Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, June 1, 2025

மன்னவரே 21


 

           அத்தியாயம் 21


    "ரெண்டு நாளைக்கு முன்னாடி கிடைச்ச, இந்த சிசிடிவி ஃபுட்டேஜ் வச்சு தான், உங்க  வண்டி நம்பரை கண்டுபிடிச்சோம்.


    இன்னைக்கு காலையில் தான் என் கைக்கு உங்க அட்ரஸ் வந்துச்சு. ஆனா பாருங்களேன் தேடுற ஆளே முன்னாடி வந்து உக்காந்திருக்காங்க.


  ஆனா இதுல வினோதினின்னு இல்ல ஓனர் பேர் போட்டு இருக்கு, ஓஓஓ...அப்போ உங்க பிரண்டு வினோதினியோட வண்டில வந்து தான், என் வண்டி மேல இடிச்சீங்களா மிஸ் மதுரம்?


  ஆனா அந்த போலீஸ்காரர் கூட, லைசன்ஸ்ல இருந்த பேர் வினோதினின்னு தானே சொன்னாரு, அப்போ லைசன்ஸ் கூட இல்லாம தான் நின்னுட்டு இருந்த வண்டி மேல வந்து இடிச்சி இருக்கீங்க, அப்படித்தானே மிஸ் மதுரம்."


      மது இதுக்கு மேல அமைதியா இருந்தா வேலைக்கு ஆகாது, விட்டா என்னோட ஹிஸ்டரி ஆஃப் லைஃபையே புட்டு புட்டு வைப்பான் போல, அவனும் தானே வண்டியில ஒன்வேல வந்து தப்பு பண்ணுனான், பொறுத்தது போதும் மது பொங்கி எழு,


    அவள் பேச வாய் எடுக்க அதற்கு முன் அவன் பேச ஆரம்பித்துவிட்டான்.


  "இந்த அட்ரஸ் உங்களோடது இல்லையா மிஸ் மதுரம்? உங்களை இப்போ பார்க்காமல் இருந்திருந்தா, இந்த அட்ரஸ்க்கே நேரா இன்னைக்கு போயிருப்பேன்."


  "இப்போ என்னதான் பண்ணனும்னு சொல்றீங்க மிஸ்டர் எம்டீ சார். நீங்க என் அப்பாவை பத்தி பேசினதால தான் நான் அப்படி நடந்துக்கிட்டேன்?"


    "இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடான்னு முதல்ல கேட்டது யாரு?"


  "ப்ச்சு சரி, நான் தானே உங்க வண்டி மேல இடிச்சேன், என் ஃப்ரெண்டை எதுக்கு இழுக்கறீங்க?"


      "பட் அது எனக்கு தெரியாதே, இப்பதானே இது உங்க பேரு இல்லைன்னே தெரியுது.


      அது மட்டுமா வண்டியும் உங்களோடது இல்ல, லைசென்ஸ் உங்ககிட்ட இல்ல, அதோட என் கார் ஹெட் லைட்டையும் உடைச்சு இருக்கீங்க.


    அட சொல்ல மறந்துட்டேன் பாருங்க, அங்க பாருங்க முக்கியமா நீங்க தலையில ஹெல்மெட்டே போடல. இப்போல்லாம் ஹெல்மெட் போடலைன்னா என்ன அபராதம்ன்னு தெரியும் இல்ல, அதோட லைசென்ஸ் இல்லாம வண்டியை ஓட்டிட்டு வந்து இருக்கீங்க, கூட்டி கழிச்சு பார்த்தா எவ்வளவு அமௌன்ட் வரும்னு நீங்களே நல்லா...கணக்கு பண்ணி சொல்லிடுங்க மிஸ் மதுரம்."


    "இப்போ என்ன உங்களுக்கு பிரச்சனை? இதை செட்டில்மெண்ட் பண்ணனும் அவ்வளவு தானே.


  இப்போ நான் உங்களுக்கு செஞ்சு கொடுக்க போற, இந்த  வேலைக்கான சம்பளத்திலிருந்து, இதை பிடிச்சுக்கோங்க."


  "பட் இந்த ஒர்க் உங்க முதலாளியோட டையப் பண்ணி இருக்கேன். சோ இதிலிருந்து என்னால பிடித்தம் செய்ய முடியாது."


      மதுவின் பொறுமை, காற்றில் கரையும் கற்பூரம் போல, கரைந்து கொண்டிருந்தது


  "இப்படி சந்து பொந்துக்குள்ள புகுந்து சுத்தாம, நேரடியா விஷயத்துக்கு வர்றீங்களா, மிஸ்டர் எம்டீ சார்."


      "மிஸ் மதுரம், ஒன்னு என்னோட பணத்தை எண்ணி வையுங்க. இல்லைன்னா என் ஆபீஸ்ல வொர்க் பண்ணி இந்த கடனை அடைங்க."


      "இந்த ரெண்டுமே, என்னால செய்ய முடியாதுன்னு சொன்னா?"


      "சிம்பிள், நேரா போலீஸ் ஸ்டேஷன் போய், இந்த எல்லா டீடைல்ஸ்சையும் சாட்சியா கொடுக்க வேண்டியது தான்."


  "பிளாக் மெயில் பண்றீங்களா?"


  "வாட், என் பணத்தை நான் கேட்டா, உங்களுக்கு பிளாக் மெயிலா தெரியுதா."


      மதுவுக்கும் புரிந்தது தன்மீது தான் தவறு என்று, இருந்தாலும் அவன் பேசிய பேச்சுக்கு, தான் கொடுத்த பதிலடி சரிதான் என்றும் இன்னொரு மனது கூறியது.


  ஆனாலும், தான் செய்த தவறுக்கு, தன் தோழியை இதில் சிக்க வைக்க விரும்பவில்லை. எனவே ஒரு முடிவோடு பேச ஆரம்பித்தாள்


    "என்ன மாதிரி வொர்க்ஸ்?"


    "குட் நல்ல முடிவு தான் எடுத்திருக்கீங்க. மோஸ்ட்லி என்னோட பிஏ வா இருக்க வேண்டி இருக்கும். நான் இதுவரைக்கும் யாரையும் அசிஸ்டன்ட்டா வெச்சுக்கிட்டதில்ல."


  "மேபி உங்களால், என்னோட ஒர்க் பிரஷர் கொறஞ்சதுன்னா, நீங்களே இந்த போஸ்டிங்கில் கண்டின்யூ பண்ணலாம் மிஸ் மதுரம்."


"நோ தேங்க்ஸ் மிஸ்டர் எம்டீ சார். நான் உங்க கடனை அடைக்கிற வரைக்கும் இந்த போஸ்டிங்ல கண்டின்யூ பண்ணாலே போதும்.


    ஆனா என்னோட ஆபீஸ்ல இருந்து இங்க எங்களை, உங்க கம்பெனி அக்கௌன்ட் பார்க்க தானே அனுப்பி இருக்காங்க ,அங்க என்ன சொல்லுறது?"


  "ரெகுலர் டைம்ல உங்க பிரண்டோட சேர்ந்து அக்கவுண்ட்ஸ் பாருங்க. பட் எனக்கு அசிஸ்டன்ட் தேவைப்படும்போது, நான் கூப்பிடும் போது நீங்க வந்தாகணும். முறைக்காதீங்க மிஸ் மதுரம். நான் அசிஸ்டன்ட்டா தான் வர சொன்னேன்

     

  ஓகே, அப்போ நாளைக்கு காலையில ஒரு ஏழு மணிக்கே ஆபீஸ் வந்துடுங்க."


    அப்போது வேந்தனுக்கு தொலைபேசி அழைப்பு வர, அதை எடுத்துப் பேசியவன் பதட்டமானான்.


"ஹலோ....."


"......"


"ஆத்தா, முதல்ல அழாமல் பேசு."


"......"


"எந்த ஹாஸ்பிட்டல்?"


"....."


    "சரி நான் இதோ வரேன். முதல்ல நீ அழுகறத நிறுத்து. ஒன்னும் ஆகாது நான் இதோ வந்துகிட்டே இருக்கேன்."


    தனது மேனேஜரை போனில் அழைத்தான். அவருடன் சேர்ந்தே  ராகுலும் வினுவும் அறைக்குள் நுழைந்தனர்.


  "முத்து அண்ணா, இவங்களுக்கு நம்ம  அக்கவுண்ட்ஸ் புக் எடுத்து கொடுங்க, ஒரு க்ளான்ஸ் இன்னைக்கு பார்க்கட்டும். நாளையிலிருந்து ஒர்க் ஆரம்பிச்சுக்கலாம்.


      இன்னைக்கு என்னோட அப்பாயிண்ட்மெண்ட் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடுங்க. ஏதாவது அர்ஜெண்ட் ஒர்க்ன்னா மட்டும் எனக்கு கால் பண்ணுங்க."


      மதுவை பார்த்து தலையசைத்து விட்டு, அவன் அவசரமாக சென்று விட்டான்.


அறைக்குள் நுழைந்த வினுவிற்கு முதலில் வேந்தனை எங்கோ பார்த்த ஞாபகம் தான். ஆனால் சிறிது நேரத்திலேயே அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.


  அதே அதிர்ச்சியுடன் மதுவை திரும்பிப் பார்க்க, அப்போதுதான் மதுவை பார்த்து தலையை அசைத்து விட்டு சென்றான் வேந்தன்.


  "என்னடா நடக்குது இங்க? போன சீன்ல எலியும் பூனையுமா இருந்தவங்க, இந்த சீன்ல கண்ணுலையே பேசிக்கிறாங்க. இவ வேற அமைதியா பதிலுக்கு தலையசைக்குறா, ஒண்ணுமே புரியலையே."

 

      வேந்தன் தனது காரினை, ஜிஎம் ஹாஸ்பிடலின் முன்பு சென்று நிறுத்தினான்.


   அங்குள்ள ரிசப்ஷனிஸ்டிடம் சென்று,


"இங்க பூவாத்தான்னு ஒரு பேஷண்ட் அட்மிட் ஆயிருக்காங்க. அவங்க எந்த ரூம்ல இருக்காங்க?"


    இவனைக் கண்டு அவசரமாக ஓடி வந்த சுகந்தாவின் மகன்கள் மணியும் மகேசும்.


  "மாமா நாங்க ரெண்டு பேரும், உங்களுக்காக தான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம். பாட்டி உங்கள பார்த்தா உடனே, உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல சொன்னாங்க."


"வடிவுப்பாட்டியா?"


"இல்ல, பூவுப்பாட்டி."


"பூவுப்பாட்டியா? அவங்க சீரியஸா இருக்கிறதா தானே எனக்கு போன் வந்தது?"


No comments:

Post a Comment