Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, October 13, 2024

அர்ஜுனனின் அல்லிராணி அத்தியாயம் 3

 



                       அத்தியாயம் 3


    "டேய் அஜ்ஜு எதுக்குடா இந்த தேவையில்லாத வேலை, அவங்க அப்பா ஊர் சைடுல எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அதோட இப்போ அரசியல் அவதாரம் வேற எடுக்க போறாராம்."


    "இருந்துட்டு போறாரு அதுக்காக உண்மையான காதலை எப்படியோ போகட்டும்னு விட்டுட சொல்றியா? 


    நான் அந்த பொண்ணுக்கு வாக்கு கொடுத்திருக்கேன். இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்ன்னு."


    சற்று நேரத்தில் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து அவர்களை அழைக்க, அடுத்தடுத்து பதிவுத் திருமணத்திற்கான வேலைகள் ஆரம்பமானது. 


    நண்பர்களின் துணையோடு நல்லபடியாக பதிவு திருமணமும் நடந்து முடிந்தது. பதிவேட்டில் தனது கையொப்பத்தை இட்ட அர்ஜுன், தனது பாக்கெட்டில் இருந்த தங்கத் தாலியை எடுத்து, அருகே கழுத்தில் பூ மாலையோடு நின்று கொண்டிருந்த இளைஞனின் கைகளில் கொடுத்தான்.


     ஆம் அங்கு வேறொருவருக்கு தான் திருமணம் நடந்து கொண்டிருந்தது.


   "அடேய் ஆனா ஊர் உலகத்துல உன்னை மாதிரி ஒருத்தனை பார்த்ததே இல்லடா, உனக்கு கல்யாணத்துக்கு பார்த்த பொண்ணை அவளோட லவ்வரோட சேர்த்து வைக்கிறதுக்கு, அவங்க வீட்டை எதிர்த்து நிற்கிற பார்த்தியா அங்க நிக்கிற டா நீ."


    அர்ஜுனுக்கு பெண் பார்த்த இடத்தில் தனியாக பேச வேண்டும் என்று அந்த பெண்ணோடு சென்றவன். அவளது காதல் கதையையும் அவர்கள் வீட்டில் அவள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதையும் கேட்டு, அவளது காதல் கை கூடுவதற்காக உதவி செய்து கொண்டிருக்கிறான்.


     இதோ மணப்பெண் மகிமாவின் குடும்பத்தினர் தங்கள் உறவினர்கள் புடை சூழ, கையில் உருட்டு கட்டையோடு ரிஜிஸ்டர் ஆபீஸினுள் நுழைந்து கொண்டிருக்கின்றனர்.


   அவர்களுக்குப் பின்னால் தனது மகனை காப்பாற்ற அர்ஜுனின் தாய் தந்தையரான கிருஷ்ணனும் விஜயலட்சுமியும் வேகமாக வருகிறார்கள்.


    "யோவ் உனக்கு என் தங்கச்சியை பிடிக்கலைன்னா அதோட விட்டிட  வேண்டியது தானே, அதை விட்டுட்டு இப்படி மாமா வேலை பார்த்துட்டு இருக்க.


    அவ காதலிச்ச பையனோட சேர்த்து வைச்சு ஊர்க்காரங்க உறவுக்காரங்க முன்னாடி எங்களை தலை குனிஞ்சு நிற்க வெச்சுட்டியேடா?


  அவளை கூட விட்ருவோம், ஆனா இப்படி எங்க குடும்ப மானத்தை வாங்குன உன்ன விடவே மாட்டேன் டா."


    என்று கூறியபடி மகிமாவின் அண்ணன் அவனை நோக்கி உறவுகளோடு தாக்க வர, அவர்களுக்கு இடையே கேமராவை பிடித்த படி வந்து நின்றவர்கள், தொடர்ந்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினர். 


     கோபத்தோடு தாக்க வந்தவர்கள் தங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று யோசிக்கும் முன்பே, மைக் பிடித்த மாடன் மங்கை ஒருத்தி பேசத் தொடங்கினாள்.


     "நீங்க இப்ப நேரடியா பார்த்துட்டு இருக்கிறது ஆளும் கட்சி  எம் எல் ஏ கேன்டிடேட்டா அறிவிச்சிருக்க மிஸ்டர் காசிநாதனோட ஜாதி வெறியைத் தான்.


     தன் பொண்ணு வேற மதத்தை சேர்ந்தவனை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதை தாங்க முடியாம, அவங்களை ஆணவ கொலை செய்ய முயற்சி செய்யறாங்க.


     அவங்களை சேர்த்து வெச்ச நண்பர்களை கொல்ல உறவுக்காரங்க மற்றும் அடியாட்களோடு வந்திருக்காங்க.


     இதையெல்லாம் பார்த்துகிட்டு இன்னும் போலீஸ் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு? இவங்களோட முகத்தை எல்லாம் பாருங்க மக்களே, அவங்களோட ஜாதி வெறி அப்படியே தெரியுது.


    கேமரா மேன் எல்லாத்தையும் ஜூம் பண்ணுங்க நேரடி டெலிகேஸ்ட் தானே போய்கிட்டு இருக்கு."


    அவ்வளவு தான் பெண்ணின் குடும்பத்தை தவிர மற்ற உறவுகள் அனைத்தும் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு, சிதறியபடி அந்த கட்டிடத்தை விட்டு வெளியே போய் விட்டனர்.


   சிறிது நேரத்தில் போலீஸ் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி தம்பதிகளை பாதுகாப்போடு வெளியே அனுப்பி வைத்தனர்.


   அப்போது அர்ஜுனை நோக்கி வந்த அவனது தாய், அவன் முதுகில் அடிக்க தொடங்கினார்.


    "மலை மாடு மலை மாடு எப்ப பாரு இந்த மாதிரி பிரச்சனையை இழுத்துகிட்டு வர்றதையே வேலையா வச்சிருக்கே.


    ஏண்டா எங்க உசுர வாங்கற? மொட்டை பையனா சுத்தறியே அதோட பார்க்குற பொண்ணுங்க பின்னாடியே போய் லவ்வு லவ்வுன்னு அலையிறியேன்னு, ஒரு புள்ளைய பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைச்சா, எங்களை ஏன் தான் இப்படி உசுர வாங்கற?


    அப்படி தான் போன முறை பொண்ணு பார்க்க போனப்போ, அந்த வீட்டு பாத்ரூம் செவுரு வழியா எகிரி குதிச்சு அப்படியே வெளியே ஓடிட்டே.


    நாங்க தான் அதை இதை சொல்லிட்டு அங்கிருந்து வெளிய வர வேண்டியதா போச்சு. இப்ப இதோ இவங்க வீட்ல உன் மூஞ்சியையும் உன் வேலையையும் ஒத்துக்கிட்டு அவங்களா சரின்னு சொன்னாங்க.


    அப்படியும் அந்த பொண்ணுக்காக இந்த மாதிரி ஒரு வேலைய பார்த்து எங்களை தலை குலைய வச்சுட்டியேடா?


    உனக்கெல்லாம் கடைசி வரைக்கும் பொண்ணே செட்டாகாது டா, அப்படியே உன் பிரண்ட்ஸோடவே போய் தொல, அகழ்வாராய்ச்சி சிலையை தோண்டனும்னு அப்படியே ஓடிடு, வீட்டு பக்கம் வந்த விளக்கமாறு பிஞ்சிடும்.


    நீங்க என்ன அவன் முகத்த முகத்த பார்த்துகிட்டு இருக்கீங்க? கிளம்பி வாங்க உங்க அருமை புள்ள எப்படியும் வீட்டுக்கு தான் வருவான். 


  எப்படியும் இவன் தான் கை காசு போட்டு இங்க அவசர அவசரமா ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு தயார் பண்ணி இருப்பான்.  காசு இருந்தா அவன் கையில கொடுத்துட்டு வாங்க.


    இல்லாட்டி கடன்க்காரங்க நம்ம வீட்டு வாசல்ல தான் வந்து நிற்பாங்க. துரைக்கு வாய்விட்டு கேட்கறதுக்கு அவ்வளவு சங்கடம், நா முன்னாடி போறேன் சீக்கிரமா வாங்க."


  அவர் கோபமாக அங்கிருந்து செல்ல தனது தந்தையின் தோள் மீது கை போட்டவன்,


    "என்ன தகப்பா, குடியிருந்த கோயில்  வழக்கத்தை விட அதிகமா சூடா இருக்க மாதிரி தெரியுது. நான் கொஞ்சம் அதிகமாவே வேலையை காட்டிட்டனோ?"


   தனசேகர் அவசரமாக தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து மகனின் கைகளில் திணித்தவர்,


    "நல்ல சிறப்பான வேலை செஞ்சுட்ட டா  மகனே, உன்னால இனி ஒரு வாரத்துக்கு உங்க அம்மா இதை சொல்லியே என்னை திட்டுவா.


    சும்மாவே உங்க அம்மாக்கு என்னைய திட்டுறதுக்கு காரணம் கேட்க வேண்டாம், இப்போ பெத்து வெச்சிருக்கீங்க பாரு இப்படியொரு புள்ளையைன்னு அர்ச்சனை பண்ண தொடங்குவா.


     என்னமோ எனக்கு மட்டுமே சம்பந்தம் இருக்கிற மாதிரி சொல்லி சொல்லி திட்டுவா டா. தயவு செஞ்சு அடுத்த  எக்ஸ்பிரிமெண்டுக்கு கொஞ்சம் கேப் விடுடா, அப்பாவால முடியல."

Saturday, October 12, 2024

அர்ஜுனனின் அல்லிராணி - அத்தியாயம் - 02




 அத்தியாயம் 2


    காரை ஒட்டிக் கொண்டிருந்த வைஷ்ணவியின் மனதில் பல சிந்தனைகள், ஏன் மனிதர்கள் இப்படி பணம் பணம் என்று மனதை மறந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நிம்மதியான வாழ்க்கைக்கு  மனப்பொருத்தம் அவசியம் அல்லவா...!


     இங்கு பணப் பொருத்தத்தை வைத்தல்லவா புனிதமான திருமண பந்தத்தை எடை போடுகின்றனர்... 


     இது ஒன்றும் முதல் முறையல்ல, வரும் வரன்கள் அத்தனையும் இதே போன்று ஏதோவொரு விதத்தில், பணத்தை மட்டுமே குறியாக கொண்டு பேசுவதை கேட்கும் போது, அவள் மனதிற்கு திருமணம் என்ற வார்த்தையே எட்டிக்காயாக தோன்றத் தொடங்கி விட்டது.


    இப்படி அவள் சிந்தித்தபடியே காரை ஓட்டியபடி வந்து கொண்டிருந்த வேளையில், ஒரு திருப்பத்தில் இளம் ஜோடி இருவர் அவளது காருக்கு முன்பு வந்து விழுந்தனர். 


   "மேடம் ப்ளீஸ் மேடம் எங்களை நிறைய பேர் துரத்திட்டு வராங்க, எங்களை கொஞ்சம் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல ட்ராப் பண்ண முடியுமா?"


   அவன் கூறியதில் இருந்தே ஏதோ காதல் பிரச்சனை என்று புரிந்து கொண்டவள்,


    "சரி பின்னாடி ஏறுங்க."


    அவர்கள் காரினுள் ஏறிய பிறகு கார் ரிஜிஸ்டர் ஆபீஸை  நோக்கி பயணிக்க, பின்னால் அமர்ந்திருந்த அந்த இளம் பெண் அழுதபடியே புலம்ப ஆரம்பித்தால்.


     "ஐயோ போச்சு என் அப்பாவும் அண்ணனும் வலை போட்டு தேட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க கண்ணுல ரெண்டு பேரும் மாட்டிணோம்னா வெட்டி பொலி போட்டுடுவாங்க, கல்யாணம் நடக்க சான்ஸே இல்ல."


     "கவலைப்படாதே அப்படி எதுவும் நடக்காது கண்டிப்பா இந்த கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கும்."


     "உங்களுக்கு அவங்களை பத்தி சரியா தெரியாது, கண்டிப்பா அவங்க கண்ணுல ரெண்டு பேரும் மாட்டினா கொன்னு போட்டுட்டு தான் மறுவேலையே பார்ப்பாங்க."


   "அப்படி கொன்னா கொன்னுட்டு போட்டுமே என்ன பார்க்கற, உருகி உருகி லவ் பண்ணும் போது செத்தாலும் ஒட்டுக்கா தான் சாவோம்னு பேசின டயலாக் எல்லாம் நியாபகம் இல்ல?


    அப்படி டயலாக் மட்டும் பேசினா பத்தாது அதை கடைசி நேரத்தில் உபயோகமாய் யூஸ் பண்ணிக்கனும்.


    பயப்படாதே உங்க அண்ணா அப்பறம்  அப்பாவால எந்த பிரச்சினையும் வராது, அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு தான் வந்திருக்கேன்.


     எப்படியும் என்னோட கார் என்னோட பிரண்ட்ஸோட காரை அவங்க டிராக் பண்ணிட்டு இருப்பாங்க. அதனால தான் என் வண்டில வராம இப்படி இன்னொருத்தரோட வண்டியில போயிட்டு இருக்கோம்.


   கண்டிப்பா இவங்க கார்ல இருக்கறதால அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராது. கல்யாணம் மட்டும் முடிஞ்சிருச்சுன்னா அவங்களால எதுவுமே பண்ண முடியாது.


   அப்புறம் இன்னொரு விஷயம் கல்யாணத்துக்கு அப்பறம் சொத்து வேணும் அது இதுன்னு அந்த வீட்டு பக்கம் மட்டும் போற வேலையே இருக்க கூடாது.


    அஞ்சு காசா இருந்தாலும் சொந்த உழைப்பில் இருக்கணும் புரிஞ்சுதில்ல."


  காரின் நடுவில் உள்ள கண்ணாடி வழியாக பேசிக் கொண்டிருந்தவனை பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவிக்கு அவன் இங்கிருக்கும் மனிதர்களிளேயே புதிதாக தெரிந்தான்.


    தன் காதலியின் மீது எவ்வளவு காதல் இருந்தால் இப்படி பேசிக் கொண்டிருப்பான் என்றும் தோன்றியது.


    ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் நுழைந்த போது அந்த பெண்ணை அவள் தோழிகள் சூழ்ந்து கொண்டு அழைத்துச் செல்ல, அவனோ முன்புறமாக வந்து இவளுக்கு நன்றி கூறிவிட்டு நடக்கத் தொடங்கினான்.


   "ஹலோ ஹுரோ சார்."


    வைஷ்ணவியின் அழைப்பில் திரும்பி பார்த்தவன் புரியாமல் விழிக்க,


    "எக்காரணம் கொண்டும் உங்க குணத்தை மட்டும் மாத்திக்காதீங்க, இப்படி நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துக்கற குணம் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வராது. சுத்தி இருக்கிறவங்களுக்காக உங்களோட சுயத்தை இழந்துராதீங்க."


     அவனைக் கண்டு புன்னகைத்தபடியே தனது காரோடு ரிஜிஸ்டர் ஆபீஸ்சை விட்டு வெளியேறினாள் வைஷ்ணவி தேவி. 


     அவள் மறைந்த அடுத்த நிமிடம் அவனது நண்பர்கள் அவனை ரவுண்டு கட்டிக் கொண்டு முறைக்கத் தொடங்கினர்

அர்ஜுனனின் அல்லிராணி - அத்தியாயம் - 01

 



அத்தியாயம் - 01

 

       பிரபலமான அந்த காபி ஷாப்பில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஆடவன் பேசுவதை பல்லை கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி தேவி. 


     குடும்பத்தார்களின் முன்னிலையில் பொது இடத்தில் வைத்து அவளுக்கு பெண் பார்க்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.


    சுற்றி தனது குடும்பத்தார் மட்டும் அங்கு  இல்லை என்றால் அவன் பேசும் பேச்சிற்கு, வைஷ்ணவி  நிச்சயமாக அவனது மூக்கை உடைத்திருப்பாள். 


    "ஆமா உனக்கு எவ்வளவு மணி நேரம் வொர்க்கிங் ஹவர்ஸ்? சைக்கார்டிஸ்ட்டா இருக்கறதால எப்படியும் ஒரு பேஷன்ட்க்கு ஐஞ்சாரு சிட்டிங் போடுவாங்க இல்லையா?


    ஒரு சிட்டிங்க்கு மருந்து மாத்திரை எல்லாம் சேர்த்து மூனாயிரம் கிட்ட வருமா?


     எப்படியும் சொந்தமா ஒரு ஹாஸ்பிட்டல்  உங்களுக்கு தேவைப் படாது, சோ மார்னிங் ஒன்னு ஈவினிங் ஒன்னுன்னு இரண்டு ஹாஸ்பிட்டல்ல கூட வொர்க் பண்ணலாம் இல்லயா? அதனால பணமும் நிறைய வரும்.


    என் பிரண்ட் ஐ டீ கம்பெனி தான் வெச்சிருக்கான், அவங்க ஸ்டாப்ஸ்க்கு சிக்ஸ் மன்த்ஸ் ஒன்ஸ் மைண்ட் ரிலாக்க்ஷேன்க்காக கேம்ப் மாதிரி அரேஜ் பண்ணு வாங்க . அங்க இனி உன்னையவே அப்பாயின்ட் பண்ண சொல்லறேன், உனக்கு அது மூலமாகவும்  நிறைய கஷ்டமர்ஸ் கிடைப்பாங்க இல்லையா? அப்பறம்...."


    வந்ததிலிருந்து நிறுத்தாமல் இதே போன்று பணம் ஒன்றை மட்டுமே குறியாக கொண்டு அவன் பேசிக் கொண்டிருக்க, வைஷ்ணவியின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருந்தது.


    சற்று நேரத்தில் பெரியவர்களும் அவர்கள் அருகில் வந்து இருவரின் விருப்பத்தை பற்றிக் கேட்க, சந்துருவே விரைவில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று மறுமொழி கூறினான். 


    ஒரு பேச்சுக்குக்காக கூட வைஷ்ணவியிடம் அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பமா என்று அவனுக்கு கேட்கத் தோன்றவில்லை.


   அதுவே வைஷ்ணவியின் தந்தை சேகருக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.  ஆனால் அவரது மனைவி லீலாவதி அவரின் முக மாறுதலை கூட கவனிக்காமல் திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று மணமகன் வீட்டாரோடு பேச ஆரம்பிக்க,


    "ஒரு நிமிஷம் ம்மா  இன்னும் நீங்க என்கிட்ட இந்த கல்யாணத்துல சம்மதமான்னு ஒப்பீனியன் கேட்கவே இல்ல?"


   " இதுல கேக்குறதுக்கு என்ன இருக்கு வைஷு? கண்ணுக்கு நிறைஞ்ச மாப்ள, கை நிறைய சம்பாத்திக்கிறாரு, நல்ல கௌரவமான குடும்பம்."


   "லீலா பணமும் அழகும் எப்பவும் வாழ்க்கை பூராவும் கூட வரப் போறதில்லை.  வாழப் போறது வைஷு தான், அதனால அவள பேச விடு, நீ சொல்லுமா."


    தனது தந்தைக்கு புன்னகையை பதிலாக கொடுத்தவள் சந்துருவை நோக்கி திரும்பினாள்.


    "மிஸ்டர் சந்துரு நீங்க உங்க வாழ்க்கைக்கான ஒரு துணையை தேடி இங்க வரல, உங்க பொருளாதார நிலையை உயர்த்தரதுக்கு தொழில்முறை பார்ட்னரை தேடி வந்திருக்கீங்க.


     நிச்சயமா உங்களுக்கான துணையா அங்க என்னால நிக்க முடியாது, ஏன்னா நான் தேடிட்டு இருக்கிறது என் மனசைப் பார்த்து வர்ற வாழ்க்கை துணையை தான்,  சோ சாரி எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல."


  ஏற்கனவே வைஷ்ணவியின் அன்னை பேசிய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அவளது தந்தை பேசிய விதத்திலேயே கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த சந்துரு, வைஷ்ணவி பேச்சிய பேச்சில் அவமானத்தால் முகம் சிவந்து போனான்.


   "அப்பா பணம் ஒன்னை மட்டுமே முக்கியமா நினைச்சு பேசறவங்க, சுயநலத்தோட செயல்பட்டு தன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு கஷ்டத்தை மட்டும் தான் கொடுப்பாங்கன்னு, நீங்க சொல்லி இருக்கீங்க இல்ல . இவர் வந்ததிலிருந்து அந்த பணத்தை பத்தி மட்டுமே தான் பேசிட்டு இருக்காரு. 


    இவருக்கு லைஃப் பார்ட்னர் தேவையில்ல ப்பா, அவரோட தொழிலுக்கு பினான்சியல் லெவல்ல அவருக்கு உதவியா இருக்கற, பார்ட்னர் தான் தேவை.


   கண்டிப்பா என்னால அப்படி இருக்க முடியாது. நான் செஞ்சது சரிதானே ப்பா?"


   அவளது தந்தை பெருமையாக அவள்  தலையை தடவி விட, அவளிடம் கோபமாக பேச வந்த அவள் அம்மாவை தடுத்து நிறுத்திய வைஷ்ணவியின் தந்தை சேகர்.


   "சரிடா குட்டிமா உனக்கு ஹாஸ்பிட்டலுக்கு  லேட் ஆச்சு நீ கிளம்பு, நாங்க பார்த்துக்கறோம்"


    "ரொம்ப தேங்க்ஸ் ப்பா."


    யாரையும் கண்டு கொள்ளாமல் தனது கை பையோடு, பார்க்கிங்கில் இருந்த காரை நோக்கி நடக்கத் தொடங்கினாள் வைஷ்ணவி தேவி

Friday, October 4, 2024

[Chapter Name] அத்தியாயம் - 01

 "நான் சொல்றதை கேட்கமாட்டீங்களா நீங்க? அப்படி என்ன கட்டாயம் அங்க போய் ஆகணும்னு, சும்மா பிரண்டு பொண்ணோட கல்யாணம் போகணும்னு என்னை டென்ஷன் பண்ணாதீங்க, பிரெண்டே போய் சேர்த்துட்டார். இனி நீங்க போனா என்ன போகலைனா என்ன? யார் உங்களை கேட்க போறாங்க?"என்று அந்த வீட்டின் ஹாலில் நின்று சத்தம் போட்டு கொண்டிருந்தார் பிரேமா. அந்த வீட்டின் குடும்ப தலைவி.



"சரோஜா வீடு தேடி வந்து பத்திரிகை வச்சு கல்யாணத்துக்கு வந்துருங்கன்னு  அழைச்சிருக்கு பிரேமா, நான் போய் தான் ஆவேன். நாம கஷ்டப்படுற நிலமைல  அவனோட நிலத்தை வித்து அவன் குடுத்த அந்த பணத்தோட உதவியால தான் இப்போ நம்ம இந்த நிலைமையில இருக்கனும். நம்ம கொஞ்சம் நல்லாருக்கோம்னு பழசை மறக்க கூடாது. உனக்கு வர இஷ்டம் இல்லனா நீ வர வேணாம், இருந்துக்கோ நான் போய் தான் தீருவேன்"என்று பதிலுக்கு அவரும் சற்று தன்மையாகவே எடுத்துரைத்தார் ஆனந்தன்.அப்போதும் அவர் சம்மதிக்கவே இல்லை.



"உங்களுக்கு புரியுதா இல்லையாங்க ஏற்கனவே உடம்பு முடியாம இருக்கீங்க? அவ்ளோ தூரம் ட்ராவெல் பண்ணி உங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா நாங்க என்ன பண்ணுவோம்?"என்று அவர் மேலும் என்று மூக்கை உறிஞ்சினார்.



நான் தனியா போகல,பசங்களை கூட்டிட்டு போறேன்" என்றவர்  அதுவரை அவர்களின் சண்டையை தலையில் கைவைத்து பார்த்து கொண்டிருந்த அவரின் இளைய மகன்கள் மித்ரனையும் நித்தினையும் பார்க்க  , தந்தையின் பார்வை தங்களிடம் திரும்புவதை உணர்ந்தவர்கள் அன்னையிடம் திரும்பி "ம்மா நாங்க காலேஜ் போய்ட்டு வரோம். டைம் ஆகிடுச்சு, எக்ஸாம் வேற இருக்கு"என்றவாறே ஓட்டமும் நடையுமாக வாசலை நோக்கி ஓடிய இருவரும் புருவம் சுருக்கி ஆராயும் பார்வையுடன் அவர்களை பார்த்தவாறே  கம்பீரமாய் நடந்து வந்த தமையனை கண்டதும் அவர்களின் கால்கள் பின் வாங்கியது சற்றே...


ஆனந்தனின் இதழ்கள் "ஆதர்ஷ்"என்று முனுமுனுத்தது.


"எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்?"என்று அவர்களை நோக்கி வினா தொடுக்க...


"அண்ணா அது காலேஜ் எக்ஸாம் இருக்கு, டைம் ஆகிடுச்சு"என்று மித்ரன் தாயிடம் கூறியது போலவே அடித்து விட, அதை கேட்ட ஆதர்சன் "அப்படியா சண்டேஸ் கூட எக்ஸாம்ஸ் வைக்கிறாங்களா என்ன... அதுவும் காலைல ஏழு மணிக்கு ?"என்று புருவமுயர்த்தி சற்றும் பதறாமல் நிதானமாய் கேட்க, என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் விழித்தவர்கள்  தொங்கிப்போன முகத்துடன் சோபாவில் சென்று அமர்ந்து விட்டனர்.


ஆதர்ஷன் ஆனந்தன், பிரேமாவின் மூத்தமகன்.இருபத்தி ஏழு வயது ஆனந்தனின் கார்மெண்ட்ஸ் தொழில் முழுவதையும் பார்த்துக்கொள்கிறான். அவன் எதுக்கு முடிவுகள் எப்போதும் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருக்கும். பெற்றோர் சொல் தட்டாதவன்.மித்ரன், நித்தின் இரட்டையர்கள் கல்லூரி முதல் வருடம் படிக்கும் மாணவர்கள். இவர்களுக்கு ஒரு மகள் ராகினி திருமணம் முடிந்து கணவருடன் இதே ஊரில் இருக்கிறாள்.



மூத்தமகனை கண்டதும் சற்று தெம்பு வர பெற்றவர் "பிரேமா நான் ஆதர்ஷனை கூட்டிட்டு போய்ட்டு வந்துறேன்"என்றவர் மகனிடம் வந்து "ஆது கண்ணா அப்பாவோட குமாரபாளையம் வரைக்கும் போலாம் கூட வர்றியா?"என்று கேட்க, அவர் கூறிய ஊரின் பெயரை கேட்டதும் அவனுக்கு உள்ளுக்குள் சாரல் அடித்தது.


பொள்ளாச்சியில் இருந்து சிறு தொலைவில் உள்ள ஊர் அது, அது தான் ஆனந்தனுக்கும் சொந்த ஊர். ஆதர்ஷனுக்கு மிகவும் பிடித்த இடம் அது தான். தொழிலுக்காக அவர் ஈரோட்டுக்குக்கு இடம் மாறினாலும் அவருக்கு பிரியமான ஊர் அது. ஆதர்ஷனின் பதினைந்து வயது வரை அங்கு தான் இருந்தனர். அவன் அவ்வப்போது அங்கு சென்று வருவான் அவனின் உடமையும் உயிரும் அங்கு தான் இருந்தது. தந்தை கேட்டதும் அவன் தலை தானாய் ஆடியது.


பிரேமா "அவன் எதுக்கு? ஏதோ தொழில் விஷயமா ஊருக்கு போய்ட்டு ஒரு வாரம் கழிச்சு புள்ள இப்போ தான் ஊருக்கு வரான், அவனுக்கு ஓய்வு வேண்டாமா? நான் உங்களையே போக வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். இதுல அவனை வேற கூப்பிடுறிங்களா?"என்று கணவரிடம் எகிறியவர் இளையமகன்கள் இருவரிடமும் திரும்பி "ரெண்டு பேரும் அப்பா கூட போய்ட்டு வாங்க?"என்று கூற, அவர்களோ "நோ மா நாங்க போகல, அந்த வில்லேஜ்க்கு, எங்களுக்கு பிடிக்காது"என்று கோரசாக கூற ஆதர்ஷன் இருவரையும் முறைக்க அவர்கள் தலைகுனிந்தனர்.


ஆனந்தன் "நீங்க ரெண்டு பேரும் அந்த ஊர்ல தான் பிறந்தீங்க நியாபகம் இருக்கா? இப்போ அது வில்லேஜ் ஆகிருச்சு, உங்களுக்கு என்னைக்கும் பழசை மறக்க கூடாது "என்று அவர்களிடம் கூறியவர் மூத்தமகனை பார்க்க "அங்க ஊர்ல ஒரு விசேஷம் கண்ணா போகலாமா"என்று கேட்க, அது என்ன என்று கூட கேட்காதவன் அங்கு செல்லும் மகிழ்வில் "ஒரு டுவெண்ட்டி மினிட்ஸ் பா, குளிச்சுட்டு வந்துறேன்"என்று வேகமாய் ஓட பிரேமா ஒரு வித ஆராயும் பார்வையுடன் அவனின் நடவடிக்கைகளை கவனித்தார்.


அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பி இருந்தனர் தந்தையும் தனையனும்...


வண்டியை ஓட்டிகொண்டிருந்தவன் பொள்ளாச்சிக்கு பக்கம் சென்றதும் "அங்க என்ன பங்க்சன் பா"என்று கேட்க...


ஆனந்தன் "அது சரி ஊருக்கு போற ஆர்வத்துல அது எதையும் கேட்கல, இங்க வந்து கேட்கிற நீ "என்று மகனை செல்லமாக கடிந்து கொண்டவர் "நம்ம வேலு இருக்கான்ல அவன் மக செவ்வந்திக்கு இன்னைக்கு கல்யாணம்"அதைக்கேட்டவனின் முகம் கோபத்தில் ஜொலிக்க, கைகள் அசுர வேகத்தில் வண்டியாய் செலுத்த தொடங்கியது.


ஆனந்தன் "இன்னும் டைம் இருக்கு கண்ணா நீ மெதுவா போ"என்று அவனின் வேகத்தில் அரண்டு போனவராக கூற, வண்டியின் வேகம் மட்டுப்பட்டாலும் அவனின் ஆத்திரம் அடங்கவே இல்லை.



அங்கே...


ஊர் கூடியிருந்தது அந்த திருமணத்துக்காக ஆனால் மணமகளின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.இருபத்திரண்டு வயது பெண்பாவை. மஞ்சள் நிறத்தில் தெய்வீக அழகுடன் ஜொலித்தாள். கிராமத்து அழகி. அவளின் கைகளில் இடுக்கி கொண்டாள் அந்த விஷ பாட்டிலை, யாருக்கும் தெரியாமல்...


மணமகளின் தாய் சரோஜா தான் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டு இருந்தார். ஆனாலும் அவரின் பார்வை வாசலையே தொட்டு மீண்டு கொண்டிருந்தது. பெரிய அளவுக்கு இல்லையென்றாலும் அளவாக அதில் எந்த குறையும் இல்லாமல் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.



அதே நேரம்  சரியாய் உள்ளே வந்தனர் ஆதர்சனும் ஆனந்தனும், சரோஜா ஓடி சென்று இருவரையும் வரவேற்றவர் "அண்ணா எங்க நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சு பயந்துட்டேன், அவரும் இல்லை, நீங்களாச்சும் முன்னாடி நின்னு இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பிங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன், தாமதமாகவும் கொஞ்சம் பயந்து போய்ட்டேன்"என்றவர் ஆதர்ஷனிடம் திரும்பி "என்ன மருமகனே இந்த அத்தையை நியாபகம் இருக்கா, நல்லாருக்கியாயா"என்று நலம் விசாரித்தவர் அவர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வந்து கொடுக்க, ஆனந்தன் "நம்ம வீட்டு கல்யாணம், நாங்க வராம இருப்போமா, வேலு இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்"என்று நண்பனுக்காக வருந்தியவர் சரோஜாவிடம் "நீ போய் ஆகற வேலையை பாருமா, ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லு நானும் செய்றேன்"என்று கூறி எழ...


சரோஜா "அண்ணா இல்லை நீங்க உட்காருங்க, எந்த வேலையும்  இல்லை, நீங்க வந்ததே எனக்கு சந்தோசம்"என்று கூறினார்.


அவரிடம் ஒரு நகைபெட்டியை கொடுத்த ஆனந்தன் "இதுல இருக்கறதை மருமகளுக்கு போட்டு விடுமா"என்று கூற, அவரோ பதறி போனார்.


"அண்ணா இதெல்லாம் வேணாங்க நீங்க வந்ததே போதும்ங்க"என்று கூறி மறுக்க,"என் மருமகளுக்கு நான் சீர் செய்ய கூடாதா, வாய்வார்த்தைக்காக தான் என்னை அண்ணான்னு கூப்பிடுறியா இதை பிடி முதல்ல போய் செவ்வந்திக்கு போட்டு விடு"என்று அனுப்பினார்.


நடந்தவற்றை பார்வையாளனாக மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதர்சன்.


அதற்குள் கூட்டத்தில் ஒரு சலசலப்பு திருமணம் நடக்க இருந்த மண மகன் அடுத்த ஊர் பெண்ணை காதலித்து இருக்க, அவனை மிரட்டி இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து இருந்தனர் அவனின் பெற்றோர், அவன் ஊரை விட்டு ஓடியிருந்தான் தன் காதலியுடன்...


சரோஜா தான் கத்தி தீர்த்தார், மகளின் வாழ்வை நினைத்து, மணமேடைக்கு அருகே அமைதியாய் நின்றிருந்தவளின் மனமோ அத்துணை மகிழ்வாய் இருந்தது அந்த நொடி...


ஆதர்சன் தலை நிமிரவே இல்லை.


ஆனந்தனும், ஊர்காரர்களும் மாப்பிள்ளை வீட்டாருடன் சண்டை போட்டு அவர்களை தொரத்தி விட்டு இருக்க அழுதுகொண்டிருந்த சரோஜா,"ஐயோ அண்ணா பார்த்தீங்களா? என் பொண்ணு நிலைமைய, இனிமேல் இவளை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க என் பொண்ணு இப்படி அவமானப்பட்டு நிக்கிறாளே, இனிமேல் இந்த ஊர்ல நாங்க எப்படி மானத்தோட வாழ்வோம். என் புருஷன் அந்த மகராசன் இருந்திருந்தா என் பொண்ணு இப்படி நின்றுப்பாளா, ஐயா மகாராசா நானும் உன் பொண்ணும் உன் கூடவே வந்துடுறோம், எங்கள கூட்டிகய்யா"என்று அழுதவள், மகளின் கைகளை இழுத்து கொண்டு உள்ளே செல்ல போக, அவர் செய்ய இருந்த விபரீதம் அப்போது தான் புரிய அனைவரும் அவளை தடுத்து நிறுத்தினர்.


அந்த ஊரில் இருந்தா பெரியவரோ "ஏன் தாயி நாங்கல்லாம் இருக்கமே உன்ர மவளை அப்படியே விட்டுருவோமா, இதே மூகூர்த்தத்துல நல்ல பையனா பார்த்து செவ்வந்திக்கு கண்ணாலத்தை முடிச்சு வைக்குறோம்"என்று கூற, ஆனந்தன் நடந்த அதிர்ச்சியில் இருந்தவர் ஒரு நிமிடம் கண்களை மூடி திறந்து "ஆதர்ஷா வந்து மணமேடைல உட்காரு"என்றவரின் குரலில் அவனின் இதயம் தாளம் தப்பி துடித்தது.


செவ்வந்தி நிமிர்ந்து அவனை பார்க்க அவனோ அவளை அனலாக எரித்து கொண்டிருந்தான். அவன் மனம் துடிக்க, 'என்னை மன்னிச்சுடு மைனா' என்று தன் உயிரானவளிடம் மன்னிப்பு வேண்டியவன் வந்து அமைதியாய் அமர்ந்தான் மண மேடையில்..