அத்தியாயம் 25
"என்ற…என்ற…மகேன் சிவராமனவாய்யா சொல்லற ராசா?"
"உங்க மகனே தான் பாட்டி."
"அவன பாத்தியா ராசா நீ? என்ற மருமக எப்படி இருக்கா? ரெண்டு பேரும் எங்க இருக்காங்க? என்ன பாக்க வந்திருக்காய்ங்களா?"
"இல்ல பாட்டி நாம தான் அவங்க வீட்டுக்கு போக போறோம். அவருக்கு நீங்க ஆஸ்பத்திரியில் இருக்கிறது இன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன்."
அப்போது தீபனுக்கு மூர்த்தி தாத்தாவிடம் இருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் வேந்தனிடம் கூறிவிட்டு எடுத்த பேச தொடங்கினான்,
"சொல்லுங்க தாத்தா."
"......"
"நிரஞ்சனாவையா நல்லா தேடி பார்த்தாங்களா? கீழ எங்கயும் இல்லையா?"
"....."
"அவங்களோட போட்டோ வச்சு ஹாஸ்பிடல்ல கேட்டுப்பார்த்தாங்களா?"
"....."
"எல்லோரையும் தைரியமா இருக்க சொல்லுங்க எதுவும் பயப்பட வேண்டாம். நான் உடனே கீழ வரேன்."
"நிரஞ்சனாவை எங்கே தேடியும் கிடைக்கலையாம், எல்லாரும் கீழே பதட்டமா இருக்காங்க."
"அண்ணனும் தங்கச்சியும் அடுத்த நாடகத்தை ஆரம்பிச்சுட்டாங்க போல ராசா, நீ விடு அவங்க எப்படியோ போகட்டும். எனக்கு மனசே விட்டு போச்சுப்பா."
பூவுப்பாட்டி கூறியதைக் கேட்கும் போதே உணர முடிந்தது, அவர் மனதில் உண்டான ரணத்தை, இருந்தும் இப்படியே விட்டு விட முடியாதே, ஒருவேளை இது உண்மையாக இருந்தால்?
எனவே வேந்தனும் தீபனும் கீழே சென்று பார்த்து வருவதாக, அவர்களிடம் கூறி சென்றனர்.
கீழே எங்கு தேடியும் ரஞ்சி கிடைக்காததால் மாறனுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
அங்குள்ள அனைத்து ஊழியர்களிடமும் ரஞ்சியின் புகைப்படத்தை காட்டி விசாரித்த போதும், எந்த பலனும் இல்லை.
அவளது தொலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவே, தொடர்ந்து கூற, இவனுக்கு மனதில் பதட்டம் அதிகமானது.
கீழே வந்ததும் தீபன் ஒரு புறம் அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணையை தொடங்க, வேந்தன் சந்துருவிற்கு அழைத்து, அங்குள்ள நிர்வாகத்திடம் பேசி கேமரா பதிவை செக் செய்தான்.
அதில் சிறிது நேரத்திற்கு முன்பு, ரஞ்சி தொலைபேசியில் யாருடனோ பேசியபடியே, ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறியது தெரிந்தது.
அவள் தானாகவே வெளியே சென்றிருப்பதால், ஆஸ்பத்திரிக்கு அருகில் எங்காவது இருக்கலாம் என்று கூறி, ஆண்கள் அனைவரும் அவளைத் தேட கிளம்பினர்.
பெண்களும் குழந்தைகளும் எப்படியாவது ரஞ்சி கிடைத்து விட வேண்டும் என்ற தவிப்புடனே, மூர்த்தி தாத்தாவுடன் வேடந்தூரை நோக்கி சென்றனர்.
ரஞ்சி தனது கண்களை திறக்க முயற்சி செய்தாள். அவளது கண்கள் இன்னும் மயக்கத்திலேயே இருந்தது. உள்ளுணர்வுகள் விழித்துக் கொள்ள கஷ்டப்பட்டு கண்களை திறந்து பார்த்தாள்
ஒரு வசதியான காலி அறைதனில், தான் ஒரு பஞ்சு மெத்தையில் படுக்க வைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து, என்ன நடந்தது என்பதையும், தான் இங்கு எப்படி வந்தோம் என்பதையும் ஞாபகத்தில் கொண்டு வர முயற்சி செய்தால் ரஞ்சி.
ஹாஸ்பிடலில் இருக்கும்போது ரஞ்சிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், உனது திருமணம் வேந்தனுடன் நடக்க வேண்டும் என்றால், இப்படி உன் பாட்டியின் உயிரை பணையம் வைத்து, அதை நடத்தி விட முடியாது.
முதலில் வேந்தனின் மனம் உன் புறம் சாய வேண்டும். அதற்கு நான் உனக்கு உதவுகிறேன். நம்பிக்கை இருந்தால் கீழே வந்து என்னை பார் என்று கூறியது அந்த குரல்.
எங்கே தானும் தன் அண்ணனும் மாட்டிக் கொண்டோமோ என்று பயந்த ரஞ்சி, தன் அண்ணனிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்து, தொலைபேசியில் அழைத்தது யார் என்பதை காண கீழே சென்றாள்.
அவள் அவ்வாறு யாரிடமும் சொல்லாமல் சென்றது தான் தவறாகிப் போனது. மருத்துவமனைக்கு வெளியே அவளை வரச் சொன்ன அந்த குரல், அவள் வெளியில் வந்ததும் மயக்க மருந்தினை அவள் மூக்கில் வைத்து அழுத்தியது மட்டும்தான் அவளுக்கு நினைவு இருந்தது.
பிறகு கண் விழிக்கும் போது இந்த அறையில் இருக்கின்றாள். எவ்வளவு முயன்றும் தன்னை இங்கு கூட்டி வந்தவர்கள் யார் என்றே அவளுக்கு தெரியவில்லை.
திடீரென்று அறையின் உள்ளே ஒரு வெள்ளை புகை பரவ, மீண்டும் மயக்க நிலைக்கே ரஞ்சி சென்று விட்டாள்.
அவள் இருந்த அறைக்கு பக்கத்து அறையில், அவள் மயங்கி விழுவதை கேமரா மூலம் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தது இரு உருவங்கள். அவர்களில் ஒருவர் அமைச்சரின் குருஜியும் மற்றொன்று அவரால் விஜயன் என்று அழைக்கப்பட்டவனும் தான்.
"குருஜி எதுக்காக இந்த பொண்ண இப்ப கடத்திட்டு வர சொன்னீங்க?"
"என்ன விஜயா மறந்து விட்டாயா? இன்னும் இரண்டு நாளில் குருந்த மரத்தடியில் இருந்து மண்ணெடுக்கப் போகிறார்கள் இல்லையா."
"ஆமாம் குருஜி, ஆனா?"
"பொறு நான் முழுதாக கூறிவிடுகிறேன். அப்போது மோகினி பள்ளத்திலிருந்து வெளிப்படும் உன் மகளின் ஆன்ம சக்தியினை தாங்கும் அளவிற்கு, இந்த பெண்ணின் உடலும் மனமும் பலப்பட வேண்டாமா? உன் மகளின் ஆன்ம சக்தி நூற்றாண்டுகள் கடந்தும் வஞ்சம் தீர்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
நேரடியாக இந்தப் பெண்ணின் உடலில் அது கலந்தால், உன் மகளின் ஆன்ம சக்தியினை தாங்க முடியாமல் இவள் மாண்டு போகலாம்.
அதனால் தான் இப்பெண்ணை இங்கு வைத்து, சில மூலிகை மற்றும் மாந்திரீகத்தினால் சக்தி கொடுத்து உருவேற்ற முடிவெடுத்துள்ளேன்.
உன் மகளின் வரவாள்தான் அந்த கொற்றவையின் முடிவு ஆரம்பமாகப் போகிறது. நமது தெய்வம் காலக்கோடரை மகிழ்விக்க போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை விஜயா."
தனது கையில் உள்ள கோப்பையில் பாதி அளவே இருந்த ஆறிப்போன காபியை, அமிர்த சொட்டு போல சொட்டு சொட்டாக ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தாள் மது. அவளை முறைத்துக் கொண்டு எதிரில் அமர்ந்திருந்தால் வினு.
"இன்னும் எவ்வளவு நேரம் டி அந்த ஆறிப்போன காபியை ஊதி ஊதி குடிச்சுட்டு இருப்பே?"
"நீ காண்டாகி கிளம்பலாம்னு சொல்ற வரைக்கும்"
"அடியே உன் கோயம்புத்தூர் குசும்ப என் கிட்ட காட்டாத, ஒட்ட நறுக்கிடுவேன் வாலை. மரியாதையா சொல்லு, என்ன நடந்துச்சு உள்ள, அந்த ஓனர் ஏதாச்சும் மிரட்டினாரா?"
"இன்னும் எத்தனை தடவை தான் கேட்ப, நான்தான் சொன்னேன்ல நான் உடைச்ச பொருளுக்கு தான் காசு கேட்டாரு, மத்தபடி வேற எதுவும் சொல்லல."
"சரி நாம வந்த வேலைய மட்டும் பாத்துட்டு போலாமே, அதுக்கு எதுக்கு அப்படி ஒரு போஸ்டிங்கே இல்லாத இந்த கம்பெனில, உனக்காகவே போஸ்டிங்கை ஏற்படுத்தி உன்னயவே அப்பாயிண்ட் பண்ணியிருக்காரு அவருக்கு பி ஏ வா?"
"அது எனக்கு என்னடி தெரியும். அது அவரைத்தான் போய் கேட்கணும்"
" ஓஓஓஓஓ அவரை...ம்ம்ம், அவர் போயிட்டு வரேன்னு தலையாட்டும் போது பவ்யமா திரும்ப தலையாட்ட மட்டும் தெரியுமோ இந்த பச்ச குழந்தைக்கு?”
No comments:
Post a Comment