Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, October 12, 2024

அர்ஜுனனின் அல்லிராணி - அத்தியாயம் - 02




 அத்தியாயம் 2


    காரை ஒட்டிக் கொண்டிருந்த வைஷ்ணவியின் மனதில் பல சிந்தனைகள், ஏன் மனிதர்கள் இப்படி பணம் பணம் என்று மனதை மறந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நிம்மதியான வாழ்க்கைக்கு  மனப்பொருத்தம் அவசியம் அல்லவா...!


     இங்கு பணப் பொருத்தத்தை வைத்தல்லவா புனிதமான திருமண பந்தத்தை எடை போடுகின்றனர்... 


     இது ஒன்றும் முதல் முறையல்ல, வரும் வரன்கள் அத்தனையும் இதே போன்று ஏதோவொரு விதத்தில், பணத்தை மட்டுமே குறியாக கொண்டு பேசுவதை கேட்கும் போது, அவள் மனதிற்கு திருமணம் என்ற வார்த்தையே எட்டிக்காயாக தோன்றத் தொடங்கி விட்டது.


    இப்படி அவள் சிந்தித்தபடியே காரை ஓட்டியபடி வந்து கொண்டிருந்த வேளையில், ஒரு திருப்பத்தில் இளம் ஜோடி இருவர் அவளது காருக்கு முன்பு வந்து விழுந்தனர். 


   "மேடம் ப்ளீஸ் மேடம் எங்களை நிறைய பேர் துரத்திட்டு வராங்க, எங்களை கொஞ்சம் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ட்ராப் பண்ண முடியுமா?"


   அவன் கூறியதில் இருந்தே ஏதோ காதல் பிரச்சனை என்று புரிந்து கொண்டவள்,


    "சரி பின்னாடி ஏறுங்க."


    அவர்கள் காரினுள் ஏறிய பிறகு கார் ரிஜிஸ்டர் ஆபீஸை  நோக்கி பயணிக்க, பின்னால் அமர்ந்திருந்த அந்த இளம் பெண் அழுதபடியே புலம்ப ஆரம்பித்தால்.


     "ஐயோ போச்சு என் அப்பாவும் அண்ணனும் வலை போட்டு தேட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க கண்ணுல ரெண்டு பேரும் மாட்டிணோம்னா வெட்டி பொலி போட்டுடுவாங்க, கல்யாணம் நடக்க சான்ஸே இல்ல."


     "கவலைப்படாதே அப்படி எதுவும் நடக்காது கண்டிப்பா இந்த கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கும்."


     "உங்களுக்கு அவங்களை பத்தி சரியா தெரியாது, கண்டிப்பா அவங்க கண்ணுல ரெண்டு பேரும் மாட்டினா கொன்னு போட்டுட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க."


   "அப்படி கொன்னா கொன்னுட்டு போட்டுமே என்ன பார்க்கற, உருகி உருகி லவ் பண்ணும் போது செத்தாலும் ஒட்டுக்கா தான் சாவோம்னு பேசின டயலாக் எல்லாம் நியாபகம் இல்ல?


    அப்படி டயலாக் மட்டும் பேசினா பத்தாது அதை கடைசி நேரத்தில் உபயோகமாய் யூஸ் பண்ணிக்கனும்.


    பயப்படாதே உங்க அண்ணா அப்பறம்  அப்பாவால எந்த பிரச்சினையும் வராது, அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு தான் வந்திருக்கேன்.


     எப்படியும் என்னோட கார் என்னோட பிரண்ட்ஸோட காரை அவங்க டிராக் பண்ணிட்டு இருப்பாங்க. அதனால தான் என் வண்டில வராம இப்படி இன்னொருத்தரோட வண்டியில போயிட்டு இருக்கோம்.


   கண்டிப்பா இவங்க கார்ல இருக்கறதால அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராது. கல்யாணம் மட்டும் முடிஞ்சிருச்சுன்னா அவங்களால எதுவுமே பண்ண முடியாது.


   அப்புறம் இன்னொரு விஷயம் கல்யாணத்துக்கு அப்பறம் சொத்து வேணும் அது இதுன்னு அந்த வீட்டு பக்கம் மட்டும் போற வேலையே இருக்க கூடாது.


    அஞ்சு காசா இருந்தாலும் சொந்த உழைப்பில் இருக்கணும் புரிஞ்சுதில்ல."


  காரின் நடுவில் உள்ள கண்ணாடி வழியாக பேசிக் கொண்டிருந்தவனை பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவிக்கு அவன் இங்கிருக்கும் மனிதர்களிளேயே புதிதாக தெரிந்தான்.


    தன் காதலியின் மீது எவ்வளவு காதல் இருந்தால் இப்படி பேசிக் கொண்டிருப்பான் என்றும் தோன்றியது.


    ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் நுழைந்த போது அந்த பெண்ணை அவள் தோழிகள் சூழ்ந்து கொண்டு அழைத்துச் செல்ல, அவனோ முன்புறமாக வந்து இவளுக்கு நன்றி கூறிவிட்டு நடக்கத் தொடங்கினான்.


   "ஹலோ ஹுரோ சார்."


    வைஷ்ணவியின் அழைப்பில் திரும்பி பார்த்தவன் புரியாமல் விழிக்க,


    "எக்காரணம் கொண்டும் உங்க குணத்தை மட்டும் மாத்திக்காதீங்க, இப்படி நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துக்கற குணம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வராது. சுத்தி இருக்கிறவங்களுக்காக உங்களோட சுயத்தை இழந்துராதீங்க."


     அவனைக் கண்டு புன்னகைத்தபடியே தனது காரோடு ரிஜிஸ்டர் ஆபீஸ்சை விட்டு வெளியேறினாள் வைஷ்ணவி தேவி. 


     அவள் மறைந்த அடுத்த நிமிடம் அவனது நண்பர்கள் அவனை ரவுண்டு கட்டிக் கொண்டு முறைக்கத் தொடங்கினர்

No comments:

Post a Comment