Search This Blog

Followers

Powered By Blogger

Friday, May 16, 2025

மன்னவரே 05

 


             அத்தியாயம் 5

       

             இந்தாம்மா ரைட்டரு அஞ்சாவது எபி ஆச்சு இன்னும் ஹீரோயினை ஒழுங்கா கண்ணுல காட்டனயா நீயினு  நீங்க கேக்கறது புரியுது.


          இதோ வாங்க போகலாம் நம்ம மதுரயாழினி வீட்டுக்கு.


        ஆஹா வாசல்ல சாணி தெளிச்சு அழகா வெள்ளையும் காவியும் கலந்து போட்டு இருக்க கோலம், இன்னிக்கு வெள்ளி கிழமைனு பறைசாற்றுது.


          கேட் திறந்து உள்ளே போனா நடைபாதைக்கு ரெண்டு பக்கமும் பூஜைக்குரிய செவ்வந்தி, செம்பருத்தி, அரளி மலர்களும் தலையில் சூடும் மணம்க்கமழும் மல்லிகை முல்லை கொடிகளும், வாழை மரமும் செழிப்பா வளந்து இருக்கு. 


        கதவையெல்லாம் தட்ட வேண்டாம் வாங்க நாம நேரா உள்ள போவோம். 


  அப்பப்பா அந்த ஊதுபக்தியோட சேர்த்துவர சாம்பிராணி மணம் மனசுக்கு அவ்வளவு இதம்மா இருக்கு.  


    வரவேற்பரைய தாண்டும் போதே பில்டர் காபியோட மணம் நம்ம கால்களை, அதோட திசைக்கு இழுத்திட்டு போகுது.


          அங்க இந்த வீட்டின் குடும்ப தலைவியான அன்னலட்சுமியம்மா காலை உணவு சாப்பிட்டு கொண்டு இருக்கும்  தன் கணவர் சிவராமனுக்காக, காபியை ஆத்திகிட்டு இருக்காங்க.


      இவங்க பெத்த ரத்தினங்க ரெண்டும் ஒன்னு சோபாக்கு பின்னாடியும், இன்னொன்னு டிவிக்கு பக்கத்திலும் ஒளிஞ்சு நின்னு எட்டி பார்த்துட்டு இருக்குங்க.


        சிவராமன் காபியை குடிச்சுட்டு லட்சுமியம்மாட்ட சொல்லிட்டு கிளம்பராரு.


      அவர அனுப்பிட்டு லட்சுமியம்மா உள்ள வராங்க, 


            என்னடா இது ஹால்ல ரெண்டு டிரம்மு உருண்டுட்டு இருக்கு. 


          அட அது நம்ம நாயகியும் அவளோட பாச மலரும்தானா.


            லட்சுமியம்மா வந்து இதைப்பார்த்துட்டு தலைல அடிச்சுக்கிட்டு போய்டாங்க சமையல்அறைக்கு. 


      அவங்க கண்டுக்காம போறதை பார்த்தாலே தெரியுது, அண்ணன் தங்கச்சிக்குள்ள தினம் நடக்கற அக்கப்போர்தான் இதுன்னு.


        "டேய்ய், அண்ணாண்ணு கூட பார்க்க மாட்டேன் மரியாதையா ரிமோட்ட குடுடா, நா சுட்டி டீவீல ஜாக்கி சான் பார்க்கனும்."


        "ஏய் குட்டிப் பிசாசே ரிமோட்டை விடுடி, அப்பா நேத்து நியூஸ் பார்த்துட்டு இருந்ததால என்னால மேட்ச் பார்க்க முடியல, நா ஹைலைட்ஸ் பார்க்கனு."


          "முடிஞ்சு போன மேட்ச்தான போய் பேப்பர்ல பாரு போ. இப்ப விட்டா திரும்ப இத போடமாட்டாங்க எனக்கு ஜாக்கிதான் பார்க்கனும்."


        "நீயென்ன பாப்பா வா, சுட்டி டீவி பார்க்க. ரிமோட் எல்லாம் தர முடியாது போ போ"


      ரிமோட்டை கனியமுதன் தூக்கிட்டு ஒட, மது அவனை பிடிக்க முடியாம டீவி சுவிட்ச்சை ஆப் பண்ண, ரெண்டு பேருக்கு கைக்கலப்பாக ஹால்ல இருக்க பொருள் எல்லாம் இழுத்து போட்டு வீட்ட சந்தைகடை ஆக்கிட்டாங்க.


          இதுங்க இப்படியே சண்டை போட்டுட்டு இருக்க, அவங்கள பெத்த புண்ணியவதி திரும்ப உள்ள வந்து, வீடு இருக்க கோலத்த பார்த்து கோபமா மொத்தராங்க ரெண்டு பேர் முதுகுலயும்.


          "பொழுது விடிஞ்சுப் பொழுது போனா இதேவேளையா போச்சு.


          வீடு இருக்க லட்சனத்தை பாரு, யாராச்சும் வந்து பார்த்தா வீடு இருக்க கோலத்துக்கு வாசலோட கும்பிடு போட்டுட்டு போய்டு வாங்க."


        "ம்மா, எல்லாம் இந்த குட்டி பிசாசோட வேல, அவதாம்மா இப்படி வீட்ட மொத்தமா கவுத்து வச்சிருக்கா."


          "அவ்வாஆஆ, பொய் பொய் நீயேன்டா ரிமோட்டை பிடிங்கிட்டு ஓடுன, உன்ன பிடிக்க போய்தான் இப்படி ஆச்சு. ஆரம்பிக்கறது நீ கோர்த்துவிடறது மட்டும் என்னையா உன்னனன..."


          "ஏன்டா ஒனக்கு வேலைக்கு லேட் ஆகல இன்னும் இங்க என்னத்த பண்ணிட்டு இருக்க, போய் கிளம்பு போ."


          "அடியே குட்டி கழுத வெள்ளி கிழமை அதுவுமா குளிக்காம இப்படி வந்து நிக்கற, ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் விரதமிருந்தா மட்டும் பத்தாது, சுத்தபத்தமா இருக்க வேணா. ஒனக்கும் வேலைக்கு போக டைம் ஆகுது பாரு, மொத குளிச்சிட்டு வா போ.


      எந்தலையெழுத்து நல்லா பெத்தம்பாரு ஒங்க ரெண்டு பேரையும் வரம் வாங்கி."


        "என்னைய மட்டும் பெத்திருந்தா இந்த கொசுவெல்லாம் வந்து கொடைச்சல் குடுக்குமா? இந்த  தொல்லையையும் ஏம்மா பெத்தே?"


    "ஹம்ம்ம் உன்ன பெத்த பாவத்த கழிக்கத்தான், என்னைய பெத்து புண்ணியம் தேடிக்கிட்டாங்க அப்படிதானம்மா."


      ரெண்டு பேரும் மறுக்கா அடுத்த ரவுண்டு ஆரம்பிக்க, லட்சுமியம்மாக்கு கோபம் வந்துடுச்சு  மறுபடியும் அவங்க தலைல கொட்டு விழுகுது.


      "இப்ப ரெண்டு பேரும் போய் கிளம்பறீங்களா, இல்ல கிளம்பி போன உங்க அப்பாவுக்கு போன் பண்ணி திரும்பி வர சொல்லவா."


      அவ்வளவுதாங்க ரெண்டும் மொகத்தை தூக்கி வெச்சுக்கிட்டு உள்ள போயாச்சு.


      அம்மாக்கு தெரியாதா புள்ளைங்க எதை சொன்னா அடங்குவாங்கன்னு.  


      அவங்க அப்பாக்கு கோபம் அவ்வளோ சீக்கிரம் வராது, வந்தா  வீட்டுல ருத்ரதாண்டவந்தான். 


      கனியமுதன் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளரா இருக்கான்.


      மது ஒரு சின்ன தனியார் ஆபிஸ்ல கணக்காளரா இருந்துட்டே, வெளியே நல்ல வேலையா தேடிட்டு இருக்கா.


      இவங்க மெதுவா கிளம்பி வரட்டும் நாம அதுக்குள்ள வேடந்தூர்வரைக்கும் போய்ட்டு வரலாம் வாங்க.


       தீபனின் வீடு, தான் வந்து நின்றது கூட தெரியாது தீவிரமாக ஏதோ கோப்புகளை பார்வையிட்டபடி யோசனையில் இருந்த தீபனின் முதுகைத்தட்டி, நிகழ்வுக்கு கொண்டு வந்தான் வேந்தன்.


        "நா வந்தது கூட தெரியாத அளவுக்கு என்னடா யோசனை? நீ வந்தது தெரிஞ்சு, ஆத்தா அங்க உனக்கு புடிச்சது எல்லாத்தையும் செஞ்சு வச்சுட்டு காத்திருக்காங்க. 


     நீயென்ன இங்க ஆள் வந்து நிக்கிறது கூட தெரியாம ஒக்காந்து கனா கண்டுட்டு இருக்க."


    "இல்ல மாப்ள இந்த மாரியப்பன் கேஸ்தா பார்த்துட்டு இருக்க. எப்படி போனாலும் முட்டுது அதையத்தான் யோசிச்சுட்டு இருந்தேன். அதான் நீ வந்ததை கவனிக்கல."


      "ம்ம்ம், நானும் கேள்விப்பட்டேன், ஆமா இந்த மாரி உங்க வீட்லதான வேலை பார்த்துட்டு இருந்தான்?"


      "ஆமா ஆனா ரெண்டு மூனு மாசமா இங்க வேலைக்கு வர்றது இல்லையாம், நா ஆல்ரெடி வீட்ல எல்லார்கிட்டையும் விசாரிச்சுட்டேன்."


        "ஊருக்குள்ளயும் கேட்டாச்சு அவனை யாரும் கொஞ்ச நாளா பார்க்கலையாம்.


        யாரோ தோஸ்த்து ஒருத்தங்கூட வெளியூர் வேலைக்கு போறதாகவும், அதுக்கு முன்பணமா இருபதாயிரம் குடுத்ததாகவும் அவம்பொண்டாட்டிகிட்ட சொல்லி இருக்கான்."


          இவங்க பேசிகிட்டு இருக்கும்போதே நம்ம சின்ன மூர்த்தி அதை கேட்டுகிட்டே அங்க வருகை புரிகிறார்.


        "அட அந்த பள்ளத்துகிட்ட இந்தமாறி நடக்கறது புதுசாயென்ன."


          "அங்க ஏதோ பழங்கால  பொக்கிஷம் இருக்குன்னு நம்பி போன, நம்ம ஊர்க்காரங்கள் நிறைய பேர்க்கு இதே கதிதான ஆச்சு.


          இந்த மாரிகூட அதுபோல கேஸாதான்டா இருக்கும், ஆனா அவங்கெல்லாம் எப்படி இறந்தாங்கன்னு மட்டும் யாராலயும் கண்டுபிடிக்க முடியல."


            "ம்ஹூம் அப்படி புதையல் தேடி போறவன்கிட்ட கோடாரி இருந்தது சரி தான், ஆனா மரத்தையே அழிச்சு அந்த நிலத்தையே விஷமா மாத்தர மருந்து ஏன் இருந்துச்சு."


      மூர்த்தியும், வேந்தனும் தாம் கேட்ட செய்தியில் அதிர்ந்து நோக்க, தீபன் தொடர்ந்தான்.


    "இதோட பேர் டிரைக்ளோரோ பெனாக்ஸியாசெடிக். இது ஒரு களைக்கொல்லி மருந்து.


      ஒரு சில வெளிநாடுகளிளேயே இதை தடை செஞ்சிருக்காங்க.


          ஏன்னா இதோட பவர் மரம் செடிகளை மட்டும் இல்ல மனுஷங்க விலங்குகளையும் பாதிச்சுதுன்னு."


          இங்கு தீபன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவன் அறை ஜன்னலில் யாரோ ஓளிந்திருந்து இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருப்பதுபோல் தோன்ற, வேந்தன் தீபனுக்கு ஜாடை காட்டி வீட்டை சுற்றி ஆளுக்கொரு திசையில் சென்று அவ்வுருவத்தை பிடிக்க முயலுகையில், அது அவர்களுக்கு போக்குகாட்டி மறைந்து போனது.

No comments:

Post a Comment