அத்தியாயம் 6
பிரபலமான அந்த மல்டி ஸ்பெஷல் மருத்துவமனையை சுற்றி மழைச்சாரல்கள் மணல் துகள்கள் போல சிதறிக் கொண்டிருக்க, மருத்துவமனையின் உள்ளே அடை மழை போல் தன் அப்பாவிடம் கத்திக் கொண்டிருந்தான் நம் நாயகன் அர்ஜுன்.
" அப்பாஆஆஆஆ, அம்மாவுக்கு நெஞ்சு வலின்னு சொன்னதால வேலைல இருந்து பதறி அடிச்சு ஓடி வந்திருக்கேன்.
நீ என்னன்னா, இங்க சைக்காடிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் நீ போய் பாருங்கற?
லூசாப்பா நீ? உனக்கு பிள்ளையா பிறந்ததுக்காக என்னையும் பைத்தியம்னே நெனச்சிட்டியா?"
"டேய் மகனே முப்பது வயசுக்கு மேல ஆகியும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்க
இதுக்கு உன்ன வேற டாக்டர் கிட்ட தான் காட்டணு......"
"யோவ் தகப்பா..."
" அட இருடா, அப்படி செஞ்சா பத்து குழந்தை பெத்த என் தாத்தனோட பரம்பரைக்கே கேவலம், அதனால தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்."
"அதுக்குன்னு சைக்காடிஸ்ட் கிட்டயா கூட்டிட்டு வருவ?"
"அட இது உங்க அம்மா ஏற்பாடு டா.
ஒருவேளை நீ இதுக்கு ஒத்துக்கலன்னா, அப்பனும் புள்ளையும் வீட்டுப் பக்கமே வந்துடாதீங்கன்னு விரட்டி விட்டுட்டா டா."
"என்னால எல்லாம் உள்ள போக முடியாது போப்பா."
என்று கூறிவிட்டு அவன் வாசலை நோக்கிச் செல்ல,
"டேய் டேய் என் தங்கம் இல்ல, வயசான காலத்துல என்னால வீதியில எல்லாம் தங்க முடியாது டா . இந்த அப்பாவுக்காக ஒரே ஒரு தடவை போயிட்டு வாடா, என் ராஜா இல்ல."
அர்ஜுன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே,
"போய் தொலையறேன். ஆனா இந்த ஒரு தடவை மட்டும் தான்"
" சரிப்பா அடுத்து இந்த மாதிரி எதுவும் நடக்காம நான் பார்த்துக்கறேன். இதோ உன்னை தான் கூப்பிடுறாங்க உள்ள போ நான் வெளியவே இருக்கேன்."
தன் தந்தையை முறைத்துக் கொண்டே கதவைத் தட்டி அனுமதி பெற்று கொண்டு உள்ளே சென்றான் அர்ஜுன்.
உள்ளே டாக்டர் உடையுடன் எளிமையின் உருவமாக அப்பழுக்கில்லா தேவதையாக, ஆச்சரியப் புன்னகையோடு அவனை வரவேற்றாள் வைஷ்ணவி தேவி.
"வாங்க உள்ள வாங்க ப்ளீஸ் டேக் யுவர் சீட்."
ஒவ்வொரு முறையும் இந்த பெண்ணை இப்படி இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்க வேண்டி உள்ளதே என்று, சிறிய சங்கடத்துடன் தான் உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.
" ஏன் சார் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க ,பி ப்ரீ.
எப்படி மத்த டாக்டர்கிட்ட உங்க உடம்புல உள்ள பாதிப்புகளை சொல்லி குணப்படுத்திக்கறீங்களோ, அது போலத் தான் உங்க மனசுல ஏற்படற பாதிப்புக்கு எங்களால முடிஞ்ச சொல்யூஷன்ஸ் கொடுக்கிறோம் அவ்வளவு தான்.
என்னை டாக்டரா பார்க்காம ஒரு பிரண்டா பாருங்க. இப்ப சைக்காடிஸ்கிட்ட வர்றதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. உங்க மன அழுத்தத்தை குறைக்கிறது தான் எங்க வேலை."
"சாரி மேடம் திடீர்னு வீட்ல இப்படி ஏற்பாடு பண்ணிட்டாங்க அது தான் கொஞ்சம்..... அதுக்காக உங்க வேலைய பத்தி எல்லாம் நான் எதுவும் தப்பா நினைக்கல."
" முதல்ல நான் தாங்க உங்ககிட்ட சாரி கேட்கனும், என்னால தான் அன்னைக்கு உங்க மேரேஜ் நின்னுடுச்சு அதோட உங்களுக்கு கெட்ட பேர் வர்றது போல ஆகிடுச்சு, ரியலி சாரி மிஸ்டர் அர்ஜுன்."
" அட அதை விடுங்க மேடம், நீங்க என்ன தெரிஞ்சா செஞ்சீங்க? நான் அன்னைக்கே சொன்னேனே, எப்படி அந்த பொண்ணை வேண்டாம்னு சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன், நீங்க வந்ததால தானா அந்த சம்பந்தம் நின்னுடுச்சு அந்த விஷயத்தில நான் ரொம்ப ஹேப்பி தான்."
"இல்லைங்க நீங்க உங்க ப்ரெண்ட்டோட லவ் மேரேஜ்க்கு ஹெல்ப் பண்ணியிருக்கீங்க, ஆனா நான் அதை உங்க மேரேஜ்க்காகன்னு தப்பா நினைச்சுகிட்டேன்."
இதழ்கள் விரிய புன்னகைத்தவனோ,
"இப்பவும் நீங்க தப்பா தான் நினைச்சுட்டு இருக்கீங்க. அந்த பொண்ணு என் ப்ரெண்ட் இல்ல, ஆக்ச்சுவலா நீங்க என்னை பார்க்கறதுக்கு இரண்டு நாள் முன்னாடி தான் நான் அவங்களை பார்த்தேன்."
வைஷ்ணவி புரியாமல் விழிக்க,
"அவங்களை பொண்ணு பார்க்கப் போனப்ப தான் முதல் முதலா பார்த்தேன். பொண்ணை பிடிச்சிருக்கான்னு என்கிட்ட கேட்டுட்டு, நான் சரின்னு சொன்னதும் அவங்க குடும்பத்துக்கும் என்னை ரொம்ப பிடிச்சிட்டதாகவும் அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சுகலாம்ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.
ஆனா அந்த பொண்ணு கிட்ட இந்த கல்யாணத்துல சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்கல, சோ நானா அதை தெரிஞ்சுக்க விரும்பி அவங்ககிட்ட தனியா பேசனும்னு சொன்னேன்.
அப்ப தான் அவங்க லவ் பிரச்சினை காரணமா ஹௌஸ் அரஸ்ட்ல இருக்கறது தெரிய வந்தது. சரி போற போக்குல ஒரு சோசியல் சர்வீஸ்ன்னு நினைச்சு செஞ்சது தான் இந்த அவசர கல்யாணம்."
அவனை ஆச்சரியமாக பார்த்தவள்,
"ஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல, இது கொஞ்சம் டூ மச் தான்."
"என்னங்க பண்றது சூதுவாது தெரியாத அக்மார்க் நைன்ட்டீஸ் கிட்டாவே வளர்த்துட்டேன்."
அவனை முறைத்தவள்,
"அப்போ 2கே கிட்ஸ்ஸான நாங்க என்ன சூதுவாது கூடவே வளர்ந்துக்கிட்டு இருக்கமா?"
"அய்யய்யோ நான் அப்படி சொல்ல வரலைங்க, எதோ எதார்த்தமா பேசினேன் அவ்வளவு தான்
பாருங்க நான் பேச வாயை திறந்தாலே இப்படி பிரச்சனை தான் ஆகுது. அப்புறம் எப்படி கல்யாணம் நடக்கும்."
" மிஸ்டர் அர்ஜுன் உங்க பேரன்ட்ஸ் உங்களை பத்தி நிறைய சொல்லி இருக்காங்க. அதுல ஒரு விஷயம் பத்தி நீங்க கிளியரா சொல்ல முடியுமா?
ஏன் நீங்க ஒவ்வொரு முறையும் கல்யாண ஏற்பாட்டை நிறுத்திட்டே இருக்கீங்க. யாரயாவது காதலிக்கறீங்களா?இல்ல வேற எதுவும் பிரச்சனை யா? ஐ மீன் உங்க உடல் ரீதியா?"
"ஐயய்யோ அப்படியெல்லாம் எதும் இல்லைங்க, ஏற்கனவே எனக்கு கல்யாணம் செட் ஆக மாட்டேங்குது, நீங்க இப்படி ஒரு வெடியை கொளுத்திப் போட்டா அவ்வளவு தான், அப்பறம் நான் கல்யாணம் ஆகாமயே சன்னியாசம் வாங்க வேண்டியது தான்"
அவன் சொன்ன தொனியில் வைஷ்ணவி சிரித்து விட்டால், முத்து பற்கள் மின்ன தேவதையாய் சிரிக்கும் அவளை கண் கொட்டாமல் பார்த்திருந்தான் அர்ஜுன்.
" அப்பறம் ஏன் சார் ஒவ்வொரு முறையும் நீங்க வீட்ல அரேன்ஜ் பண்ண கல்யாண ஏற்பாட்டையெல்லாம் கெடுக்கறீங்க ? யாரையாச்சும் லவ் பண்றீங்களா?"
"லவ்வா? அதெல்லாம் எனக்கு செட்டே ஆகலங்க."
" செட்டாகலையா ...? அப்போ ட்ரை பண்ணி பார்த்து இருக்கீங்க, ம்ம்ம் சொல்லுங்க அடுத்து உங்க லவ் ஸ்டோரிய."
"நான் ஸ்கூல் படிக்கும் போது அமுதான்னு ஒரு பொண்ண லவ் பண்ணேங்க.
அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு. அவளுக்காகவே அவ டியூஷன்ல போய் நான் சேர்ந்தேங்க.
ஒரு நாள் நான், என் பிரண்டு அவ எல்லாரும் ஒரே டெஸ்க்குல டெஸ்ட் எழுத உக்கார்ந்தோம்.
அடுத்த நாள் பிப்ரவரி 14 அவளோட சேர்ந்து செலிப்ரேட் பண்ணலாம்னு நினைச்சு, இது தான் நல்ல சான்ஸ்னு ஐ லவ் யூ ன்னு ஒரு பேப்பர்ல எழுதி என் பிரண்டு மூலமா அவளுக்கு பாஸ் பண்ணுனேங்க.
ஆனா அடுத்த நாள் வேலன்டன்ஸ் டே வை அவளும் என் பிரண்டும் தான் ஒண்ணா செலிப்ரேட் பண்ணாங்க."
"என்னங்க சொல்றீங்க?"
"அட ஆமாங்க நான் அந்த பேப்பர்ல ஐ லவ் யூ ன்னு மட்டும் தான் எழுதி இருந்தேன், என் பேரை எழுதவே இல்ல.
சோ என் ஃப்ரெண்டு தான் இந்த லெட்டரை கொடுத்ததா அந்த பொண்ணு நினைச்சிகிடுச்சு."
"அய்யய்யோ அப்புறம்?"
"அப்புறம் என்ன இந்த பொண்ணு உனக்கு ஏத்த அல்லிராணி இல்லடா அர்ஜுனான்னு அந்தப் பொண்ணையும் பத்தோட பதினொன்னா என்னோட தங்கச்சி லிஸ்ட்ல சேத்துகிட்டேன்."
"ஏங்க அதெல்லாம் பப்பி லவ்ங்க. அதோட இந்த காதல்ல மீடியேட்டரே இருக்கக் கூடாது. எதுவானாலும் ஸ்ட்ரைட்டா அந்த பொண்ணுகிட்டயே நீங்க சொல்லி இருக்கணும்."
"அப்படி தாங்க நானும் நெனச்சு ஒர்க் பண்ற இடத்துல புதுசா வந்த ஒரு பொண்ண லவ் பண்ணி, அவகிட்ட ஸ்ட்ரைட்டா நானே என் வாயால லவ்வ சொல்லலாம்னு, டைரி மில்க் சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு அவளை பார்க்க அவ வீட்டுக்கு போனேங்க"
வைஷ்ணவி அதிர்ச்சியில் உறைந்திருந்த தன்னை சுதரித்துக் கொண்டு,
" ஹம்ம்ம் அடுத்த காதலி பேர் என்னவோ?"
"ஷப்னாங்க நார்த் இந்தியன் பட் தமிழ் நல்லா தெரியும்."
" ம்ம்ம், அப்பறம் மேல சொல்லுங்க?"
" நான் போய் காலிங் பெல் அழுத்தினதும் அவ தாங்க வந்து கதவ திறந்தா.
நான் தைரியத்தை வர வழைச்சுகிட்டு அவகிட்ட ஐ ன்னு ஆரம்பிக்கும் போது உள்ள இருந்து ஒரு குழந்தை ஓடி வந்து அம்மான்னு சொல்லி அவ கால கட்டி பிடிச்சிதுங்க.
இந்த குழந்தை யாருதுன்னு கேட்டதுக்கு என்னோட குழந்தை தான்னு சொன்னாங்க ஷப்னா."
"அப்போ அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?"
" இதே கேள்வியை தாங்க நானும் அவகிட்ட கேட்டேன். ஆனா அவ போடா லூசு கல்யாணம் ஆகாம குழந்தை எப்படி வரும்னு சொல்லிட்டு என்ன பார்த்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
அப்புறம் வேற என்ன பண்ண அந்த சாக்லேட்ட அந்த குழந்தை கையில கொடுத்துட்டு நான் அப்படியே திரும்பி வந்துட்டங்க."
வைஷ்ணவிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, கஷ்டப்பட்டு இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தால் பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு,
"அதோட உங்க லவ் ப்ரொப்போஷல்ஷை விட்டிட வேண்டியது தானே, ஏன் சார் உங்களுக்கு பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா?"
"ஆமாங்க எனக்கும் எங்க அப்பா அம்மா மாதிரி காதலோடு கூடிய வாழ்க்கை வாழனும்னு ரொம்ப ஆசைங்க."
"அப்படியா அவங்களை பத்தி சொல்லுங்களேன் கேட்போம்."
"இத பத்தி சொல்லனும்னா ஒரு பிளாஷ்பேக் போகணும் நீங்க ரெடியா...
அச்சோ முறைக்காதீங்க மேடம், பிளாஷ்பேக் கேட்கறதுக்கு தான் நீங்க ரெடியான்னு கேட்டேன்.
என்னோட அம்மா அப்பாக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாளா குழந்தையே இல்லையாம், எங்க அப்பாவோட அம்மா எங்கம்மாவை அதனால ரொம்ப திட்டி, அதையே காரணமா வச்சு வெளிய அனுப்ப பார்த்திருக்காங்க.
ஆனா எங்கப்பா அம்மாவுக்கு ரொம்ப சப்போர்ட் டா இருந்திருக்காரு. நிறைய டாக்டர்ஸ் கிட்ட காமிச்சு, ரொம்ப வருஷம் கழிச்சு தான் எங்க அம்மாக்கு நான் பிறந்தேன்.
நான் எங்க வீட்டில ஒரே பையங்க. நான் பிறக்கும் போது அம்மாக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டேனாம்.
அதனால எங்க அப்பா என்னோட போதும்முன்னு நிறுத்திட்டாரு. எங்க அம்மா மேல அவ்வளவு லவ்வு.
ஆனா என் பாட்டி மறுபடியும் இதையே காரணமாக வைச்சு எங்க அம்மாவ எங்க அப்பா கிட்ட இருந்து பிரிக்கனும்னு நினைச்சாங்க.
ஆனா என்னோட அப்பா குடும்ப கட்டுப்பாடு பண்ணிகிட்டு வந்து நின்னு, இந்த ஜென்மத்துல இவ தான் என் பொண்டாட்டின்னு சொல்லி இருக்காரு.
இவ்வளவு லவ் வச்சிருக்கவங்க எலியும் பூனையும் மாதிரி சண்டை போட்டுக்கிட்டே தான் இருப்பாங்க.
ஆனா அந்த சண்டைல கூட அவங்க அன்பு தான் நமக்கு தெரியும்."
வைஷ்ணவியின் கண்களில் சுவாரசியம் கூடியது.
"ம்ம்ம், அப்புறம்?"
"அப்புறம் என்னங்க இன்னும் அதே தான் தொடர்ந்துட்டு வருது அவ்வளவு தான் கதை முடிஞ்சு போச்சு."
"சரி உங்களுக்குத் தான் லவ் மேரேஜ் செட் ஆகலையே அரேஞ்ச் மேரேஜ் ட்ரை பண்ணலாம் இல்ல, கல்யாணம் செஞ்சுகிட்டு உங்க வைப்பையே காதலிக்க வேண்டியது தானே? அதுக்காக ஏன் கல்யாணமே வேண்டாமுன்னு சொல்றீங்க?"
"ஐயோ நா கல்யாணம் வேண்டாம்னு சொல்லலைங்க, கல்யாணம் தான் என்னை வேண்டாம்னு பின்னங்கால் பிடரியில பட ஓடிக்கிட்டு இருக்கு."
"புரியலையே?"
"அதெல்லாம் நிறைய பொண்ணுங்க வீட்டுக்கு போய் பஜ்ஜி சுச்சி எல்லாம் சாப்பிட்டாச்சுங்க ஒன்னும் ஒர்க் அவுட் ஆகல. எல்லா பொண்ணுங்களும் சொல்ற ஒரே பதில் நோ மட்டும் தான்"
"ஏன்? எதனால?"
"மோஸ்ட்லி எல்லாரும் என் வேலையை காரணமா வச்சு தான் நோ சொன்னாங்க."
" நான் ஒரு அகழ்வாராய்ச்சியாளர் இது சில பேருக்கு பிடிக்கல சில பேர் புரிஞ்சிக்க முயற்சி பண்ணல.
அவங்களுக்காக என்னோட வேலைய மாத்திக்க முடியாது. இது என்னோட லட்சியம்,சின்ன வயசுல இருந்து எனக்குள்ள நான் கட்டுன கனவு கோட்டை.
மத்தவங்களுக்காக என் வாழ்க்கையோட உயிர்ப்பை இழக்க முடியுமாங்க?"
"பட் ரீசண்டா ஒரு பொண்ண பார்த்து அவங்களை நீங்க தான் வேண்டான்னு சொன்னீங்கலாமே? அதோட நிச்சியம் பண்ணப் போற டைம்ல நீங்க அங்கிருந்து ஓடி போய்ட்டதா சொல்றாங்க."
"அந்தப் பொண்ணு என்னை விட பத்து பதினோரு வயசு சின்னப் பொண்ணுங்க. இத எதிர்த்து கேள்வி கேட்டா எல்லாரும் என்னை வித்தியாசமான பார்க்கறாங்க இது எல்லாம் ஒரு விஷயமான்னு.
அந்த பொண்ணு முப்பது வயச தொடும் போது நா அரை கிழவன் ஆயிடுவங்க.
அவங்க குடும்ப சூழ்நிலைய பயன்படுத்தி குழந்தை திருமணம் பன்ற மாறி தாங்க எனக்கு தோனிச்சு.
அந்த பொண்ண என்னால பொண்டாட்டியா நினைச்சு கூட பார்க்க முடியலங்க.
அதனால தான் எங்க அம்மா பேச்சையும் மீறி கல்யாணத்தை நிறுத்த அப்படி பண்ணினேன்."
"சரிரிரிரி என்ன பார்க்கும் போது உங்களுக்கு எப்படி தோணுது."
"டாக்டர் நீங்க ஏதோ சொல்லறீங்க அது என் காதுல தப்பா கேக்குது."
"காது சரியா தான் வேலை பார்க்குது. உங்க மூளை தான், வேலையே பார்க்க மாட்டேங்குது."
அப்போது அர்ஜுனுக்கு தன் அன்னையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அவன் அதை ஏற்கும் முன்பே வைஷ்ணவி அவன் தொலைபேசியை பறித்துக் கொண்டாள்.
"ஏங்க ஏங்க என்னங்க பண்றீங்க, அச்சோ ஆன் பண்ணிராதீங்க, போச்சு இன்னைக்கு விளக்கமாத்து அடி கன்ஃபார்ம்."
அவள் சிரித்துக் கொண்டே தொலைபேசியை ஆன் செய்தால்,
"ஹலோ அத்தை நான் வைஷ்ணவி பேசுறேன்."
"எது அத்தையா?"
"முதல்ல உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும் அத்தை. என்னோட பிஸி ஷெட்யூல் தெரிஞ்சுகிட்டு ஹாஸ்பிட்டல்லையே பொண்ணு பார்க்குற பங்க்ஷன் வச்சதுக்கு."
"எதே பொண்ணு பாக்குற ஃபங்ஷனா?தகப்பாஆஆஆஆஆ இரு உன்ன வந்து பேசிக்கிறேன்."
"எனக்கு உங்க பையனை ரொம்ப பிடிச்சிருக்கு."
அவளின் இந்த ஒரு வார்த்தையிலேயே அர்ஜுனின் உடல் மட்டும் இங்கு இருக்க, மனதானது பூமியிலிருந்து வானை நோக்கி சிறகில்லாமல் பறக்க ஆரம்பித்தது.
மறுபுறம் தொலைபேசி இணைப்பில் இருந்த அர்ஜுனின் தாய் மகிழ்ச்சியுடன் தொலைபேசியை வைத்துவிட்டு, நாள் குறிக்க ஜோசியர் வீடு நோக்கி செல்ல என்று கல்யாண வேலையில் மும்மரமானார்.
"அத்தை எனக்கு என்னவோ உங்க புள்ளைக்கு என்னை புடிக்கலைன்னு நினைக்கிறேன்."₹
அவருக்கு பிடிக்காத கல்யாணத்தை வற்புறுத்தி நாம செய்ய வேண்டாம். விட்டுடுங்க.”
அவ்வளவு தான் கனவு கோட்டை கண் முன்னே இடிவதை கண்டு கனவுலகில் இருந்து மீண்டு வந்த அர்ஜுன், அவளிடம் இருந்த தொலைபேசியை பிடுங்கிக் கொண்டு, கத்த தொடங்கினான்.
" அய்யய்யோ, அம்மா,.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்கு இவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.
ஹலோ...... ஹலோ அம்மா, நான் பேசறது கேக்குதா?"
தொலைபேசியை உற்றுப் பார்த்த போது தான் தெரிந்தது அது இணைப்பில் இல்லாதது.
அவள் கலகலவென்று சிரிக்க இவன் அசடு வழிந்து கொண்டு நின்றான் அவள் முன்பு.
"எந்த ஊர்ல டாக்டர்ஸ் உங்களுக்கு இவ்வளவு நேரம் உட்கார்ந்து கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க."
" என்னோட அப்பா உங்க அம்மாவுக்கு தூரத்து சொந்தம். உங்க வீட்டில் இருந்து மேரேஜ் ப்ரோபோசல் வந்துச்சு, இஷ்டம் இல்லாம தான் உங்களை பாக்க ஒத்துக்கிட்டேன். ஆனா எனக்கு நெஜமாவே உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு."
"ஏங்க நிஜமா தான் சொல்றீங்களா? இது ஒன்னும் பிராங்க் ஷோ கிடையாதே? சுத்தி எங்கயும் கேமரா ஒளிச்சு வச்சிருகீங்களா? "
"யோவ் இவ்வளவு தூரம் ஒரு பொண்ணு நானே இறங்கி வந்து பிடிச்சிருக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன்.
இதுக்கும் மேலயும் கேள்வியா கேட்டு கொன்னுகிட்டு இருக்க.
நீ எல்லாம் கடைசி வரைக்கும் சிங்கிள் தான், இந்த ஜென்மத்துல மிங்கிள் ஆகவே முடியாது.
நீ எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டய்யா, நீ அதுக்கு சரிபட்டே வரமாட்ட."
அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட, அவளை சமாதானப்படுத்திக் கொண்டே பின்னாலேயே சென்றான் அர்ஜுன் .
மணமேடைதனில் பட்டு வேஷ்டி பட்டு சட்டை சகிதம் மாப்பிள்ளை தோரணையில் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
அவன் பக்கத்தில் மணப்பெண்ணாக முகம் கொள்ளா புன்னகையுடன் நாணம் போட்டியிட தேவதையாக அமர்ந்திருந்தால் வைஷ்ணவி தேவி.
தேவியவள் தம், மனங்கவர்ந்த மன்னவன் திருகரங்களால், பொன் தாலிதனை சொந்தங்கள் புடை சூழ கழுத்தினால் பூட்டிக் கொண்டால்.
எப்படியோ அர்ஜுன் இந்த அல்லிராணியை தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான்.
முற்றும்.
அன்புடன்,
சரண்யா சதீஷ்.