது  வாயை, தம் கைகளால் மூடிக்கொண்டே இருண்ட பகுதியை நோக்கி சென்றான். 


    ஒருவன் உள்ளே வந்து, மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான், இவர்கள் தவழ்ந்து கொண்டே வாயிலை நோக்கி சென்றனர்.


    "இந்தக் கண்றாவிக் குப்பைகளுக்குள்ள என்னைய ஏன்டா இழுத்துவிட்ட, நாத்தம் தாங்க முடியல. என் மூக்கு வேற கீழ எதுலயோ இடிச்சுகிச்சு"


    "ம்ம்ம், உசுரு முக்கியமா மூக்கு முக்கியமா அப்போ மூடிகிட்டு வா மூதேவி பின்னாடி."


    "இதெல்லாம் போலீஸ் ட்ரைனிங்ல செஞ்சது, இத்தனை வருஷம் கழிச்சு, இப்பதான்டா யூஸ் ஆகுது."


    பேசிக்கொண்டே இவர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வந்து விட்டனர்.  


  எழுந்து நிற்க முயலும் போது மூவர் கூடாரத்தை நோக்கி நடந்து வருவதை கண்டனர்.

     

    இங்கு மறைந்து கொள்வதற்கும் இடமில்லை. எப்படியும் அவர்கள்  கண்ணில் சிக்கிக் கொள்வோம். எதைக் செய்து தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே தடதடவென்று பூமி அதிர ஏதோ சத்தம் கேட்டது.

Sunday, May 25, 2025

மன்னவரே 14

 


              அத்தியாயம் 14


  முள்ளு காட்டிற்கு சற்று தள்ளி இருந்த மரத்தின் மறைவான இடத்தில்,   கீழே அமர்ந்து கொண்டு வேந்தன் தீபன் வெற்றி மற்றும் மூர்த்தி ஆகிய நால்வரும் காட்டை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.


    "வெற்றி நீ சொல்றது நிஜமா? கண்டிப்பா அவங்களை பார்த்தயா?"


      "நிஜமாதான் சொல்றேன்  வேந்தா,இன்னைக்கு காலைல மாறன் வாட்ட சாட்டமான மூணு ஆசாமிங்களை  கூட்டிட்டு கோவிலுக்கு வந்தான். அவங்க மூணு பேரையும் பாக்குறதுக்கு ஏனோ சந்தேகமாவே இருந்தது.


    கொற்றவைக் கோயிலுக்கு போற பாதையை சரி செய்வதற்காக கூட்டிட்டு வந்ததா மாறன் சொன்னான்.


    ஊருக்கு வெளியே காட்டை ஒட்டி இருக்கிற ஒரு வீட்ல, ஊர் சார்பாக இவங்களை தங்க வெச்சு, நாளைக்கு காலைல இருந்து வேலையை ஆரம்பிக்க சொன்னாங்க ஊர் பெரியவங்க.


    அவங்களை பார்க்கும்போது எனக்கு டவுட்டா இருந்துச்சு. அதனால அங்கே மறைவா இருந்து கண்காணிச்சிட்டு இருந்தேன்.


    சரியா நைட்டு ஒரு ஏழு மணி இருக்கும், அவனுங்க மூணு பேரும் முகத்த மூடிக்கிட்டு இந்த காட்டுக்கு பின்னாடி போனாங்க.


    நானும் பின்னாடியே  அவங்களுக்கு சந்தேகம் வராது போல ஒளிஞ்சு ஒளிஞ்சு போனேன்.


      ஆனா எப்படி சட்டுனு அவங்க மூணு பேரும் மறைஞ்சு போனானுங்கன்னு தெரியல, அங்க இருந்து வெளியே வந்த மாதிரியும் எனக்கு தெரியல, அதனால தான் உனக்கு உடனே போன் பண்ணி கூப்பிட்டேன்."


      வெற்றி வேந்தனுக்கு போன் செய்யும்போது தீபமும் மூர்த்தியும் உடன் இருந்தனர். அதனால் அவர்களும் அவனுடன் புறப்பட்டு வந்தனர்.


      "ஏன்டா உங்க இன்வஸ்டிகேஸன பகல்ல வச்சுக்க மாட்டிங்களா? ஒருத்தன் மொகரையும் தெரியல, குத்து மதிப்பா தான் ஒரு சைடு பார்த்து பேசிட்டு இருக்கேன். இந்த இருட்டுல காலுக்கு அடியில பாம்பு போனா கூட தெரியாதுடா."


   "அய்யய்யே இந்த பெருச எதுக்குடா வேந்தா கூட்டிட்டு வந்தே? வயசான காலத்துல அமைதியா இல்லாம எப்ப பாரு ஒரே புலம்பல்."


        "எதே, அடேய் வெட்டிப் பயலே, இத நீ மட்டும் எம் பொண்டாட்டி முன்னாடி சொல்லி இருந்த."


          "சொல்லியிருந்தா தங்கச்சியும் சேர்ந்து ஆமாண்ணேன்னு சொல்லி இருக்கோம்."


  வேந்தன் ஏதோ நினைவு வந்தவனாக தனது மொபைலை எடுத்து, அதில் அன்று தீபனை கண்காணித்த பைக் ஆசாமியின் புகைப்படத்தை வெற்றியிடம் காட்டினான்.


    "அந்த மூணு பேருல இந்த ஆள் இருந்தானான்னு பாரு?"


"ஆமாம் டா, அதுல இவனும் ஒருத்தந்தான். கூட இருந்த மத்த ரெண்டு பேரும் இவன் சொன்னதை தான் கேட்டு நடந்துக்கிட்டாங்க. ஆமாம் வேந்தா இவன் போட்டோ உன்கிட்ட எப்படி வந்தது?"


தீபன் கண்காணிக்கப்பட்ட அந்த நிகழ்வை வெற்றியிடம் கூறத் தொடங்கினான் வேந்தன்.


    வேந்தன் அன்று அந்த பைக் ஆசாமியையும் அவன் பைக் நம்பரையும் போட்டோ எடுத்து வைத்திருந்தான். அதை வைத்து அவனின் பின்புலத்தை அறிந்து கொண்டான்.

   

        அமைச்சரின் கையாலாக இருந்து கொண்டு, எதற்காக ஒரு போலீஸ் அதிகாரியை பின் தொடர்கிறான் என்று குழப்பத்தில் இருந்தான். 


        அன்று மாரியப்பனோடு இருந்தவன் இவன் தானோ என்ற சந்தேகத்தை முனியண்ணணிடம் காட்டி, இவன்தான் என்பதையும் தெளிவு படுத்திக் கொண்டான். 


      ஆனால் இதெல்லாம் எதற்காக, அப்படி இந்த காட்டிற்குள் என்னதான் ரகசியம் பொதிந்து இருக்கின்றது என்பது மட்டும் விளங்கவில்லை.


      இப்போது வந்த இம்மூவரும் கூட அமைச்சரின் ஆட்களோ? அவர்கள் திருவிழாவை நிறுத்த வந்தவர்களோ? என்று வினாவும் மனதில் எழ தவறவில்லை. இதே எண்ணங்கள் தான் தீபனின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.


  திடீரென்று பூமிக்கடியில் இருந்து சிறிது சிறிதாக வெளிச்சம் பரவுவது போல தோன்றியது 


  "அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா? சூரியன் எப்போ இந்த சைடுல இருந்து  உதிக்க ஆரம்பிச்சது?" 


    "அடேய் கூமுட்ட மூர்த்தி, நல்லா பாருடா அது தீபந்த வெளிச்சம்." 


    "அதான் வெளிச்சம் கம்மியா இருக்குது. என்னடா இது நான் நம்ம ஊர்ல தான் இருக்கேனா? பதுங்க குழி  எல்லாம் வச்சிருக்கானுங்க?"


  "எனக்கு தெரிஞ்சு இது சுரங்கப்பாதையா தான் இருக்கணும். இது நேரா காட்டுக்குள்ள போகும்னு நினைக்கிறேன்."


"இப்பவே இவனுங்கள கையும் களவுமா புடிச்சு, ஊர் முன்னாடி நிறுத்தணும் வேந்தா."


  "இல்ல நாம அவசரப்பட கூடாது. நமக்கு முதல்ல அவங்களோட திட்டம் என்னன்னு முழுசா தெரியணும்.


  அதுவரைக்கும் நாம பொறுமையா தான் இருந்தாகணும்."


  அந்த பைக் ஆசாமிக்கு முன் ஒருவன் தீப்பந்தம் பிடிக்க அவனுக்கு பின்னே வரும் நால்வரையும் திட்டிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.


  "இன்னும் எவ்வளவு நாள் தாண்டா அந்த சிலையை தேடுவீங்க? தலைவர் அங்க கத்திக்கிட்டு இருக்காரு பார்ட்டிக்கு வேற சரக்கு அனுப்பியாகணும்.


    உங்க எல்லார்கிட்டயும் அந்த சிலையோட போட்டோ இருக்கில்ல. அந்தக் கொற்றவை கோயில சுத்தி தான் ஏதோ ஒரு இடத்துல அந்த சிலை இருக்கறதா குறிப்பில் இருக்கு.


  இந்த ஊர்காரனுங்க கோவிலுக்கு வர்றதுக்குள்ள, நாம அதை எப்படியாவது கண்டுபிடிச்சே ஆகணும். அவனுங்க  வரப்போக இருந்தானுங்கன்னா, நம்மளால இதுக்கப்புறம் அந்த சிலையை கண்டுபிடிக்கவே முடியாம போயிடும்."


      "அண்ணே நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம். எங்க சுத்தினாலும் ஒரே இடத்துலயே வந்து நிக்கிற மாதிரி இருக்கு. இதுக்கும் நாங்க எல்லோரும் பிரிஞ்சு வேற வேற திசையில போய்  தான் தேடுறோம்.


      அதோட அந்த மாரியப்பனுக்கு நடந்ததை நேர்ல பார்த்ததிலிருந்து, பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்க..."


      "அறிவு கெட்டவனுங்களா உங்களை யாரு அந்த மோகினி பள்ளத்து வழியா போக சொன்னது. குருஜி தான் சொல்லி இருக்காரு இல்ல. அம்மாவாசை நைட்டு அந்த பள்ளத்தை நெருங்க கூடாதுன்னு, அப்புறம் எதுக்குடா போனீங்க."


  "மாரிதான் இதுதான் பக்கமுன்னு கூட்டிட்டு போனான். அன்னைக்கு நடந்தது இன்னும் எங்க கண்ணுக்குள்ளேயே இருக்குங்கண்ணே.


     நாங்க பள்ளத்த நெருங்கும்போதே கருப்பா ஒரு உருவம் பள்ளத்துல இருந்து வெளியே வந்துச்சு. அது நாக்கு ஒரு அடிக்கு மேல தொங்கிட்டு இருந்ததுண்ணே, நாங்க எல்லாரும் ஓட ஆரம்பிச்சிட்டோம் ஆனா மாரி மட்டும் அது கிட்ட மாட்டிகிட்டான். மாரிக்கு என்ன நடந்ததுன்னு அடுத்த நாள் காலையில தான் எங்களுக்கெல்லாம் தெரியும்."


        "இப்ப தெரிஞ்சிருச்சு இல்ல இனியாவது ஜாக்கிரதையா இருந்து தொலைங்க."


        "அண்ணே பசங்க பயப்படுறாங்கண்ணே."


  பொலேர் என்று ஒரு அரை விழுந்தது பேசியவனுக்கு,


        "கட்டு கட்டா பணம் வாங்கும் போது மட்டும் இனிச்சுதோ, வாய மூடிக்கிட்டு சொல்ற வேலைய பாக்கணும். அவனுங்க உசுருக்கும் சேர்த்து தான் பணத்தை வாங்குறானுங்க.


  புரிஞ்சுதா? என்னடா மண்டைய மண்டைய  ஆட்டறே?"


    "புரிஞ்சதுண்ணே."


    "இப்ப தற்காலிகமா இந்த பாதையை எதையாச்சும் போட்டு மறைச்சு விடுங்க. நாளைக்கு கொற்றவை கோயிலுக்கு பாதை அமைக்கிற வேலை ஆரம்பிக்கிறதால ஊர்காரங்க கண்டிப்பா காட்ட சுத்தி வருவானுங்க. எவன் கண்ணுலையும் இது பட்டுற கூடாது.


      கூடிய சீக்கிரம் ஊர்ல எவனையாச்சும் புடிச்சு கழுத்தறுத்து அந்த பக்கம் போட்டு விடுவோம், அதுக்கப்புறம் எவனும் அங்கிட்டு வரமாட்டான்."


    கேட்டுக் கொண்டிருந்த நம்மவர்கள் நால்வருக்கும் இங்கு நடந்த கொலைகளுக்கான காரணம் புரிய தொடங்கியது.

Saturday, May 24, 2025

மன்னவரே 13


 

             அத்தியாயம் 13

 

          மது தன் கண் மட்டும் வெளியே தெரியுமாறு முழுவதுமாக துப்பட்டாவால் முக்காடிட்டிருந்தால்.


  கீழே உணவருந்திக் கொண்டிருந்த கனியமுதன், இவளைப் பார்த்துக் கொண்டே தன் அன்னையிடம்  கேட்டான். 


    "ஏம்மா எனக்கு தெரியாம இவளை பக்கத்து வீட்டு சலீம் மாமாக்கு தத்துக்கான கொடுத்துட்டியா?"


  "என்னடா உளர்ற?"


  "உளர்றனா? அங்க பாரு,  உன் பொண்ணு மதினா பேகமாவே மாறி நிற்கறா."

    "வெயிலுக்காக புள்ள இப்படி போட்டு இருக்காடா."

   

  "இவ்வளவு நாளா இல்லாம இப்ப என்ன திடீர்னு? நம்ப முடியலையே."


  “அய்யய்யோ இவன் இன்னும் கிளம்பலையா, வினு அவன் ஏதாவது உன்கிட்ட வாயை புடுங்கறதுக்கு பேச்சு கொடுப்பான், எதையும் உளறி தொலைச்சுராத. என்னடி மண்டைய மண்டைய ஆட்டுற ஏதாவது சொதப்புன கொன்னுடுவேன் உன்ன.”

 

    "வினும்மா என்னடா இது? ஆபீஸ்ல ஏதாவது ஹாலோவன் பங்க்ஷனா? இல்ல, பேன்சி டிரஸ் காம்பெடிஷன்னா? இப்படி பேய் வேஷம் போட்டு சுத்துறீங்க ரெண்டு பேரும்?

 

    "அப்படியெல்லாம் எதுவும் இல்லண்ணா இது இது வெயிலுக்காக. இப்பல்லாம் ஸ்கின் ரொம்ப எரியுதுன்ணே, அதான் ரெண்டு நாளா இப்படி துப்பட்டா போட்டிருக்கோம்."


  "அப்படியாம்மா ரெண்டு நாளா சூரிய பகவான் கருமேகத்துக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்காரு, இந்த குளிர்ல உங்களுக்கு ஸ்கின் எரியறது போலவா வெயில் அடிக்குது?"


      அவள் திரு திருவென முழிக்க மது தான் மறுமொழி கூறினால்,

 

  "சில எருமத் தோலுக்கெல்லாம்  அது உரைக்காதுன்னு சொல்லுடீ வினு."


    "ஏன், உன்னோட உயிரை எடுக்கிற தோழி என்கிட்ட நேரடியா சொல்ல மாட்டாங்களாமா?"

     

  "சொன்ன வாக்கை காப்பாத்தாதவன் கிட்ட எனக்கு பேச்சு இல்லைன்னு சொல்லுடி, அம்மா நா வரேன்."

   

      நின்றால் எங்கே இன்னும் கேள்வி கேட்டு குடைவானோ என்று, வினுவை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினால் மது.


  "ஏய் மது மது நில்லு, இந்த பொண்ணு என்னடா கூப்பிட கூப்பிட கேட்காம இப்படி போறா.

  

      ஒருவேளை நேத்து பேசிட்டு இருந்தாளே ஏதோ புது வேலையை பத்தி, அதுக்கு நீ அப்பா கிட்ட அவளுக்காக சப்போர்ட் பண்ணலைன்னு கோவிச்சுட்டு போறாளோ?"

   

  "அவ கேக்காம போகல ம்மா, நாம ஏதாச்சும் கொஸ்டின் கேட்டுருவமோன்னுட்டு எஸ்கேப்பாகி  ஓடுறா. ப்ச்சு இருந்தாலும் உன் வீட்டுக்காரர் ரொம்ப ஸ்ட்ரீட் அப்பாவா இருக்காரு ம்மா


      அவ படிச்சு படிப்புக்கு வேற ஏதாவது கம்பெனில வேலைக்கு போனா, எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா? அதோட அவளுக்கும் கௌரவமான ஒரு வேலையா இருக்கும்


    ஆனா அப்பா தான் வேண்டவே வேண்டாம்னு மதுவை இந்த வேலைல  சேர்த்துவிட்டுட்டார்.


    இப்ப அவளாவேதன் திறமையை பயன்படுத்தி ஒரு புது வேலையை, அதுவும் நல்ல கம்பெனியா தேடிப்பிடிச்சு செலக்ட் ஆயிருக்கா. 


    அந்த கம்பெனிக்கு மதுவ வேலைக்கு அனுப்புனா என்னம்மா தப்பு? அவ கேட்கிறதும் நியாயம் தானே."


    "நானும் எவ்வளவோ அப்பா கிட்ட இது விஷயமா பேசிட்டேன் ஒத்துக்கவே மாட்டேங்கறார் டா.


  காரணம் இல்லாம உங்க அப்பா இப்படி சொல்லுவாரா அமுதா."


      "அதுதான் என்னன்னு கேட்கிறேன், ம்ம்ம் உடனே அமைதியாயிடுவீங்களே என்னமோ பண்ணுங்க."


அவன் கிளம்பி சென்றதும் லட்சுமியம்மா தனது நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார்


மது அவர் வயிற்றில் நிறை மாதமாக இருந்தபோது, கனியமுதன் சிறுவன்.


    தனது சொந்த ஊரை காண ஆசை கொண்ட லட்சுமி, தம் கணவரை  வற்புறுத்தி தன் மகனையும் கூட்டிக் கொண்டு, தனது சொந்த ஊருக்கு வாடகை காரில் கிளம்பினார்.

 

      திடீரென்று பாதி வழியில் சொன்ன தேதிக்கு முன்னாதாகவே பிரசவ வலி கண்டது. 


        பாதி வழியில் ஒரு கோயிலின் அருகே அவர்கள் சென்ற காரும்  பழுதாகி நின்றது.


  அந்த கோயிலில் நின்றிருந்த ஒரு வயதான பெண்மணி லட்சுமியை உள்ளே அழைத்து வருமாறு கூறினார்.


    சிவராமனுக்கும் அதுவே சரி என்று பட, தன் மனைவி மற்றும் மகனுடன் கோவிலின் உள்ளே சென்றார்.


    பார்ப்பதற்கு தெய்வ கடாட்சமாக இருந்த அந்த வயதான பெண்மணி தான் லட்சுமிக்கு பிரசவம் பார்த்தார்.


மது பிறக்கும்போது லட்சுமி அரை மயக்க நிலையில் இருந்தார்.


  அப்போது சிவராமன் அந்த வயதான பெண்மணியுடன் ஏதோ பேசி கொண்டு இருந்தார். ஒரு சில வார்த்தைகள் தான் அவரால் கேட்க முடிந்தது.


      "நீ ஏதாவது எனக்கு செய்யணும்னு ஆசைப்பட்டா எனக்கு ஒரு வாக்கு கொடு தம்பி.


           எக்காரணம் கொண்டும் இந்த குழந்தையோட ஜாதகத்தை வெளியே யாருக்கும் காட்டக்கூடாது. அதோட இப்போதைக்கு நீ இருக்க ஊரை விட்டு வெளியே எங்கேயும் போக வேண்டாம், அது இந்த குழந்தையோட உயிருக்கு ஆபத்தா முடியும்."


   அதிர்ச்சியில் உறைந்து நின்ற சிவராமன்

     

    "எதுக்காக இப்படி சொல்றீங்கம்மா."


      "உலகத்தை காக்கும் கடவுளே ஆனாலும் கிரகணத்தின் போது கோயில் கதவை மூடி தான் ஆகணும்.


      சாதாரண மனுசங்க நாம, தீய சக்தியோட கை ஓங்கி இருக்கும் போது நம்மள பாதுகாத்துக்க விலகி இருப்பதுல தப்பில்ல.


        ஆனா ஒரு கட்டத்துக்கு மேல உன் பொண்ணு உன் கைய விட்டு போறத நீயே நினைச்சாலும் தடுக்க முடியாது. அவ பிறந்த லட்சியத்தை முடிக்க அதை நோக்கி போயே தீருவா."


  லட்சுமி தன் கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தபோது அப்பெண்மணி லட்சுமியை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு காற்றிலே மறைந்து போனார்.


    அவர் சொன்ன வார்த்தைகளை கிரகிக்க முடியாமல் தனக்குள் உழன்று கொண்டிருந்த சிவராமன் தன்னிலைக்கு வந்து பார்த்தபோது அவர் அங்கே இல்லை


     வேலப்பன் ஐயாவின் வீடு, பொருட்கள் எல்லாம் அறையெங்கும் சிதறி கிடக்க தன்னை சூழ்ந்து நின்ற உறவுகளிடம் கத்திக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.


    "நீங்க எல்லாரும் சொன்னது என்ன இப்ப செஞ்சிருக்கறது என்ன? என் கல்யாணத்தை பத்தி ஒருத்தருக்கும் இந்த வீட்டில அக்கறை இல்ல."


  "தாத்தா நீங்க என்ன சொன்னீங்க? இந்த திருவிழால நம்ம சீரை காரணமா வச்சு என் கல்யாணத்தை உறுதி செய்கிறதா சொன்னீங்களா இல்லையா?


  இப்போ கொற்றவை கோவிலிலிருந்து சீர் போகுதுன்னு சொல்றாங்க. அப்போ என் கதி? எனக்கு தெரியாது அத்தானோட என் கல்யாணம்  இந்த வருசம் முடிஞ்சே ஆகணும்."


  வீட்டில் உள்ள ஒருவராலும் அவளை சமாதானப்படுத்தவே முடியவில்லை.


  வண்டியிலிருந்து இறங்கிய மாறன், வீட்டினில் இருந்து வரும் குரலைக் கேட்டு தங்கையின் அறை நோக்கி சென்றான்.


    அங்கிருந்தவர்களை வெளியே செல்ல சொல்லி விட்டு, தன் தங்கையின் அருகே அமர்ந்தான்.

  

    "ரஞ்சி என்னைக்கிருந்தாலும் வேந்தன் உனக்கு தான். என்னை நம்பு.


     உன்னை தவிர வேற யாரையும் அவன் கல்யாணம் செய்ய முடியாது. மறந்துட்டியா நம்ம குடும்பத்துக்குள்ள இருக்கற வழக்கத்த.


    வடிவு பாட்டி கையில இருக்க அந்த பெட்டி, கண்டிப்பா உன் கைக்கு தான் வந்து சேரும். அதை விட்டா அவங்க குடும்பத்துக்கும் வேற வழி  இல்ல."


    ஆம் சுந்தரமூர்த்தி தாத்தாவின் குடும்பத்தில் பரம்பரையாக ஒரு பெட்டியை பாதுகாத்து வருகின்றனர். தமது மன்னவரின் வீரவாளும் தேவியின் ஆபரணமும் அதில் உள்ளதாக கூறப்படுகிறது. 


  குலமகள் அவளின் கைகளில் இதை சேர்ப்பிக்க வழி வழியாக பாதுகாத்து வருகின்றனர். இதுவரை ஒருவரும் அதில் உள்ள பொருட்களை கண்டது இல்லை.


    தமது தேவி அவளின் வருகைக்காகவே அவைகள் அந்த பெட்டிக்குள் சிறைப்பட்டுள்ளன. 


  தேவி அவளின் பொற்கரம் பட்டால் சிறை தானாகவே திறந்து விடும்.

  அப்பெட்டியை வேலப்பன் ஐயாவின் குடும்பத்திலிருந்து தமது வீட்டிற்கு மருமகளாக வருபவரிடம்  ஒப்படைக்கின்றனர். 


    திருமணத்திற்கு முந்தைய நிச்சயத்தின்போது அப்பெட்டியானது மணமகள் கையில் கொடுக்கப்படும்.


    அன்றிலிருந்து இப்பெட்டி அவர்களின் பாதுகாப்பிற்குரிய பொக்கிஷமாக மாறுகிறது.


    அவர்களைத் தவிர வேறு யாராலும் அதை நெருங்க இயலாது முயன்றால் அதன் பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் 


    அக்காலத்தில் இதன் மதிப்பை உணர்ந்து கவர்ந்து செல்ல முயன்ற பலர் இம்மண்ணுலகை விட்டு பிரிந்த கதைகளும் பல உண்டு.

Friday, May 23, 2025

மன்னவரே 12


 

           அத்தியாயம் 12


      சுந்தரமூர்த்தி தாத்தாவின் மறுப்பில் மனதில் கோபம் மூண்டாலும், அதை முகத்தினில் காட்டாமல் சிரித்துக் கொண்டே மாறன் மறுமொழி கூறினான்.


   "சரிதாங்கய்யா ஒரு கட்சிக்காரனா இல்லாம மேலூர்காரனா கொற்றவை தேவி கோயிலுக்கு போற ஊர்க்காரங்களுக்கு, உதவி செய்யவாவது எங்களுக்கு அனுமதி கொடுப்பீங்களா?"


    அவன் பேசிய தொனியிலேயே புரிந்தது, அவன் மனதின் கோபம். இதற்கு மேல் மறுப்பு கூற முடியாமல் சுந்தரமூர்த்தி தாத்தா சரி என்று தலையாட்டினார்.


தனது பிரதிபின்பமாக வளர்ந்து நிற்கும் பேரனை பார்த்து வேலப்பன் ஐயா கவலை கொண்டார் .


  அவரும் மாறனை போலவே இளம் வயதில் எந்த வேலைக்கும் செல்லாமல், வீட்டையும் கவனிக்காமல் கட்சி அரசியல் என்று சுற்றி வந்தவர் தான். 


  பூவாத்தா தனது மூன்று மகன்களையும் வயது வந்த பெண்ணான நாத்தனாரையும் வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த போராட, அவர்களுக்கு துணையாக நின்றவர் தான் பூவாத்தாவின் அண்ணன் மருதுசாமி.

  

    வேலப்பன் ஒரு நாளும் தன் மைத்துனரை மதித்து நடந்து கொண்டது இல்லை. 


  அவர்தான் தன் குடும்பம் செயல்பட காரணமாக இருக்கிறார் என்று நினைத்துப் பார்த்ததும் இல்லை.


      வேலப்பனின் செயல்பாடுகளைக் கண்டு சுந்தரமூர்த்தியின் குடும்பம், அவன் தங்கையை பெண் எடுக்க தயங்கியது.


      மருதுசாமி தான் வடிவு தன் தங்கையை போன்றவள் என்றும் அவள்  குணநலன்களை எடுத்துக் கூறியும், சுந்தரமூர்த்தியின் குடும்பத்தில் பேசி இத்திருமணத்தை முடித்து வைத்தார்.


    மருதுசாமியின் மனைவி பிரசவத்திலேயே இறந்துவிட, அவர்  மகளை பூவாத்தா தான் கவனித்துக் கொண்டார்.


    பூவாத்தா தன் அண்ணன் மகளே தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆசை கொண்டார்.


  இதை தன் அண்ணனிடமும் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். 


  ஒரு விபத்தில் மருதுசாமி அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் சேர்க்கப்பட்டார். 


    அவர் உயிர் பிரியும் நிலையில், தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து கலங்கினார்.


    தன் இரண்டாவது மகனுடன் மருத்துவமனைக்கு அண்ணனை காண வந்திருந்த பூவாத்தா, அழுது கொண்டு இருந்த அண்ணன் மகளின் கையை தன் மகனோடு சேர்த்து வைத்து, கண்ணீரோடு வாக்கு கொடுத்தார்.

   

"அண்ணே என்னைக்கு இருந்தாலும் எம்மவனுக்கு இவ தான்ணே பொண்டாட்டி, இவ என் மருமக இல்லண்ணே மகளப்போல பார்த்துப்பேன். இது சாமியா கும்படற அந்த குலதேவி மேல சத்தியம்."


  இதனைக் கேட்ட பிறகே அந்த உயிர், நிம்மதியாக தனது இறுதி யாத்திரையை தொடங்கியது.


    பூவாத்தா தனது அண்ணன் மகளை, தனது பாதுகாப்பிலேயே நன்கு வளர்த்து வந்தார்.


அவளுக்கு திருமண வயது வந்த போது வேலப்பனிடம் இந்த திருமணத்தைப் பற்றி பேச்சு எடுக்க, அவரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.


      அவர் தன் மகன்களுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்ய விரும்பினார். தன் மைத்துனர் செய்த உதவிகளை நினைக்க மறந்தார்.


    தன் மனைவியின் எதிர்ப்பையும் மீறி தன் மகன்களுக்கு வெளி இடத்தில் பெண் தேடினார்.

   

    ஆனால் அவரது இரண்டாவது புதல்வன் அவர் பேச்சையும் மீறி தன் மாமன் மகளை கரம் பிடித்தார்.


  இதனால் ஆத்திரம் கொண்ட வேலப்பன், தம் இரண்டாம் புதல்வனை வீட்டை விட்டே வெளியேற்றி விட்டார். 


    இதனால் மனமுடைந்த அவர் மனைவி பூவாத்தா, அன்று முதல் அவரிடம் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டார்.


  முதலில் நீ பேசாவிட்டால் எனக்கு என்ன என்று இறுமாப்பில் இருந்த வேலப்பன், தனது வயதான காலத்தில்தான் தன் துணையின் அருமையை உணர்ந்தார்.


    தனது தவறுகளும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. தன் மனைவி தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட மாட்டாளா என்று ஏங்கினார்.


  தன் இரண்டாவது மகனையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை


    பூவாத்தா தனது மகன்கள் ஒருநாளும் அவர்களின் தந்தையின் வழியில் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.


  எனவே சற்று கண்டிப்புடனும் நற்பண்புகளுடனுமே அவர்களை வளர்த்து ஆளாக்கினார்.


    சுந்தரமூர்த்தி தன் மகள்களை இக்காரணத்திற்காகவே, அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.  


  ஏனோ மாறனை மட்டும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் வேலப்பன் ஐயாவின் குணத்தை ஒத்து இருப்பதாலோ என்னவோ?


    மதுவின் அறையில் அவள் கட்டிலில் துணி குவியல்களுக்கு நடுவே, கன்னத்தில் கை கொடுத்து மதுவின் அட்டகாசங்களை தாங்க முடியாமல், அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தால் வினு.


    மது ஒவ்வொரு துப்பட்டாவாக எடுத்து தன் தலை மீது முக்காடு போல போடுவதும், பிறகு அது சரியில்லை என்று கட்டிலின் மீது வீசிவிட்டு அடுத்ததை எடுப்பதுமாகவே இருந்தாள். 


  ஒரு கட்டத்தில் அவளின் அக்கப்போர் தாங்காமல் வினு பொங்கி விட்டாள். 


  "அடியே அதுதான் ஹெல்மெட் போட்டு தானே வண்டி ஓட்டுறோம்."


  "அப்புறம் எதுக்கு துப்பட்டாவால முகத்தை கவர் பண்ணிட்டு அதுக்கு மேல ஹெல்மெட் போட சொல்ற?"


      "நீ எல்லாம் என்னத்த தான் படிச்சியோ, வெயிலில் இருந்து நம்ம முகத்தை பாதுகாக்க தான் இந்த துப்பட்டாவ முக்காடு மாதிரி போடச் சொல்றேன்."


    "வெயிலில இருந்து பாதுகாத்துக்கவா இல்ல, வெளி ஆளுங்க யாரும் நம்ம முகத்தை அடையாளம் கண்டுபிடிச்சிடக் கூடாதுங்கறதுக்காகவா?"


  "இவ்வளவு பயம் இருக்கவ எதுக்குடி அவர் கார் மேல கல்லை தூக்கி போட்ட?"


"எது பயமா? யாருக்கு பயம்? இதுக்கு பேரு முன் ஜாக்கிரதைடி செல்லம்."


"ஓஹோ அப்புறம் எதுக்கு நல்லா இருந்த வண்டிய மெக்கானிக் ஷாப்ல விட்டுட்டு, ரெண்டு பேர் வீட்லயும் பைக் ரிப்பேர்னு பொய் சொல்லி அடுத்த நாள் பஸ்ஸில் போனோம்."


    "சரி அத விடு, இப்போ பைக்ல போகும்போது ஹெல்மெட் போதுமே நீ எதுக்கு முகத்தை மறைச்சிகிட்டு முகமூடி கொள்ளைக்காரி மாதிரி வெளியே சுத்துற?"


    "யோசிக்கிறேன்னு சொல்லி இல்லாத மூளைய ரொம்ப கசக்கற போலயே வினு குட்டி. அந்த மல குரங்கு என்ன பேச்சு பேசுறான்? எவ்வளவு தைரியம் இருந்தா எங்க அப்பாவ திட்டுவான்? அதனால தா நா அப்படி செஞ்சேன்."


    இவள் தான் முதலில் பேசவே ஆரம்பித்தது என்பதை வசதியாக மறந்துவிட்டாள்.


  "ஹம்ம்ம், ஆமா மது நம்ம இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுனோமே, அங்கிருந்து கூட ஆர்டர் வந்து இருந்துச்சே, அத பத்தி வீட்ல பேசுனியா?"


  "ப்ச்சு, எங்க அப்பா வேற வேலைக்கு போறதா இருந்தா நீ வீட்டிலேயே இருந்துக்கம்மான்னு சொல்லிட்டாரு.


  என் கூட பிறந்த தடிமாட்ட அண்ணன்னு சொல்லி ஐஸ் எல்லாம் வச்சு எனக்காக அப்பாகிட்ட பேச சொன்னேன்.


      அந்த எருமை மாடு அப்பா கிட்ட இதுக்காக ஒரு வார்த்தை கூட பேசலயே.


    ஆனா அப்பா உன் நல்லதுக்காக தான் பாப்பா சொல்லுவாருன்னு அவர் முன்னாடியே ஒரு பெர்ஃபாமன்ஸ வேற போட்டுட்டான்."


  "இது தெரிஞ்ச விஷயம் தானே, உங்க அப்பா தான் உன்ன கூண்டுக்கிளி மாதிரி தானே வளர்க்கறாரு.

   

    சரி சரி முறைக்காத, இந்த துப்பட்டா அவதாரம் எத்தனை நாளைக்கு? இத போட்டுகிட்டு எத்தனை நாளைக்குடி சுத்துறது?"


    "ஒரு இரண்டு நாள் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ செல்லம். அதுக்குள்ள கண்டிப்பா அவன் நம்மள மறந்திடுவான்."


    மிஸ் மதுரயாழினி உங்க கணிப்பு ரொம்பபப தப்பு. வேந்தன் ஆல்ரெடி உங்களுக்கு  ஸ்கெட்சு போட்டுட்டான். அத என்னன்னு பாக்க நாங்களும் வெயிட் பண்றோம்.

Thursday, May 22, 2025

மன்னவரே 11


 

           அத்தியாயம் 11


           அமைச்சர் பொன்னுரங்கத்திடம் தொலைபேசியில் உரையாடியது மாறன் தான். 


மாறன் அமைச்சரை சந்திக்க தன் சகாக்களுடன் மாலை மரியாதையோடு சென்றிருந்தான்.


    நேரே சென்று பணிவுடன் அமைச்சரின் கால்களில் விழுந்து வணங்கி, மாலை அணிவித்தான்.


   அவனை வரவேற்று உபசரித்த அமைச்சர் சில பல விசாரிப்புகளுக்கு பிறகு, நேரடியாக அவனிடம் விஷயத்திற்கு வந்தார்.


    "என்ன மாறா உன் ஊருல ஏதோ கோயில் திருவிழான்னு கேள்விப்பட்டேன்?" 


    "ஆமா தலைவரே நாச்சியம்மன் கோவில் திருவிழா, சுத்துப்பட்டு கிராமம் எல்லாம் அங்க தான் இருக்கும். நம்ம சைடுல இது பெரிய திருவிழா தான்."


    "சரி, நம்ம கட்சி சார்பா என்ன பண்ணலாம்னு இருக்கீங்க."


மாறன் குழப்பத்தோடு அவரை பார்த்து,


  "புரியலயே தலைவரே?"


    "என்னப்பா நீ, இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் வரப்போகுது, எம்எல்ஏ போஸ்ட் வேணும்னு கேக்குற, ஆனா மக்களை எப்படி கவர் பண்ணனும்னு தெரியலையே உனக்கு"


  "என்ன சொல்ல வர்றீங்க தலைவரே."


    "கோவில் திருவிழாக்கு நம்ம கட்சி சார்பாக பெருசா ஏதாவது உதவி செய்யணும்.


      ஏன்னா உங்க ஊர்ல தான் நம்ம கட்சிக்கு ஓட்டு கம்மியா விழுகுது. அதை சரி செய்யணும்னா இப்படி ஏதாவது செஞ்சுதான் ஆகணும்."


      இப்போதும் மாறன் பதில் ஏதும் கூறாமல் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 


    அப்போது அங்கு தன் பக்த கோடிகளுடன் பிரசன்னமானார் ஸ்ரீ ஸ்ரீ ஜகஷ்டக ஸ்படிகலிங்க சாமியார் என்னும் அமைச்சரின் குருஜி.


குருஜியாகபட்டவர் தூய வெண்ணிற ஆடையில் நெற்றியில் சந்தன பொட்டிட்டு மொட்டை தலையுடன் பூமாலைதனை தோள்களில் தாங்கி,ஒரு கையில் கமண்டலமும் மறுக்கையில் ஜெபமாலையும் வைத்திருந்தார்.


  குருஜியை கண்டதும் அமைச்சர் எழுந்து நின்று கைகட்டி பயபக்தியுடன் அவரை வணங்கி நின்றார்.


மாறனும் இவர் அமைச்சரின் மரியாதைக்குரியவர் என்பதை புரிந்து கொண்டு அவரை வணங்கி நின்றான்.


  தன் கூர்மையான கண்களால் மாறனை அளவிட்டவாரோ, புன்னகை சிந்திய படி ஆசனத்தில் வந்தமர்ந்தார் குருஜி


"குருஜி தம்பி பேரு மாறன். வர்ற தேர்தல்ல எம்எல்ஏ கேண்டிடேட்டா, நம்ம கட்சி சார்பில் நிறுத்தலாமான்னு ஒரு யோசனை. அது பத்தி பேச தான் தம்பிய கூப்பிட்டு இருந்தேன்."


  "யோசனை என்ன ரங்கா? அவன் முகத்திலேயே தெரிகிறதே, அவன் ஒரு வெற்றி திருமகன் என்று.


          உறுதிப்படுத்திக் கொள் உன் முடிவை. ஜெயமே அது நிச்சயம்."

 

    சுவாமிஜியின் வார்த்தைகள் மாறனுக்கு பண குவியலுக்குள் விழுந்து எழுந்தது போல இருந்தது.


    நேராக சென்று குருஜியின் காலடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்தான் மாறன்.


    "சுவாமி நீங்கதான் என் தெய்வம். உங்க ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேணும்."

   

    அவன் சுவாமிஜியின் காலில் விழுந்த நேரம், குருஜியும் அமைச்சரும் ஒரு மர்ம புன்னகையுடன் கண்களில் சைகை செய்து கொண்டனர்.

     

     "எழுந்திரு மகனே, எனது நல்லாசி உனக்கு என்றும் உண்டு."


    "நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன் மாறா குருஜியோட வாயால நல்ல வாக்கு வாங்கி இருக்க."


  "எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் தலைவரே, நீங்க என்னை கூப்பிட்டு விட்டதால தான், இவ்ளோ பெரிய மகான நா சந்திக்கிற வாய்ப்பு  கிடைச்சது."


    "யார் யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது கிட்டயே தீரும்.


    விதி பயனை யாராலும் மாற்ற முடியாது. உனக்கானது உன்னையே வந்து சேரும் மகனே."


  "மாறா என்ன பொருத்தவரைக்கும் குருஜி பேச்சுக்கு மறுவார்த்தையே இல்லை.


    அதனால வர்ற தேர்தல்ல எம்எல்ஏ கேண்டிடேட்டா, உன்னையவே மேலிடத்தில் சிபாரிசு பண்றேன்.


    நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் மாறா.

   

      உனக்கு உதவி செய்றதுக்காக நம்பிக்கையான நம்ம கட்சி ஆளுங்க அஞ்சு ஆறு பேரை, அங்க அனுப்பி வைக்கிறேன். ம்ம் இப்ப நீ கெளம்பு."


      "ரொம்ப நன்றிங்க தலைவரே."


      அவன் மீண்டும் ஒரு முறை அமைச்சரின் காலிலும் குருஜியின் காலிலும் விழுந்து வணங்கி விட்டு சென்றான்.


      "குருஜி நான்தான் சொன்னேன்ல, இந்த முட்டாப் பய அடிதடிக்கு தான்  லாய்க்குன்னு."

     

    "ரங்கா நீ கேள்விப்பட்டதில்லையா? சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று, இவன் நமக்கு நிச்சயம் தேவைப்படுவான்.


      நமது திட்டத்துக்கு சிந்தித்து செயல்படும் புத்திசாலி தேவையில்லை, சொல்வதை செய்து முடிக்கும் முரட்டு முட்டாள் தான் தேவை."


      மாறன் நாச்சியம்மன் கோவில் பிரகாரத்தில் நுழைந்த போது, அங்குள்ள ஊர் மக்கள் அனைவரும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.


      அவன் கோயிலில் தற்போது நடந்து கொண்டு இருக்கும் பிரச்சினையில், வேடந்தூர் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தான். பின்ன வேடந்தூர்ல வாக்காளர் எண்ணிக்கை ஜாஸ்தியாச்சே.


    அங்கிருந்தவர்கள் அனைவரும் வாயை பிளந்து கொண்டு தான் அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.


    எதிர்ப்பு குரல் தெரிவித்த ஒரு சிலரும், மாறனின் ஆதரவிற்கு பிறகு வாயை திறக்கவில்லை. 


  அவனின் கட்டப்பஞ்சாயத்து தான்  ஊரறிந்த விஷயமாயிற்றே.


    "ஐயா கொற்றவை தேவி  கோவில்ல இருந்து சீர் கொண்டு வர்றது முதல்ல நாம கடைப்பிடிச்சிட்டு இருந்த வழக்கம் தானே.


    ஏதோ இப்ப இடையில சில காரணத்தால பழக்கம் மாறிடுச்சு.


  ஆத்தாவே இப்ப திரும்ப அந்த  நடைமுறையை கேட்கறா, அப்ப நம்மளும் மாறி தானே ஆகணும்.


      இதுல என்ன உதவி வேணும்னாலும் தயங்காம எங்க கிட்ட கேளுங்க, இல்ல ஏதாச்சும் செய்யணும்னாலும் நாங்க ரெடி தான்."


    சுந்தரமூர்த்தி ஐயா மாறனை பார்த்து நாசுக்காக பேச ஆரம்பித்தார்.


      "ரொம்ப சந்தோஷம்பா. நீங்க உதவி செய்றேன்னு சொன்ன அந்த ஒரு வார்த்தையே எங்களுக்கு போதும்.


      இது ஜாதி, மதம், கட்சின்னு பாகுபாடில்லாம ஊரே சேர்ந்து கொண்டாடுற திருவிழா. கண்டிப்பா உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு எப்பவும் வேணும். உதவி தேவைப்படும்போது கண்டிப்பா கூப்பிடுறோம்."

 

    கூட்டத்திலிருந்து தள்ளி வந்து வேந்தனுக்கு தொலைபேசியில் அழைத்தான் வெற்றிச்செல்வன் என்னும் வெற்றி.


  வெற்றி, வேந்தன் மற்றும் தீபனுடன் பள்ளியில் படித்த அவர்களின் தோழன் ஆவான். 


  தன் மண்ணின் மீது கொண்ட பிடிப்பினால், அக்ரி படித்து இயற்கை விவசாயம் செய்யும், வளர்ந்து வரும் ஒரு இளம் விவசாயி.


    இங்கு கோயிலில் நடந்தவற்றையும், மாறனின் வரவையும் அவன் கூறிய அனைத்தையும் வேந்தனிடம் தெரிவித்தான்.


"சரி வெற்றி, நீ அங்க போய் கவனி. ஏதாச்சும் ஒன்னுன்னா எனக்கு உடனே கூப்பிடு."


"சரி வேந்தா நான் பார்த்துக்கிறேன்."


     வேந்தன் தீபனுக்கு தொலைபேசியில் அழைத்தான்.


        "தீபா நாம நெனச்சபடி எலி எலிப்பொறிய நோக்கி வந்துகிட்டு இருக்கு, கூடிய சீக்கிரமே பொறியில சிக்கிடும்."


    "அதுக்குத்தானே வேந்தா நாம காத்திருந்தோம்,அதை ஒரு கை பார்த்திடுவோம்."

   

இவனுங்க பேசிக்கிறத பார்த்தா ஏற்கனவே இது பத்தி தெரியும் போலையே…