Search This Blog

Followers

Powered By Blogger

Monday, November 18, 2024

அர்ஜுனனின் அல்லிராணி அத்தியாயம் 4

 


                 அத்தியாயம் 4


    அர்ஜுன் ஒரு அகழ்வாராய்ச்சியாளன், பிளஸ் டூவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும் கூட, தொல்பொருள் துறையில் அவனுக்கு இருந்த ஆர்வம் காரணமாக, மற்றவர்கள் கேலி பேசிய போதும் எதை பற்றியும் கவலை கொள்ளாமல்,  தனக்கு பிடித்த தொல்பொருள் ஆராய்ச்சி துறையை மேற்படிப்பாக எடுத்துப் படித்து, இப்போது ஒரு அகழ்வாராய்ச்சியாளனாக வேலை செய்து கொண்டிருக்கிறான். 


    அவனது வேலை காரணமாகவே  அவனுக்கு வந்த நிறைய சம்பந்தங்கள் தட்டிச் சென்றன.


    அர்ஜுனை பொறுத்தவரை ஒருவருக்கு உதவி  செய்வதாக உறுதி அளித்து விட்டால், தன்னால் இயன்ற அளவு அவர்களுக்கு செய்து கொடுத்த பிறகு தான் மறுவேலையே பார்ப்பான்.


     அவனது நல்ல குணத்திற்காகவே நிறைய உறவுகளும் அவனுக்கு கிடைத்தது. இருந்தும் ஏனோ வாழ்க்கை துணை மட்டும் கிடைக்காமல் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது.


   மூன்று வாரங்கள் கழித்து இதோ இன்று கூட பெண் பார்க்கும் வைபவத்திற்காக அவனது தாயும் தந்தையும், கோயிலுக்கு அவனை அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.


    "அடே யப்பா உன் கையையும் காலையும் வெச்சிட்டு சும்மா இருக்கியோ இல்லையோ, உன் திருவாயை வெச்சுகிட்டு தயவு செஞ்சு சும்மா இரு.


     நான் ஆல்ரெடி விசாரிச்சிட்டேன் அந்த பொண்ணுக்கு எந்த லவ்வும் இல்ல  லவ்வரும் இல்ல, அதனால உன்னோட சோசியல் சர்வீஸை மூட்டை கட்டி வச்சுட்டு, அந்த பொண்ணு என்ன கேக்குதோ அதுக்கு மட்டும் ஆன்சர் பண்ணு.


   அவங்க குடும்பமும் விசாரிச்சவரைக்கும் நல்ல குடும்பமா தான் இருக்கு, உன்னோட வொர்க் பத்தி சொன்னதுக்கு அவ்வளவு ஆச்சரியமா இந்த காலத்துல இப்படி ஒரு பையனா அப்படின்னு புகழ்றாங்க.


   தயவு செஞ்சு இந்த சம்பந்தத்தையாவது ஓகே பண்ண விடு டா என்னால முடியல. 


    இதைவிட ரொம்ப முக்கியமான விஷயம் இதுக்கு அப்பறம் நான் உனக்கு பொண்ணே பார்க்க போறது இல்ல டா. இந்த சம்பந்தம் மட்டும் நின்னுச்சு நீ அப்படியே காவித்துணியை கட்டிக்கிட்டு சன்னியாசியா போயிடு."


   கார் ஏறியதில் இருந்து  இதோடு ஆறாவது முறையாக அர்ஜுனின் தாய் அவனிடம் புலம்பிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்.


    ஆனால் அவனோ முகத்தில் எந்த ரியாக்ஷனுமே காட்டாமல் கார் ஓட்டுவது ஒன்றையே கடமையாக செய்து கொண்டிருக்கிறான்.


     இவன் இப்படி அமைதியாக வந்து கொண்டிருப்பதற்காக பின்னால் அமர்ந்திருந்த அவனது தந்தையையும்  கன்னத்தில் ஒரு இடி இடித்தபடியே,


    "பெத்து வச்சிருக்கீங்க பாரு புள்ள,  ஏதாவது கேட்டா ஆன்சர் பண்றானா? அவன் பிரெண்ட்ஸ் கிட்ட மட்டும் சிரிக்க சிரிக்க பேசுவான். அம்மா கேக்கறாளே ஆமா இல்லைன்னு ஏதாவது பதில் சொல்றானா?"


   "ஆமாம்மா இல்லம்மா."


    "கொழுப்ப பார்த்தீங்களா இவனையெல்லாம் ஏன் தான் பெத்தனோ? கடவுளே நல்லவேளை இவன் ஒருத்தனை மட்டும் எனக்கு பிள்ளையா கொடுத்த, இவனை மாதிரியே அடுத்தடுத்து பிறந்திருந்தா.."


  "நான் அண்ணா ஆகியிருப்பேன், அதோட  சகோதர சண்டை, பாகப்பிரிவினை சண்டைக்கு இடையில நீங்க சிக்கி நிம்மதி இல்லாம அல்லாடிட்டு இருந்திருப்பீங்க.  "


    அவன் கண்ணத்தில் ஒரு இடியை வைத்தவர்,


   "அது தான் எல்லாத்துக்கும் சேர்த்து நீ பொறந்து எங்க உசுர வாங்கிட்டு இருக்கயே டா."


    அவர் மறுபடியும் புலம்பத் தொடங்குவதற்கு முன்பு கோவில் வந்துவிட, அவர்களுக்காக வெளியே காத்துக் கொண்டிருந்த மணப்பெண்  வீட்டாரை கண்டு அவர்களை நோக்கி சென்றனர்.


      காரை நிறுத்தி விட்டு வந்த அர்ஜுனை பெண் வீட்டாரருக்கு அறிமுகம் செய்து வைத்தார் அவனது தாய்.


     மணப்பெண் சந்தியா அவனை நோக்கி ஒரு புன்னகையை வீச, அவனை பூ பழம் வாங்கி வருமாறு அனுப்பி வைத்தார் அவனது தாய்.


     மணப் பெண்ணோடு பேசியபடியே  அர்ஜுனின் தாயும் தந்தையும் வந்து கொண்டிருக்க, அவர்கள் பேசட்டும் என்று முன்னாள் சென்றனர் மணப்பெண்ணின் வீட்டார்.


    சிறிது நேரத்தில் அவர்களுடன் வந்து இணைந்து கொண்ட அர்ஜுன் வாங்கி வந்ததை தன் தாயிடம் கொடுத்தான். 


    தேங்காய் பூ பழக்கூடையில் பூ மாலையோடு ஒரு ஒற்றை ரோஜாவும் இருந்ததைக் கண்ட அவனது தாய்,


    "டேய் அர்ஜுன் சந்தியாக்காக தானே இதை வாங்கிட்டு வந்திருக்கே, இந்த பூவை அந்த பொண்ணுகிட்ட நீயே குடுடா."


    அர்ஜுனின் தாய் கூறியதைக் கேட்டு வெட்கத்தில் தலை குனிந்த சந்தியா, அடுத்த நிமிடமே அர்ஜுன் பேசுவதை கேட்டு புஸ் என்று காற்றுப் போன பலூன் ஆனாள்.


   "அட நீ வேற ம்மா அந்த கடைக்காரரர் பத்து ரூபா சில்லறை இல்ல, இந்த பூவை எடுத்துக்கங்கன்னு சொன்னாரு அதனால தான் எடுத்துட்டு வந்தேன்."


    அதற்குள் மணப்பெண்ணின் தாயார் வந்து சந்தியாவை அழைத்துச் சென்று விட்டார்.


    "விஜி நம்ம பையனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது, இவன் பூமரா இருந்தா பரவால்ல 90ஸ் பூமரா இருக்கிறான் கல்யாணம் நடக்க சான்சே கிடையாது."


    அந்த நேரத்தில் தான் அதே கோயிலுக்கு இறைவனை தரிசிக்க வந்திறங்கினாள் வைஷ்ணவி தேவி.

No comments:

Post a Comment